இரண்டு ஜென் துறவிகள் கோவில் வாசலில் நின்றிருந்தார்கள்.
இருவரும் மேலே கோபுரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருவர் சொன்னார், "கொடி அசைகிறது..!"
"இல்லை..." என்றார் அடுத்தவர். "காற்றுதான் அசைகிறது..!"
"ம்ஹூம், தப்பு...!" என்றார் முதல் துறவி. "காற்று எங்கேயும்தான் இருக்கிறது. ஆனால் கொடி இங்கே மட்டும்தானே அசைகிறது..?".
"காற்று மட்டும் இல்லாவிட்டால் கொடியால் எப்படி அசையமுடியும்..?" என்றார் இரண்டாவது துறவி.
இவர்கள் இப்படி மாறி மாறிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக அவர்களுடைய குருநாதர் வந்தார்.
"உங்களுக்குள் என்ன சண்டை..?".
துறவிகள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, தங்களுடைய பிரச்னையைச் சொன்னார்கள்.
"நீங்களே சொல்லுங்கள் குருவே. இங்கே கொடி அசைகிறதா, அல்லது காற்று அசைகிறதா..?".
சொல்லிவிட்டு இருவரும் குருவின் முகத்தையே ஆர்வமாய்ப் பார்க்க, குரு சொன்னார்
"இரண்டுமே இல்லை. உங்களுடைய மனம்தான் அசைகிறது...!".
சொல்லிவிட்டு குரு போக, துறவிகள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
.
.
.
Wednesday, December 29, 2010
Tuesday, December 28, 2010
தொடப்பக் கட்டை
தில்லுதுரயின் அலுவலகத்தில் அப்போதுதான் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
தில்லுதுர அந்த இளைஞனை கையைக் குலுக்கி வரவேற்று, பெயர் என்ன என்று கேட்டுவிட்டு, அவன் கையில் ஒரு துடைப்பத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.
"தம்பி... உன்னோட முதல் வேலை, இந்த ஆஃபீஸை நல்லா, சுத்தமா, குப்பை இல்லாமப் பெருக்கறது தான். எங்கே செய்யுங்க பார்ப்போம்..?".
அதைக் கேட்டதும், அந்த இளைஞன் கோபத்துடன் திரும்பி தில்லுதுரயிடம் சொன்னான்.
"சார்... ஒரு போஸ்ட் கிராஜுவேட். என்னைப் போயி..!".
அவன் சொன்னதும் தில்லுதுர வருத்தத்துடன் சொன்னார்.
"ஓஹ்... ஐ ஆம் வெரி வெரி சாரி தம்பி...! எனக்கு அது தெரியாமப் போச்சே. மொதல்ல அந்தத் துடைப்பத்தைக் கொடுங்க...!" என்று துடைப்பத்தைக் கையில் வாங்கியவர் தொடர்ந்து சொன்னார்.
"இப்ப, எப்படிக் பெருக்கறதுன்னு உங்களுக்கு நான் சொல்லித் தர்றேன்...!" என்றார்.
.
.
.
தில்லுதுர அந்த இளைஞனை கையைக் குலுக்கி வரவேற்று, பெயர் என்ன என்று கேட்டுவிட்டு, அவன் கையில் ஒரு துடைப்பத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.
"தம்பி... உன்னோட முதல் வேலை, இந்த ஆஃபீஸை நல்லா, சுத்தமா, குப்பை இல்லாமப் பெருக்கறது தான். எங்கே செய்யுங்க பார்ப்போம்..?".
அதைக் கேட்டதும், அந்த இளைஞன் கோபத்துடன் திரும்பி தில்லுதுரயிடம் சொன்னான்.
"சார்... ஒரு போஸ்ட் கிராஜுவேட். என்னைப் போயி..!".
அவன் சொன்னதும் தில்லுதுர வருத்தத்துடன் சொன்னார்.
"ஓஹ்... ஐ ஆம் வெரி வெரி சாரி தம்பி...! எனக்கு அது தெரியாமப் போச்சே. மொதல்ல அந்தத் துடைப்பத்தைக் கொடுங்க...!" என்று துடைப்பத்தைக் கையில் வாங்கியவர் தொடர்ந்து சொன்னார்.
