Wednesday, February 10, 2010

கருத்த, தடித்த, எருமை போன்ற தமிழ்ப் பையன்


அச்சு என்பவரின் தலைமையில், பிரேம்சந்த் நிர்வகிக்கும் மல்லு பள்ளியில், லால்மோஹன் ஹெச்.எம்., ராம்ஜெய் என்னும் வாத்தியார்.

அவர் வகுப்பில் கருத்த, தடித்த, எருமை போன்ற தமிழ்ப் பையன் ஒருவன் படிக்கிறான்.

அன்று ராம்ஜெய் வகுப்பு எடுக்கும்போது, "மல்லுவாயிருப்பதில் பெருமையடைபவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள்..." என்று அவர் சொன்னதும் அத்தனை மாணவர்களும் ஆரவாரமாய்க் கையைத் தூக்குகிறார்கள்... அந்த ஒருவனைத் தவிர.

வாத்தியார் ராம்ஜெய்க்கு ஒரே கோபம்.

"ஏன்... உனக்கு என்ன..?".

அதற்கு அந்தச் சிறுவன், "நான் தமிழன்..."என்கிறான்.

வாத்தியாருக்குக் கோபம் அதிகமாகிறது. "நீ எப்படி தமிழனாவாய்..?".

"நான் தமிழ்நாட்டில் பிறந்தேன்...".

"இது சரியான பதில் அல்ல...".

"என் அப்பா அம்மா இருவரும் தமிழர்கள்..".

"அதனால்...?".

"அதனால், நான் தமிழன் தானே...?".

வாத்தியாருக்கு வந்ததே கோபம்.

"அப்ப... உன் அப்பா அம்மா இருவரும் மடையர்களாயிருந்தால் நீயும் மடையனாய் இருப்பாயா..?".

சிறுவன் சாந்தமாய் பதிலளித்தான்.

"இல்ல... அப்ப நான் மல்லுவாய் இருப்பேன்...!".



1 comment:

jroldmonk said...

வொய் திஸ் கொலவெறி குரு..

Post a Comment