Thursday, February 18, 2010

மந்திரவாதியின் மனைவி


கொஞ்ச நாளைக்கு முன்னால எங்க ஊருப்பக்கம் ஒரு மந்திரவாதி இருந்தான்.
பயங்கர சித்துவேலை எல்லாம் செய்வான். ஊர் மக்களையெல்லாம் ரொம்ப மிரட்டி பயமுறுத்தி வெச்சிருந்தான்.
அதோட மட்டுமில்ல... அவன் மனைவியையும் ரொம்பக் கொடுமைப் படுத்துவான். அவ எந்நேரமும் அழுதிட்டேதான் இருப்பா.
ஊர் மக்கள் எல்லாம் அவளுக்காக ரொம்ப பரிதாபப்படுவாங்க.
ஆனா, மந்திரவாதி எதப்பத்தியும் கவலைப்படமாட்டான்.
அவன் அடிக்கடி அவன் மனைவியைப் பாத்து சொல்லுவான். "நான் எப்படா சாவேன்னு பாத்துகிட்டு இருக்கியா.. நான் செத்தாலும் உன்னையும் இந்த ஊரையும் விடமாட்டேன்... புதைகுழியைத் தோண்டிக்கிட்டு வந்து உங்களப் பழிவாங்குவேன்...."
நாங்க எல்லாம் 'இதெதுடா இவன் செத்தும் கெடுப்பான் போல இருக்கே...'னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே அவன் ஒரு நாள் செத்தும் போயிட்டான்.
எங்களுக்கெல்லாம் ஒரே பயம்.
இவனப் பொதச்சா எந்திரிச்சு வந்திடுவானோனு... எங்க ஊரு பழக்கம் எரிக்கவும் முடியாது...
என்ன பண்றதுனு தெரியாம அவன் மனைவி முடிவுக்கே விட்டுட்டோம். பயத்துல யாரும் அவன்கூட சுடுகாடுகூடப் போகல.
ஆனா, அவன் மனைவியோ,'விட்டதுடா...'னு பயங்கர சந்தோஷமா சுத்திகிட்டு இருந்தா.
ஒரு யாரும் இல்லாத அன்னிக்கு அவளத் தனியாப் பாத்து கேட்டேன், "உனக்கு மந்திரவாதி பயமில்லியா...?"னு.
அவ என்னைத் திருப்பிக் கேட்டா, "என்ன பயம்...?".
"அவன் புதைகுழியைத் தோண்டிக்கிட்டு வந்துடுவனோனு..".
அதுக்கு அவள், "தோண்டினா தோண்டட்டும்... நான் அவனத் தலைகீழாத் தான புதைச்சு வச்சிருக்கேன்...!"னு சொன்னாளே பாக்கணும்.



No comments:

Post a Comment