"இப்ப, எப்படிக் பெருக்கறதுன்னு உங்களுக்கு நான் சொல்லித் தர்றேன்...!" என்றார்.
.
.
.
Labels:
இளைஞன்,
கிராஜுவேட்,
தம்பி,
துடைப்பம்,
பெருக்கறது,
போஸ்ட் கிராஜுவேட்
9
comments
Monday, December 27, 2010
தில்லுதுரயின் மனைவி
தில்லுதுரயின் மனைவி அழுது கொண்டே தன் அம்மாவுக்கு போன் செய்தாள்.
"அம்மா... மறுபடி மறுபடி அவர் என்னோட சண்டை போட்டுக்கிட்டே இருக்காரு. என்னால இவரோட வாழ முடியல. நான் உன்னோடயே வந்துடறேம்மா...!".
மறுமுனையில், தில்லுதுரயின் மாமியார் பொறுமையாய் மகளுக்குப் புரியும்படி நிறுத்தி, நிதானமாய்ச் சொன்னார்.
"பொறுமையாய் இருடி. ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. ஆனா, நாம யாருன்னு நாமதான் அவங்களுக்குக் காட்டணும். நீ அங்கயே இரு. நான் வந்து உன்னோட இருக்கறேன்...!".
.
.
.
"அம்மா... மறுபடி மறுபடி அவர் என்னோட சண்டை போட்டுக்கிட்டே இருக்காரு. என்னால இவரோட வாழ முடியல. நான் உன்னோடயே வந்துடறேம்மா...!".
மறுமுனையில், தில்லுதுரயின் மாமியார் பொறுமையாய் மகளுக்குப் புரியும்படி நிறுத்தி, நிதானமாய்ச் சொன்னார்.
"பொறுமையாய் இருடி. ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. ஆனா, நாம யாருன்னு நாமதான் அவங்களுக்குக் காட்டணும். நீ அங்கயே இரு. நான் வந்து உன்னோட இருக்கறேன்...!".
.
.
.
Friday, December 24, 2010
கிறிஸ்துவும் மூன்று மரங்களும்
ஒருகாலத்தில், மலை ஒன்றின் மீது மூன்று இளம் மரங்கள் நின்றன.
அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும், தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன.
முதலாவது மரம், “நான் உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தைச் சுமக்கவிரும்புகிறேன்.. ” என்றது.
இரண்டாவது மரம், “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.
மூன்றாவது மரமோ, “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.
வருடங்கள் பல சென்றன. அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.
அவர்கள் ஆளுக்கொரு மரத்தை வெட்டிச் சாய்த்து, தங்கள் வண்டியில் மரங்களை நகரத்துக்குள் எடுத்துச் சென்றனர்
தன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் அதை மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.
ஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொன்னால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கி நிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.
இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அது நினைத்தற்கு மாறாக, ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அது வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில் கூட அதனால் பயணம் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மூன்றாவது மரமோ, தன்னை வெறும் கட்டைகளாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டு வைத்தபோது, தான் விரும்பியது நடக்காமல் மனம் வருந்திக் கிடந்தது..
பல நாட்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன.
ஆனால் ஒரிரவு ஒரு இளம் பெண், தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.
“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்...,” என அப்பெண்ணின் கணவன் முணுமுணுத்தான்.
அந்த இளம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள். அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.
அப்போது அந்த மரம், தான் உலகிலேயே அதி உயரிய பொக்கிஷத்தைத் தாங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தது.
இன்னும் சில நாள் கழித்து, ஒரு சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கனும் அவனது நண்பர்களும் அந்த சிறிய படகில் செல்லும்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது.
அந்த சிறிய மரம் நடுங்கியது. .
களைப்படைந்த அந்த வழிப்போக்கன் எழுந்து உட்கார்ந்தான். பிறகு எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறியதும், புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.
அந்தப் படகு அப்போது, சுவர்க்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.
ஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்பட்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதனின் கரங்களை தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.
ஆனால், ஞாயிறின் காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.
அந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட, அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.
.
.
.
இளமையில் உங்கள் எண்ணம் எதுவோ, அதை அடைய பொறுமையுடன் காத்திருந்தால்...
