Wednesday, April 14, 2010

கன்னத்தில் முத்தமிட்டால்...








அது ஒரு அடர்ந்த காடு.

அதில் உள்ள ஒரு மரத்தில் ஏற ஒரு குட்டி ஆமை விடாமல் முயன்று கொண்டிருந்தது.

கொஞ்சம் முயற்சிக்கு அப்புறம் அது மரத்தில் ஏறியும் விட்டது.

ஏறி ஏறி மரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த ஆமை பறக்க முயற்சித்து... தன் முன்னிரு கால்களையும் ஆட்டியபடி கீழே குதித்தது. 

குதித்த ஆமை பறக்க முடியாமல் கீழே விழுந்தது.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும்
அதே போல ஏறி,
அதே போல பறக்க முயற்சித்து,
அதே போல கீழே விழுந்தது அந்த ஆமை.

மேலும் மேலும் இதுவே தொடர்வதையும் அந்த ஆமை மறுபடி மறுபடி தோற்றுப் போவதையும் மரத்தில் இருந்த இரு பறவைகள் கவலையுடன் கவனித்துக் கொண்டே இருந்தன.

கடைசியாய் அந்த பெண் பறவை தன் அருகில் அமர்ந்திருந்த ஆண் பறவை பக்கம் திரும்பி கவலையுடன் சொன்னது.


"என்னங்க... அவன் நம்ம கொழந்தை இல்லைங்கறதையும்... நாம அவனத் தத்து எடுத்திருக்கிறோம்ங்கற உண்மையையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சிண்ணு நினைக்கிறேன்...!".
.
.
.



3 comments:

Raman Kutty said...

முடியல... யப்பா... முடியல... யப்பா... ஏன் இந்த கொலை வெறி..

Anonymous said...

excellent

உமா கிருஷ்ணமூர்த்தி said...

really nice..

Post a Comment