Tuesday, September 20, 2011

செக்கில் கையெழுத்திடுவது எப்படி.?

தில்லுதுர முதன்முதலாய் தனது செக்கின் மூலமாக பணம் எடுப்பதற்காக பேங்கிற்குள் நுழைந்திருந்தார்.

பணம் எடுப்பதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடுத்தவரிடம் கேட்க வெட்கப்பட்டு இங்கும் அங்குமாய் கொஞ்ச நேரம் அலைந்தவர், பிறகு கூட்டம் அதிகமில்லாத ஒரு கேஷியரின் டேபிளை நோக்கி நகர்ந்தார்.

அந்த கேஷியர் டேபிளில் கூட்டம்தான் இல்லையே தவிர, அவர் பயங்கர பிஸியாய் வேலை செய்து கொண்டிருந்தார்.

தில்லுதுர மெல்லிய குரலில் அவரிடம் கேட்டார்.

"சார்... இந்த செக்குல பணம் எடுக்க என்ன சார் செய்யணும்.?".

தலையே நிமிராமல் வேலை செய்தபடியே அந்த கேஷியர் சொன்னார்.

"மொதல்ல அந்த செக்குல முன்னாடிப் பக்கம் கேட்டிருக்கற டீடெய்ல்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணுங்க..!".

தில்லுதுர தலையை ஆட்டியபடி சொன்னார்.

"சார்... அதெல்லாம் அல்ரெடி ஃபில்லப் பண்ணிட்டேன் சார்..!".

அந்த கேஷியர் தொடர்ந்து சொன்னார்.

"அப்படியே செக்கோட பின்னாடிப் பக்கம் ஒரு கையெழுத்தை போட்டு இங்கே கொடுங்க..!".

தில்லுதுர கேட்ட உதவி கிடைத்த மகிழ்ச்சியுடன், "தாங்க்ஸ் சார்..!" என்றபடி நகரும்போது, அந்த கேஷியர் சொன்னார்.

"கையெழுத்து இங்க பேங்க்ல நீங்க லெட்டர் கொடுத்தப்ப எந்த மாதிரிப் போட்டீங்களோ... அதே மாதிரிப் போடணும்..!".

தில்லுதுர இன்னும் மகிழ்ச்சியுடன், "ஓகே சார்..!" என்றபடி சந்தோஷமாய் கையெழுத்திட்டு கேஷியரிடம் செக்கை திரும்ப நீட்டினார்.

செக்கை வாங்கி முன்பக்கத்தை சரிபார்த்துவிட்டுத் திரும்பிய கேஷியர் அரண்டுபோய் தில்லுதுரயைப் பார்த்தார்.

அதில்...

"தங்கள் உண்மையுள்ள,
தில்லுதுர"

என்றிருந்தது....
.
.
.

Wednesday, September 14, 2011

என்ன கொடும சரவணா இது..?

தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கத் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு பயங்கரப் பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.
போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ சகிக்க முடியவில்லை.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...
'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

ராஜா போல இருக்கும் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா..?

அந்தக் கோடீஸ்வரி தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் உடன் அழைத்தபடியே சுற்றினான்.

சினிமாவுக்குப் போனால், பார்க்குக்குப் போனால், பீச்சுக்குப் போனால், ஆஃபீஸுக்குப் போனால் என எங்கேயும் வித்தியாசம் இல்லாமல் மனைவியை உடன் அழைத்துக் கொண்டே சுற்றினான் தில்லுதுர.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யம்...'இதென்னடா இது... இப்படி ஒரு லவ்வு' என்று.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நண்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஜாலியாய் இருப்பதை விட்டுவிட்டு, இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டில் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுத்தான் போகணும். அதெப்படி முடியும் சொல்லு... அதனால அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளைக் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".

Wednesday, September 7, 2011

மனைவியின் திருட்டு



என் கணவர் அலுவலகத்துக்கு கிளம்பும்காலையில் கோபமாய் டேனியைப் பற்றிக் கத்திக் கொண்டு இருந்தார்.

"உன் பையன் என் சர்ட் பாக்கெட்ல இருந்து பணம் எடுத்திருக்கான். அவனை இனிமே என்னைக் கேக்காம என் பாக்கெட்ல கை வைக்கக் கூடாதுன்னு சொல்லி வை...!".

என் மகனைப் பற்றி யாராவது குறை சொன்னாலே எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். இதில் என் கணவரே குறை சொன்னால். அதிலும், விட்டால் திருட்டுப் பட்டமே கட்டிவிடுவார் போலத் தோன்றவே கோபமாய் அவரைக் கேட்டேன்.

"பணத்தை நீங்களே எங்கயாவது செலவு செஞ்சுட்டு மறந்துட வேண்டியது. இங்க வந்து அவன்மேல பழி போட வேண்டியது. இதோட நாலஞ்சு தடவை ஆச்சு..!".

நான் சொன்னதும் கோபமாய் திரும்பிய அவர், கடுகடுப்பு மாறாமல் சொன்னார்.

"ஏன்... என்னைப் பார்த்தா தண்ணியடிச்சுட்டு ஒளறுற மாதிரித் தெரியுதாக்கும்..? நான் செலவு செஞ்சிருந்தா எனக்குத் தெரியாதா..?".

அவர் அப்படிக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல், சமாளிக்கும் விதமாய் அடுத்துச் சொன்னேன்.

 "ஏன் டேனியவே சொல்லறீங்க... பணத்தை நான்கூட எடுத்திருக்கலாமே..?".

நான் கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் என்னைப் பார்த்து திரும்பியவர், என்னைக் கடுப்பேற்றும் விதமாய் சிரித்தபடியே பதில் சொன்னார்.

"கண்டிப்பா அவன் தாண்டி எடுத்திருக்கான். நீ எடுத்திருந்தாத்தான் என் பாக்கெட்ல ஒண்ணுமே மிச்சம் இருக்காதே...!".
.
.
.