அது கிடைக்காமல் போகாது என்பதற்கு இந்த மூன்று மரங்கள், மக்களுக்கு உலகம் உள்ள வரையும் சாட்சியாய் இருந்தது.
அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும், தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன.
முதலாவது மரம், “நான் உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தைச் சுமக்கவிரும்புகிறேன்.. ” என்றது.
இரண்டாவது மரம், “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.
மூன்றாவது மரமோ, “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.
வருடங்கள் பல சென்றன. அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.
அவர்கள் ஆளுக்கொரு மரத்தை வெட்டிச் சாய்த்து, தங்கள் வண்டியில் மரங்களை நகரத்துக்குள் எடுத்துச் சென்றனர்
தன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் அதை மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.
ஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொன்னால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கி நிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.
இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அது நினைத்தற்கு மாறாக, ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அது வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில் கூட அதனால் பயணம் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மூன்றாவது மரமோ, தன்னை வெறும் கட்டைகளாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டு வைத்தபோது, தான் விரும்பியது நடக்காமல் மனம் வருந்திக் கிடந்தது..
பல நாட்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன.
ஆனால் ஒரிரவு ஒரு இளம் பெண், தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.
“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்...,” என அப்பெண்ணின் கணவன் முணுமுணுத்தான்.
அந்த இளம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள். அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.
அப்போது அந்த மரம், தான் உலகிலேயே அதி உயரிய பொக்கிஷத்தைத் தாங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தது.
இன்னும் சில நாள் கழித்து, ஒரு சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கனும் அவனது நண்பர்களும் அந்த சிறிய படகில் செல்லும்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது.
அந்த சிறிய மரம் நடுங்கியது. .
களைப்படைந்த அந்த வழிப்போக்கன் எழுந்து உட்கார்ந்தான். பிறகு எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறியதும், புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.
அந்தப் படகு அப்போது, சுவர்க்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.
ஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்பட்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதனின் கரங்களை தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.
ஆனால், ஞாயிறின் காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.
அந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட, அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.
.
.
.
இளமையில் உங்கள் எண்ணம் எதுவோ, அதை அடைய பொறுமையுடன் காத்திருந்தால்...
அது கிடைக்காமல் போகாது என்பதற்கு இந்த மூன்று மரங்கள், மக்களுக்கு உலகம் உள்ள வரையும் சாட்சியாய் இருந்தது.
Labels:
கட்டை,
கிறிஸ்து,
குழந்தை,
தச்சு,
தொட்டில்,
பேரரசர்,
விறகுவெட்டி
5
comments
Tuesday, December 21, 2010
மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது
கோவையிலிருந்து சென்னை செல்ல அவசர அவசரமாக ஒரு ஆம்னி பஸ்சைப் பிடித்து ஏறின சமயம் நடந்தது அது.
கிளம்பிய பஸ், பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி, தடதடவென ஆடி, மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து அமைதியாய் நின்றது.
என்ன பிரச்சினை, எதுவென்று தெரியாமல் ஒரு கால்மணி நின்ற பிறகு, பஸ் எப்போதும் போல் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தது.
விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன், டிக்கெட் செக் செய்ய வந்தவரிடம் பக்கத்து சீட்டிலிருந்தவர் கேட்டார்.
"என்ன சார் பிராப்ளம்..?".
அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.
"வண்டியிலிருந்து வந்த சத்தம் சரியில்லாததால.., டிரைவர் வண்டியை எடுக்கப் பயந்து நிறுத்திட்டாரு..!".
அப்படியும் எதுவும் சரி செய்ததுபோல் தெரியாததால், அவர் மறுபடியும் கேட்டார்.
"அதுக்குள்ள சரி பண்ணிட்டிங்களா என்ன..?'
டிக்கெட் செக்கர் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் சொன்னார்.
"பண்ணியாச்சு சார்..!".
கேட்டவர் கொஞ்சம் குசும்புக்காரர் போல.. தொடர்ந்து கேட்டார்.
"அதுக்குள்ள என்ன இஞ்ஜினையா மாத்திட்டிங்க..?".
செக்கர் இப்போதும் அதேபோல் பாவமற்ற முகத்துடன் சொன்னார்.
