Friday, April 2, 2010

எல்லாவற்றுக்கும் உண்டு எல்லை...


சாலையில் சிவப்பு விளக்கு விழுந்த பின்பும் கவனிக்காமல் ஜீப்ரா லைனை ஒரு அடி தாண்டி நிறுத்திவிட்டான் அவன்.

இதை எங்கிருந்தோ கவனித்த அந்த ட்ராபிக் போலிஸ்காரர் உடனே ஃபைன் எழுதும் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்துவிட்டார்.

காரை ஓட்டிகொண்டு வந்தவனோ ஆந்திராக்காரன்.

அவன் தெலுங்கில் அவன் 'மனைவி, ஹாஸ்பிடல்,அர்ஜன்ட்' என்று என்னென்னவோ சொல்கிறான்.

நமது 'ஹானஸ்ட் ராஜ்' ட்ராபிக் கான்ஸ்டபிள் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

"அதெல்லாம் தெரியாது... பெனால்டி கட்டியே ஆகவேண்டும்... பேரச் சொல்லு...பேரச் சொல்லு..." என்கிறார்.

அந்த ஆந்திராக்காரன் பேரைச் சொல்ல ஆரம்பித்தான்.

"சார், மை நேம் ஈஸ்... பாதம் கேதாரண்ய பொம்மிராஜு சீதாராமனாஜனேயலு ராஜசேகர ஸ்ரீனிவாசல லக்ஷ்மிநாரயண சிவ வெங்கட சாய்...!".

அவன் சொல்லி முடித்ததும்... நோட்டையும் பேனாவையும் பார்த்துக் கொண்டே ஒரு கணம் யோசித்த நமது ட்ராபிக் கான்ஸ்டபிள் சொன்னார்.

"ஓகே...அவசரம்னு சொல்ற... இந்த தடவை உன்னை விட்டுடறேன்... இனிமே கரெக்டா வண்டிய ஒட்டணும் என்ன...?".
.
.
.

No comments:

Post a Comment