Friday, February 19, 2010

முதல்வரின் பேருரை


அன்று காமராஜர் அரங்கத்தில் மாநில முதல்வரின் நிர்வாகம் சாராத பேருரை நடந்து கொண்டிருந்தது.
அரங்கத்தில் கூட்டத்தை ஒழுங்கு பண்ணும் பணியில் இருந்த அந்த இளைஞன் கதவருகில் புதிதாய் ஒரு வயதான பெண்மணி உள்ளே நுழைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அந்தப் பெண்மணிக்கு உதவும் நோக்கத்தோடு அருகில் சென்றவன் கேட்டான், "நான் உங்களுக்கு உதவலாமா...?.
அந்தப் பெண்மணி பதிலளித்தாள், "கண்டிப்பாய்...".
"எங்கே அமர விரும்புகிறீர்கள் அம்மா...?".
"முதல் வரிசையில் இடம் கிடைத்தால் பரவாயில்லை....".
"முதல்வரிசை வேண்டாம் அம்மா... இன்று முதல்வரின் உரை மிகவும் வெறுப்படிக்கும் விதமாய் உள்ளது...".
அந்தப் பெண்மணி கோபமாய் திரும்பி,"நான் யார் தெரியுமா...?".
"தெரியாது... யார் நீங்கள்...?".
"நான் தான் முதல்வரின் அம்மா...!".
வேகமாய்த் திரும்பிய அவன் கேட்டான்,"நான் யார் தெரியுமா...?".
"தெரியாது...!".
"ரொம்ப நல்லதாய்ப் போச்சு..." என்று ஓடியே போனான் அவன்.




No comments:

Post a Comment