"இல்ல சார்... டிரைவரை மாத்திட்டோம்..!".
.
.
.
கிளம்பிய பஸ், பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி, தடதடவென ஆடி, மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து அமைதியாய் நின்றது.
என்ன பிரச்சினை, எதுவென்று தெரியாமல் ஒரு கால்மணி நின்ற பிறகு, பஸ் எப்போதும் போல் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தது.
விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன், டிக்கெட் செக் செய்ய வந்தவரிடம் பக்கத்து சீட்டிலிருந்தவர் கேட்டார்.
"என்ன சார் பிராப்ளம்..?".
அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.
"வண்டியிலிருந்து வந்த சத்தம் சரியில்லாததால.., டிரைவர் வண்டியை எடுக்கப் பயந்து நிறுத்திட்டாரு..!".
அப்படியும் எதுவும் சரி செய்ததுபோல் தெரியாததால், அவர் மறுபடியும் கேட்டார்.
"அதுக்குள்ள சரி பண்ணிட்டிங்களா என்ன..?'
டிக்கெட் செக்கர் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் சொன்னார்.
"பண்ணியாச்சு சார்..!".
கேட்டவர் கொஞ்சம் குசும்புக்காரர் போல.. தொடர்ந்து கேட்டார்.
"அதுக்குள்ள என்ன இஞ்ஜினையா மாத்திட்டிங்க..?".
செக்கர் இப்போதும் அதேபோல் பாவமற்ற முகத்துடன் சொன்னார்.
"இல்ல சார்... டிரைவரை மாத்திட்டோம்..!".
.
.
.
Labels:
ஆம்னி பஸ்,
இஞ்ஜின்,
டிக்கெட் செக்கர்,
டிரைவர்,
தடதட,
பிராப்ளம்
2
comments
Thursday, December 16, 2010
ஒருகை ஓசை
அது ஒரு வளரும் அரசியல் கட்சி.
கட்சி ஆரம்பித்துக் கொஞ்ச நாள்தான் ஆகியிருப்பதால், கட்சியின் எல்லாச் செயல்களும் கட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இளவழகன் முடிவுப்படி தான் நடந்து கொண்டிருந்தது.
கட்சி சம்பந்தமான மீட்டிங்குகளில் பார்க்க வேண்டும் இளவழகனின் பேச்சை.
அனல் பறக்கும்.
மாசற்ற தமிழர் பெருமை, வீரம், மொழி, இனம், பாரம்பரியம் குறித்தெல்லாம் அவன் பேசினால்... கேட்பவர் மனம் சொக்கிக் கிடப்பார்கள்.
அந்த சமயத்தில், தொண்டர்களை உண்டியல் குலுக்கி வசூலை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தான் இளவழகன்.
அப்போதுதான், மக்களும் அந்த உணர்ச்சி வேகத்தில் பணத்தை அள்ளி உண்டியலில் கொட்டுவார்கள்.
அப்படி வசூலாகும் பணம்தான், இளவழகனின் எல்லா செலவுகளையும் சரிக்கட்டி வருகிறது.
அன்றும் இதுபோல்தான், கோவையில் இளவழகன் பேச்சு ஏற்பாடாகி இருந்தது... நல்ல கூட்டம்.
இளவழகன் வரும் முன்னரே, கூட்டத்தைக் கணக்கிட்டு வசூல் செய்ய, வழக்கமான இரண்டு உண்டியலுக்குப் பதிலாக நாலு உண்டியல் ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள்..
ஆனால், இளவழகன் வந்ததும் அந்த மற்ற இரு உண்டியல்காரர்களையும் தடுத்துவிட்டான்.
காரணம் கேட்டபோது சொன்னான்.
"ரெகுலரா உண்டி குலுக்கறவங்களப் பாத்திங்க தானே..? அவங்க ரெண்டு பேருமே ஒரு கை உள்ளவங்கனு தெரியாதா..?" என்றான்.
.
.
.
கட்சி ஆரம்பித்துக் கொஞ்ச நாள்தான் ஆகியிருப்பதால், கட்சியின் எல்லாச் செயல்களும் கட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இளவழகன் முடிவுப்படி தான் நடந்து கொண்டிருந்தது.
