Friday, February 5, 2010

துறவியின் வருகை


புகழ் பெற்ற துறவியைச் சந்திக்க வெளிநாட்டிலிருந்து யாத்ரீகர் ஒருவர் வந்திருந்தார்.
வந்தவர் துறவியின் அறையைப் பார்த்து வியந்து போனார்.
ஒரு சிறிய அறை... அறை முழுக்கப் புத்தகங்கள்.... சாய்ந்து படிக்க ஒரு தலையணை...அவ்வளவுதான்.
ஆச்சயர்மாய் துறவியிடம் அவர் கேட்டார், "உங்களுடைய பொருட்கள் எல்லாம் எங்கே...?".
அதற்குத் துறவி அவனைக் கேட்டார், "உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே...?".
" எனக்கு எதற்குப் பொருட்கள்... நான் ஒரு யாத்ரீகன் அல்லவா...?".
துறவி சாந்தமாய் புன்னகைத்தவாறு பதிலளித்தார், " நானும் அப்படித்தான்...!".





No comments:

Post a Comment