Tuesday, February 23, 2010

தில்லுதுர மனைவி


எங்கள் அலுவலகத்தில் மொபைல் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
எல்லோரும் முன்னால் இருக்கும் லாக்கர் ரூமில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம்.
மதியம் லன்ச்சில் வந்து சில சமயங்களில் மிஸ்டு கால் பார்த்து ஃபோன் செய்து கேட்டுக் கொள்வது நடக்கும்.
அன்று அப்படித்தான் நான் எதுவும் ஃபோன் வந்திருக்கிறதா என்று பார்க்க வந்தபோது எங்கள் மானேஜர் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
ஆள் கொஞ்சம் பந்தா பேர்வழி. படா தில்லுதுர.
ஸ்பீக்கர் வேறு ஆனில் இருந்தது.
எனவே தன்னால் கவனம் அங்கே சென்றது.
"ஹலோ...!"
மறுமுனையில் இவர் மனைவி என்று நினைக்கிறேன். "என்னங்க..நான் தான்.. ஆபிஸ்லயா இருக்கீங்க..?"
"ஆமா... சொல்லும்மா..."
"நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை. வாங்கிகட்டுமா...?"
"வாங்கிக்க...!"
"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..."
"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"
"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார்... இப்ப ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... என்ன பண்ணலாம்..?"
"வாங்கிடு... ஆனா, எல்லா அக்ஸஸரிஸும் இருக்கணும்... தள்ளுபடில வங்கிட்டு அப்புறம் அது இல்ல, இது இல்லனு சொல்லிகிட்டு இருக்கப்படாது... ஓகே?"
"ஓகேங்க... ஐ லவ் யூ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.
தில்லுதுரயும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டு திரும்பினார்.
ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நான் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, என்னைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார்.
"யாரோட மொபைல்டா இது..?".







1 comment:

Post a Comment