கட்சி சம்பந்தமான மீட்டிங்குகளில் பார்க்க வேண்டும் இளவழகனின் பேச்சை.
அனல் பறக்கும்.
மாசற்ற தமிழர் பெருமை, வீரம், மொழி, இனம், பாரம்பரியம் குறித்தெல்லாம் அவன் பேசினால்... கேட்பவர் மனம் சொக்கிக் கிடப்பார்கள்.
அந்த சமயத்தில், தொண்டர்களை உண்டியல் குலுக்கி வசூலை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தான் இளவழகன்.
அப்போதுதான், மக்களும் அந்த உணர்ச்சி வேகத்தில் பணத்தை அள்ளி உண்டியலில் கொட்டுவார்கள்.
அப்படி வசூலாகும் பணம்தான், இளவழகனின் எல்லா செலவுகளையும் சரிக்கட்டி வருகிறது.
அன்றும் இதுபோல்தான், கோவையில் இளவழகன் பேச்சு ஏற்பாடாகி இருந்தது... நல்ல கூட்டம்.
இளவழகன் வரும் முன்னரே, கூட்டத்தைக் கணக்கிட்டு வசூல் செய்ய, வழக்கமான இரண்டு உண்டியலுக்குப் பதிலாக நாலு உண்டியல் ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள்..
ஆனால், இளவழகன் வந்ததும் அந்த மற்ற இரு உண்டியல்காரர்களையும் தடுத்துவிட்டான்.
காரணம் கேட்டபோது சொன்னான்.
"ரெகுலரா உண்டி குலுக்கறவங்களப் பாத்திங்க தானே..? அவங்க ரெண்டு பேருமே ஒரு கை உள்ளவங்கனு தெரியாதா..?" என்றான்.
.
.
.
Labels:
இனம்,
உணர்ச்சி,
உண்டியல்,
தமிழர் பெருமை,
பாரம்பரியம்,
மொழி,
வசூல்,
வீரம்
0
comments
Wednesday, December 15, 2010
ராசா மந்திரி
ஒரே ஒரு காட்டிலே, ஒரே ஒரே ஒரு கிணறாம்... அந்தக் கிணற்றுக்குள்ளே எக்கச்சக்கமான தவளைகளாம்.
தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவளைகள். அதே கிணற்றில் இருந்த ஓர் ஆமைக்கு பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம் அந்த ஆமைகள். ஆமையோ, தவளைகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல், சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே சலித்துவிட்டதாம்.
"சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் வேண்டும்" என்று முடிவெடுத்து, ஒரு பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம். நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவளைகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவளைகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகளை எல்லாம் தானே பிடித்து தின்ன ஆரம்பித்துவிட்டதாம். பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவளைகள், "பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்" என்று வானத்தைப் பார்த்து பலமாக யோசித்தனவாம்.
அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு நாரை. "ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தனை அகலம்! தூய்மையும், பலமும்,அசாத்திய திறமையும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுகாலம் வந்து விடும்!" என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்தக் கிணற்றுத் தவளைகள்.
இந்த முறை அசாத்திய மாற்றம்! தவளைகளுக்குப் போட்டியாக பூச்சிகளை யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவளைகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!
சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையைப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா, தவளையே தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?" என்று மிச்சம் மீதியிருந்த தவளைகள் கவலையோடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்.
நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை..!
.
.
.
நன்றி: விகடன்
தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவளைகள். அதே கிணற்றில் இருந்த ஓர் ஆமைக்கு பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம் அந்த ஆமைகள். ஆமையோ, தவளைகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல், சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே சலித்துவிட்டதாம்.
"சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் வேண்டும்" என்று முடிவெடுத்து, ஒரு பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம். நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவளைகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவளைகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகளை எல்லாம் தானே பிடித்து தின்ன ஆரம்பித்துவிட்டதாம். பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவளைகள், "பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்" என்று வானத்தைப் பார்த்து பலமாக யோசித்தனவாம்.
அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு நாரை. "ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தனை அகலம்! தூய்மையும், பலமும்,அசாத்திய திறமையும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுகாலம் வந்து விடும்!" என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்தக் கிணற்றுத் தவளைகள்.
