Thursday, August 30, 2012

பச்சைக்கிளி முத்துச்சரம்

நம்ம சிங் முதன்முதலாய் தனது தேங்காய் பிசினஸ் விஷயமாய் பொள்ளாச்சி வந்திருந்தார்.

வந்தவர் சில தென்னந்தோப்பு முதலாளிகளைச் சந்திக்க பொள்ளாச்சியை அடுத்திருந்த ஆனைமலையில் சுற்றிக் கொண்டிருக்கும் போதுதான் தனது வாழ்க்கையிலேயே முதன்முதலாய் ஒரு கிளியைப் பார்த்தார்.

பார்ப்பதற்கு பச்சைப் பசேலென்று கொழுத்திருந்த அந்தக் கிளி ஒரு ஓட்டு வீட்டின் கூரை மேல் உட்கார்ந்திருந்தது.

இதற்கு முன் கிளியை படத்தில் கூட பார்த்தோ கேட்டோ இருக்காத நம்ம சிங் கிளியின் அழகில் கிட்டத்தட்ட மயங்கியே போனார்.

"ஆஹா எவ்வளவு அழகிய பேர்ட் இது.! பச்சைப் பசேலென்று உடல்; செக்கச் சிவந்த அந்த மூக்கு.! இந்த பேர்ட் மட்டும் கிடைத்தால் குழந்தைகள் சந்தோஷப் படுமே... கிராமமே நம்மைப் பார்த்து அதிசயிக்குமே... பஞ்சாபில் நமக்கு பெரிய மரியாதையே கிடைக்குமே.!"

யோசிக்க யோசிக்க நம்ம சிங் வந்த வேலையை மறந்தார்.

எப்படியாவது அந்தக் கிளியை பிடித்துவிடும் முடிவில் காரை நிறுத்தினார்.

மெல்ல கிளியின் பின்பக்கமாய் வந்து அந்த வீட்டின் கூரையில் சப்தமில்லாமல் ஏறி, கிளி ஏமாந்த ஒரு தருணத்தில் அதைப் பிடித்தே விட்டார்.

அந்தக் கிளியோ பேசும் கிளி.

தன்னைப் பிடித்த நம்ம சிங்கைப் பார்த்து கோபத்துடன் திரும்பிய கிளி சிக்கிய கடுப்புடன் கத்தியது.!

"டாய்... எவன்டா அவன் என்னைப் பிடிச்சது.! விடுடா என்னை.!".

கிளி பேசியதைக் கேட்டதும் பட்டென்று கையை விட்டுவிட்ட நம்ம சிங், அந்தக் கிளியைப் பார்த்து பயபக்தியுடன் சொன்னார்.

"மன்னிச்சுக்கங்க சார். நீங்க பச்சைக் கலர்ல ரெக்கையோட இருக்கறதப் பாத்து நீங்க ஒரு பேர்டுனு நெனச்சுட்டேன் சார்.!" என்றார்.
.
.
.