Thursday, April 8, 2010

குட்டி இளவரசர்கள் உலகில்...


சென்னையில் ஒரு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது...

இரண்டு நான்காம் வகுப்பு கான்வென்ட் சிறுவர்கள் அவர்கள் படித்த காமிக்ஸ் பற்றி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டது.


"சந்த்ரு... எனக்கென்னவோ சூப்பர்மேன் ரொம்ப மடையனா இருப்பான்னு தோணுது...?'.

"எப்படிச் சொல்ற..?".

"அவன் தான் பேன்ட் போட்டு அதுக்கு மேல ஜட்டி போட்டிருக்கானே...!".

"அப்படிப் பார்த்தா பேட்மேன் அதைவிட மடையன் தெரியுமா... அவன் பேன்ட் மேல ஜட்டி போட்டு அதுமேல பெல்ட்டும் கட்டிருக்கானே...!".

"அப்ப... ராபின் பேட்மேனை ஃபாலோ பண்றானே... அவன் எவ்வளவு மடையனா இருப்பான்...?".

"ஆனா... எல்லோரையும்விட மகா மடையன் ஸ்பைடர்மேன் தான்...!".

"எப்படிச் சொல்ற..?".

"அவன் தான ஜட்டிய எங்க போடறதுனே தெரியாம... தலைல போட்டுகிட்டு சுத்தறான்...!".

.

.

.

2 comments:

karthikeyan.kg. said...

சிரிக்க கூடாதென முடிவுசெய்து படிக்க ஆரம்பித்து ;இறுதிவரை சிரிக்காமல் ; தலையில் ஜட்டி மாட்டியவனை நினைத்து சட்டென வந்தது சிரிப்பு.

maithriim said...

I was not sure where you were going, until I read the last line :) LOL
amas32

Post a Comment