இந்த முறை அசாத்திய மாற்றம்! தவளைகளுக்குப் போட்டியாக பூச்சிகளை யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவளைகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!
சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையைப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா, தவளையே தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?" என்று மிச்சம் மீதியிருந்த தவளைகள் கவலையோடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்.
நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை..!
.
.
.
நன்றி: விகடன்
Tuesday, December 14, 2010
லட்சம் கோடி
தேசமே திரும்பிப் பார்த்த, அந்த மாபெரும் ஊழலின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.
மந்திரியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த அரசு தரப்பு வக்கீல் காட்டமாய் அவரிடம் கேட்டார்.
"இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய, நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா இல்லையா..?".
வக்கீல் கேட்டதும் எல்லோரும் மந்திரியைத் திரும்பிப் பார்க்க, அவரோ வக்கீல் கேட்டதே காதில் விழாததுபோல் நீதிமன்ற ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
வக்கீல் மறுபடி கேட்டார்.
"சொல்லுங்கள்... இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா, இல்லையா..?".
மந்திரி இப்போதும் எந்தச் சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் ஒருமுறை வக்கீல் கேட்க, மந்திரி வக்கீலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிற்பதைப் பார்த்த நீதிபதி, கோபத்துடன் சுத்தியலை டேபிள் மீது நாலு தட்டுத் தட்டி மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.
"மிஸ்டர் மந்திரி... வக்கீல் கேட்கிறர் அல்லவா..? பதில் சொல்லுங்கள் ..!".
"ஓ..!" நீதிபதி சொன்னதும் திரும்பிய மந்திரி சொன்னார்.
"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே..! இவ்வளவு நேரமும் வக்கீல் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!".
.
.
.
மந்திரியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த அரசு தரப்பு வக்கீல் காட்டமாய் அவரிடம் கேட்டார்.
"இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய, நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா இல்லையா..?".
வக்கீல் கேட்டதும் எல்லோரும் மந்திரியைத் திரும்பிப் பார்க்க, அவரோ வக்கீல் கேட்டதே காதில் விழாததுபோல் நீதிமன்ற ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
வக்கீல் மறுபடி கேட்டார்.
"சொல்லுங்கள்... இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா, இல்லையா..?".
மந்திரி இப்போதும் எந்தச் சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் ஒருமுறை வக்கீல் கேட்க, மந்திரி வக்கீலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிற்பதைப் பார்த்த நீதிபதி, கோபத்துடன் சுத்தியலை டேபிள் மீது நாலு தட்டுத் தட்டி மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.
"மிஸ்டர் மந்திரி... வக்கீல் கேட்கிறர் அல்லவா..? பதில் சொல்லுங்கள் ..!".
"ஓ..!" நீதிபதி சொன்னதும் திரும்பிய மந்திரி சொன்னார்.
"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே..! இவ்வளவு நேரமும் வக்கீல் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!".
.
.
.
Labels:
அரசு,
ஊழல்,
குறுக்கு விசாரணை,
கோடி,
நீதிமன்றம்,
லட்சம்,
வக்கீல்,
ஜன்னல்
2
comments
Monday, December 13, 2010
ஒரு டம்ளர் பால்
இரவு தூங்கப் போகும் முன் ஒரு பெரிய டம்ளரில் பால் குடிப்பது டேனியின் வழக்கம்.
அன்று ஒரு சின்ன விசேஷம் காரணமாக நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
எனவே, இரவு டேனிக்குப் பால் கொடுக்க கொஞ்சம் லேட்டாகிவிட்டது .
ஏற்கனவே ரகளை பண்ணுவதில் பிஹெச்டி வாங்கும் டேனி சொந்தங்களைப் பார்த்த உற்சாகத்தில், "எனக்குப் பால் கொடு..எனக்குப் பால் கொடு..!" என்று இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் கத்தி ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.
'சொந்தங்கள் முன்னால் இப்படி மானத்தை வாங்குகிறானே..' என்ற கடுப்பில் நான் அவனிடம் சற்று கோபமாகவே கேட்டேன்.
