Wednesday, February 24, 2010

கண் தெரியாதவரும் கால் டாக்ஸியும்


ஒரு கண் தெரியாதவரும் அவரது வழிகாட்டும் நாயும் சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தார்கள்.
சிக்னலில் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்ததும் சாலையின் குறுக்கே வேகவேகமாய் அவரை இழுத்து கொண்டு ஓடிய நாய், கிட்டத்தட்ட படு வேகமாய் வந்த ஒரு கால் டாக்ஸியின் மீது மோத வைக்க இருந்தது.
டிரைவர் சடனாய் ஒரு பிரேக்கைப் போட்டு , "இன்னாயா... வூட்ல சொல்லிக்கினு வந்துட்டியா...?" என்று கேட்டுவிட்டுப் போனான்.
சற்று படபடப்புடன் சாலையின் மறுபுறம் வந்த அந்த கண் தெரியாதவர் நாய்க்கு "ச்..ச்..."என்று அழைத்து ஒரு பிஸ்கட்டைக் அதற்குத் தின்னக் கொடுத்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், "இன்னாபா.. உன்னைக் கொல்லப் பாத்தது... அதுக்குப் போயி பிஸ்கோத்த துண்ணத் தாரீயே...!" என்று கேட்க, அந்த கண்தெரியதவர் பதிலளித்தார்.
"பிஸ்கட் கொடுக்கலைனா இந்த நாயை எந்தப் பக்கம் உதைக்கறதுனு நான் எப்படிக் கண்டுபிடிக்கறது...?".



No comments:

Post a Comment