Monday, February 22, 2010

காட்டைவித்துக் கள்ளைக் குடிச்சாலும்


அந்நிய தேசத்தில் காரில் போய்க்கொண்டிருந்த போது அவன் ஒரு பாலத்தில் ஏறி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்வதைக் கண்டு தடுத்துப் பேசினேன். ஆங்கிலத்தில்தான்.
"பார்த்தால் ஆசியன் மாதிரி தெரியுதே...!"
"ஆமா.. !"
"நானும்தான்... நீ இந்தியனா...?"
"ஆமா.. !"
""நானும்தான்... நீ சவுத் இந்தியனா...?"
"ஆமா.. !"
"சவுத் இந்தியால எங்கே..?"
"தமிழ்நாடு..."
"அடடே தமிழனா...?" பேச்சு தமிழுக்கு மாறியது. "தமிழ்நாட்ல எங்கே..?"
"கோயம்புத்தூர்..."
"அடடே... கோயம்புத்தூர்னா...?"
"பக்கத்துல ஆனைமலை...!"
"அடடே... ரொம்ப பக்கத்துல வந்துட்டே.. என்ன ஆளுக நீங்க..?"
தன் ஜாதியச் சொன்னான்.
"அடடே, நம்ம ஜாதி... எனன கூட்டம்..?"
அதையும் சொன்னான்.
"அப்படிப் போடு... நம்ம கூட்டமாவே போயிட்ட போ... ஆமா, குலதெய்வம்...?" அவன் பதில் சொன்னதுதான் தாமதம்.
எரிச்சல் மனதில் மண்டியது.
இவனுக ஆளுகதான் அஞ்சு வருசமா எங கோயிலத் தொறக்கவிடாம ஊருக்குள்ள ரகளை பண்ணிகிட்டு இருக்காங்க. இங்க இவன நாம காப்பாத்தறதா..?
"சாவுடா... !" என்று அவனை ஆற்றில் தள்ளிவிட்டேன் நான்.




No comments:

Post a Comment