Thursday, April 1, 2010

ஏழ்மை என்பது என்ன..?


ஒரு அப்பா நகரத்தில் வாழும் தனது மகன் ஏழ்மையைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஊரைச் சுற்றிக் காட்டிய பின்பு கேட்டார்.

"மகனே.. ஏழ்மை என்றால் என்ன என்பது தெரிந்ததா...?"

மகன் பதில் சொன்னான்.

"நன்றாகத் தெரிந்தது அப்பா...

நம்மிடம் ஒரு நாய்தான் இருக்கிறது. அவர்களோ நான்கு வைத்திருக்கிறார்கள்.

நமது வீட்டில் ஒரு சின்ன நீச்சல் குளம்தான் உள்ளது. இவர்களுக்கோ ஒரு ஆறே இருக்கிறது.

நமக்கு இரவில் வைக்க ஓரிரு விளக்குகள்தான் இருக்கிறது. அவர்களுக்கோ நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நம்மிடம் கொஞ்சம் நிலம் இருக்கிறது. இவர்களோ வயல்களின் சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்.

நமக்கு வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களோ அடுத்தவருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள்.

நாம் உணவை வாங்குகிறோம். அவர்களோ விளைவிக்கிறார்கள்.

நம்மைப் பாதுகாக்க வீடு இருக்கிறது. அவர்களுக்கோ நண்பர்கள் இருக்கிறார்கள்."

மகன் பேசிக் கொண்டே போக தந்தை வாயடைத்து நின்றுகொண்டிருந்தார்.

மகன் தொடர்ந்தான்.

"நன்றி அப்பா... நாம் எவ்வளவு ஏழையாய் இருக்கிறோம் என்று காண்பித்ததற்கு...!".
.
.
.

No comments:

Post a Comment