டாக்டர் ஒருவர் தனது கார் ரிப்பேர் ஆனதால் மெக்கானிக் ஷெட்டுக்குப் போகிறார்.
காரின் எஞ்ஜினை பிரித்து பழுது நீக்கி திரும்ப மாட்டி ஓடவிட்டு பில் கொடுக்கும்போது மெக்கானிக் டாக்டரிடம் கேட்கிறான். "அய்யா, பாருங்கள்... நானும் உங்களைப் போல்தான் காரின் இதயம் போன்ற எஞ்ஜினைப் பிரித்தேன். வால்வுகளை கழற்றினேன். சரி செய்து திரும்ப மாட்டி மறுபடி ஓட விட்டேன். ஆனால், உங்களுக்கு சம்பளம் அதிகம், எனக்கு எவ்வளவு குறைச்சல் பார்த்தீர்களா..ஏன் இப்படி...?.
டாக்டர் மெல்ல அவன் காதருகில் வந்து சொன்னார்,"நீ செய்ததை எஞ்ஜின் ஓடிக்கொண்டிருக்கும் போது செய். அதிகம் கிடைக்கும்...!"
1 comment:
அருமை மீன்ஸ்...
வெற்றிகரமான இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment