Thursday, February 4, 2010

இதைப் படிக்காதீங்க


ஒரு மீனவன் அதிகாலை ரொம்ப சீக்கிரமா எந்துருச்சிட்டான்.
கடலுக்குள்ள போறதுக்கு இன்னும் வெளிச்சம் வேணும்.
என்ன பண்ணலாம்னு யோசிச்சபடியே நடக்கும்போது அவன் காலடியில ஒரு பை கிடந்தது. பை நிறைய கல்லு.
ஸோ, டைம் பாஸ்க்கு வெளிச்சம் வர்ற வரைக்கும் ஒவ்வொரு கல்லா எடுத்து கடலுக்குள்ள வீசிக்கிட்டு இருந்தான்.
சூரியன் வரும்போது கையில இருந்த ஒரே ஒரு கல்லைத்தவிர, மத்த எல்லாத்தையும் கடலுக்குள்ள வீசியிருந்தான்.
வெளிச்சம் வந்ததும்தான் தெரிந்தது... அவன் கையிலருந்து வீசினது எல்லாம் கல் இல்ல, அத்தனையும் வைரம்.
என்ன பண்றது.... அவன் வாழ்க்கையில ரொம்ப நாள் அதை நினைச்சு நினைச்சு நொந்துக்கிட்டே இருந்தான்.

நீதி: காலைல ரொம்ப சீக்கிரம் எந்திரிக்கக் கூடாது.




No comments:

Post a Comment