Saturday, February 20, 2010

"டூ மோர் லார்ஜ்..."


மாலை ஆறு மணி.
அந்த பாருக்குள் அவன் நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தான்.
பார் அட்டென்டர் அவனருகில் வந்து, "சார்..ஆர்டர் ப்ளீஸ்..!".
அவன் திரும்பி, "ஆர்சி ரெண்டு லார்ஜ்...".
பார் அட்டென்டர் கொண்டு வைத்ததும் மெதுவாய் குடித்தான்.
முடிந்தது.
திரும்பவும் பார் அட்டென்டர் அவனருகில் வந்தான்.
அவன், "ஒரு நிமிஷம்..." என்றவன் பாக்கெட்டில் கை விட்டு பர்ஸை எடுத்து பிரித்துப் பார்த்துவிட்டு, "டூ மோர் லார்ஜ்...".
வந்தது... குடித்து முடிந்தது.
மறுபடி பார் அட்டென்டர் அவனருகில்.
அவன் திரும்ப பர்ஸை எடுத்து பிரித்துப் பார்த்துவிட்டு, "டூ மோர் லார்ஜ்..." என்றான்.
இது தொடர்ந்து கொண்டே இருக்க வெறுத்துப்போன பார் அட்டென்டர், "சார்... இங்க பாருங்க. இன்னிக்கு ராத்திரி பூரா கேளுங்க. நான் கொடுத்துகிட்டே இருக்கேன்... ஆனா, ஒவ்வொரு தடவையும் ஆர்டர் பண்ணுறதுக்கு முன்னால அந்தப் பர்ஸ்ல என்னதான் எடுத்துப் பார்க்கறீங்க... அதுதான் எனக்குப் புரியவேமாட்டேங்குது...!".
அவன் மெல்லத் திரும்பி, "தம்பி... அதுலதான் என் மனைவியோட ஃபோட்டோ இருக்கு. எந்த ரவுண்டு முடியும் போது அவள் அழகா தெரிய ஆரம்பிக்கறாளோ... அப்ப குடிக்கறத நிறுத்திட்டு கிளமபிருவேன்..." என்றவன்... ...திரும்பவும், "டூ மோர் லார்ஜ்..." என்றான்.



No comments:

Post a Comment