Monday, April 12, 2010

எங்கள் ஊரு எம்.எல்.ஏ...



எங்க ஊரு எம்.எல்.ஏ-வைப் பார்க்கப் போயிருந்த சமயத்தில் ஒரு பெரிய க்யூ அவரைப் பார்க்கக் காத்திருந்தது.

தொகுதியிலிருந்து வந்து... நீண்ட க்யூவில் நின்று.... மனுக் கொடுத்த ஒரு எதிர்க் கட்சித் தொண்டரை அவர் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

 வந்தவரோ பாவம். குனிந்த தலை நிமிராமல் அத்தனை திட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தார்.

எல்லாத் திட்டுகளையும் முடித்தபின் எம்.எல்.ஏ அந்த தொண்டரிடம் கேட்டார்.

"இருக்கற கோபத்துல... என்னயக் கொல்லலாம்னுகூடத் தோணுமே... அப்படியே நான் செத்துப் போயிட்டாக்கூட... என் சமாதியில வந்தாவது காறித் துப்பணும்னு தோணுமே...!"


அந்த தொண்டர் எம்.எல்.ஏ கோபப்பட்டுவிடுவாரோ என்று பயந்தபடி... மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

"இல்லைங்க ஐயா... இங்கருந்து போனபின்னால நான் எந்தக் க்யூவிலயும் போய் நிக்கறதா இல்லீங்க...!".
.
.
.

No comments:

Post a Comment