" ஏன் டேனி இப்படிக் கத்தற.. உன்னிடம் கொஞ்சம் கூடப் பொறுமையே இல்லையா...?".
அதற்கு டேனி இன்னும் கடுப்பேற்றும் விதத்தில் சிரித்தபடியே சொன்னான்.
"ஓ மை டியர் மம்மி... என்கிட்ட பொறுமை ரொம்ப இருக்கு. ஆனா, பால்தான் இல்லை...!".
.
.
.
அன்று ஒரு சின்ன விசேஷம் காரணமாக நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
எனவே, இரவு டேனிக்குப் பால் கொடுக்க கொஞ்சம் லேட்டாகிவிட்டது .
ஏற்கனவே ரகளை பண்ணுவதில் பிஹெச்டி வாங்கும் டேனி சொந்தங்களைப் பார்த்த உற்சாகத்தில், "எனக்குப் பால் கொடு..எனக்குப் பால் கொடு..!" என்று இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் கத்தி ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.
'சொந்தங்கள் முன்னால் இப்படி மானத்தை வாங்குகிறானே..' என்ற கடுப்பில் நான் அவனிடம் சற்று கோபமாகவே கேட்டேன்.
" ஏன் டேனி இப்படிக் கத்தற.. உன்னிடம் கொஞ்சம் கூடப் பொறுமையே இல்லையா...?".
அதற்கு டேனி இன்னும் கடுப்பேற்றும் விதத்தில் சிரித்தபடியே சொன்னான்.
"ஓ மை டியர் மம்மி... என்கிட்ட பொறுமை ரொம்ப இருக்கு. ஆனா, பால்தான் இல்லை...!".
.
.
.
Labels:
கத்தி,
சொந்தங்கள்,
டம்ளர்,
பால்,
பொறுமை,
மானம்,
ரகளை
0
comments
Saturday, December 11, 2010
தில்லுதுரயின் தாடி
தில்லுதுர ஒருசமயம் பிசினஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தார்.
ஊருக்குத் திரும்ப வந்தபோது, எல்லோரும் அவருடைய கேவலமான நீளமான தாடியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
நண்பர்களோ அவரது தாடி குறித்து அவரிடமே கிண்டல் செய்தனர்.
"என்ன தில்லு.. எதுக்காக இப்படி ஒரு கேவலமான தாடி..?".
பதிலுக்கு தில்லுதுர அதைவிடக் கேவலமாய் தாடியைப் பற்றி பதில் சொன்னார்.
அதைக்கேட்ட அவரது நண்பர்கள் மிக ஆச்சர்யமாய் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்கள்.
"பிடிக்கலைனா எதுக்கு தில்லு வளர்க்கிற..?".
தில்லுதுர அவர்களிடம் கூலாய் பதில் சொன்னார்.
"பிடிக்கலை... ஆனாலும் வளர்க்கணும்...!".
நண்பர்கள் திரும்பவும் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்.
"பிடிக்காததை ஏன் வளர்க்கிற.. எடுத்துட வேண்டியதுதான..?"
தில்லுதுர முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பதில் சொன்னார்.
"எடுத்திடலாம்னுதான் இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது... என் மனைவிக்கும் இந்த தாடி பிடிக்கலைனு...!".
.
.
.
ஊருக்குத் திரும்ப வந்தபோது, எல்லோரும் அவருடைய கேவலமான நீளமான தாடியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
நண்பர்களோ அவரது தாடி குறித்து அவரிடமே கிண்டல் செய்தனர்.
"என்ன தில்லு.. எதுக்காக இப்படி ஒரு கேவலமான தாடி..?".
பதிலுக்கு தில்லுதுர அதைவிடக் கேவலமாய் தாடியைப் பற்றி பதில் சொன்னார்.
அதைக்கேட்ட அவரது நண்பர்கள் மிக ஆச்சர்யமாய் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்கள்.
"பிடிக்கலைனா எதுக்கு தில்லு வளர்க்கிற..?".
தில்லுதுர அவர்களிடம் கூலாய் பதில் சொன்னார்.
"பிடிக்கலை... ஆனாலும் வளர்க்கணும்...!".
நண்பர்கள் திரும்பவும் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்.
