Tuesday, February 9, 2010

கவலைப்படாதே சகோதரா....


கம்பெனியின் முதலாளி மற்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. எல்லாப் பக்கமும் லாஸ். பணம் புரட்டவே முடியல. நெனச்சு நெனச்சு பிரஷர் அதிகமாகிட்டே போகுது. டாக்டர்கிட்ட போனா கவலைப்பட்டா இன்னும் உடம்பு மோசமாகிடும்னு சொல்றார்...".
கேட்டுக் கொண்டிருந்த அடுத்தவர் கேட்டார். "அதுக்கு என்ன பண்ணினே...?".
"புதுசா ஒருத்தன வேலைக்குச் சேர்த்திருக்கேன். எனக்கு பதிலா கவலைப்படறதுதான் அவன் வேலை. மாசம் ஒரு லட்சம் சம்பளம். அவன் வேலைக்குச் சேர்ந்து நாளையோட ஒரு மாசம் முடியுது..."
"ஏற்கனவே லாஸ்னு சொல்றே... இப்போ அவனுக்கு எப்படி ஒரு லட்சம் சம்பளம் கொடுப்ப...?" என்று அவர் நண்பர் கேட்டார்.
அதற்கு அந்த முதலாளி, "அதைப் பத்திதான் நான் கவலைப்பட வேண்டியதில்லையே...!".

No comments:

Post a Comment