Monday, February 8, 2010

இங்கும் ஒரு காதல் கதை...


கடற்கரையில் அந்த ஆண் நண்டைப் பார்த்ததுமே பெண் நண்டுக்கு காதல் உண்டாகிவிட்டது.


அது மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் மனிதர்களைப் போல் நேராய் நடந்து கொண்டிருந்தது.


பெண் நண்டு உடனே தன் காதலைச் சொல்லியும்விட்டது. ஆண் நண்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.


பெண் நண்டு உடனே தன் பெற்றோர்களிடம் சொல்லி திருமண சம்மதமும் பெற்றுவிட்டது.


நல்ல நாளில் பெண் பார்க்கும் வைபவமும் ஏற்பாடாகியது. பிறகு திருமணம். பெண் நண்டு ஆண் நண்டிடம் போட்ட ஒரே கண்டிஷன் பெண் பார்க்கும்போதும், மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமணத்தின் போதும் மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் நேராய் நடந்து வர்வேண்டும் என்பதுதான். அதே போல் ஆண் நண்டும் நடந்து வர பெண் நண்டுக்கும் அதன் வீட்டாருக்கும் ஒரே பெருமை.


கல்யாணம் முடிந்தது. முதல் இரவு.


அறைக்குள் நுழைந்த ஆண் நண்டு மற்ற நண்டுகளைப் போலவே சைடாய் நடந்துவர பெண் நண்டு கேட்டது.

"என்னங்க... உஙக ஸ்பெஷலே நேரா நடக்கறதுதான். அப்படி நடக்காம எல்லா நண்டுக மாதிரி சாதாரணமா நடந்து வர்றீங்களே..!".


அதற்கு ஆண் நண்டு, "ங்கொய்யால... டெய்லி தண்ணீ அடிக்க டாஸ்மாக்ல ங்கொப்பனா வேலை பாக்கிறான்..." என்றது.












No comments:

Post a Comment