"பிடிக்காததை ஏன் வளர்க்கிற.. எடுத்துட வேண்டியதுதான..?"
தில்லுதுர முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பதில் சொன்னார்.
"எடுத்திடலாம்னுதான் இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது... என் மனைவிக்கும் இந்த தாடி பிடிக்கலைனு...!".
.
.
.
Labels:
கேவலம்,
தாடி,
நண்பர்,
பிசினஸ்,
பிடிக்காதது,
வெளியூர்
4
comments
Friday, December 10, 2010
மழையின் காரணமாக பள்ளி விடுமுறை
மழையின் காரணமாக விடுமுறை என்பதால், இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் மகன் டேனியை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தேன்.
எதிர்பாராத விடுமுறை என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், அந்த டெலிபோன் கம்பங்களைப் பார்த்ததும் திடீரென என்னிடம் திரும்பிக் கேட்டான்.
"ஏம்மா... அந்த வயர்ல எல்லாம் கரண்ட் போகுதாம்மா..?".
நான் தமிழ் படித்தவள்.. கல்லூரியில் விரிவுரையாளர்.
எனக்கு அது டெலிபோன் சம்பந்தமான கம்பங்கள் என்று தெரியுமேயொழிய, அதில் கரண்ட் போகுதா... இல்லை, வெறும் சிக்னல்கள் மட்டும் போகுதா என்பது தெரியாது என்பதால் சொன்னேன்.
"எனக்கு சரியாத் தெரியலையேடா...!".
டேனி ஒன்றும் சொல்லாமல், அவனது சாலையோர விளையாட்டுகளில் கவனம் ஆனான்.
கொஞ்ச நேரம்தான்... இப்போது ஒரு சரியான மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான்.
"ஏம்மா... இந்த மின்னல், இடி எல்லாம் எப்படிம்மா வருது..?".
உண்மையில் எனக்கு சந்தேகமாக இருந்ததால் அவனிடம் சொன்னேன்.
"எனக்குத் தெரியலையேடா...!".
அடுத்து "ஓணான்ல கேர்ள்ஸ்னு எப்படிம்மா தெரிஞ்சுக்கறது..?" போல அவனது சந்தேகங்கள் எல்லாம் விதவிதமாய், வீடு வந்து சேரும்வரை வந்து கொண்டே இருந்தாலும், நான் சொன்ன பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
"எனக்குத் தெரியலையேடா...!".
'எப்படித்தான் இவனுக்கு இத்தனை சந்தேகங்கள் வருது... தெரியலையே?' என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறக்கையில் அவன் கேட்டான்.
"ஏம்மா... நான் ரொம்ப கேள்வி கேட்டு உன்னைத் தொந்தரவு பண்ணறேனா..?".
டேனி கேட்டதும் சந்தோஷமாய்,"இல்லைடா கண்ணா...!" என்று சொன்னவள் தொடர்ந்து சொன்னேன்.
"நீ நிறைய கேள்விகள் கேட்டாத்தான், நிறையா கத்துக்க முடியும்...!".
.
.
.
எதிர்பாராத விடுமுறை என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், அந்த டெலிபோன் கம்பங்களைப் பார்த்ததும் திடீரென என்னிடம் திரும்பிக் கேட்டான்.
"ஏம்மா... அந்த வயர்ல எல்லாம் கரண்ட் போகுதாம்மா..?".
நான் தமிழ் படித்தவள்.. கல்லூரியில் விரிவுரையாளர்.
எனக்கு அது டெலிபோன் சம்பந்தமான கம்பங்கள் என்று தெரியுமேயொழிய, அதில் கரண்ட் போகுதா... இல்லை, வெறும் சிக்னல்கள் மட்டும் போகுதா என்பது தெரியாது என்பதால் சொன்னேன்.
"எனக்கு சரியாத் தெரியலையேடா...!".
டேனி ஒன்றும் சொல்லாமல், அவனது சாலையோர விளையாட்டுகளில் கவனம் ஆனான்.
கொஞ்ச நேரம்தான்... இப்போது ஒரு சரியான மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான்.
"ஏம்மா... இந்த மின்னல், இடி எல்லாம் எப்படிம்மா வருது..?".
உண்மையில் எனக்கு சந்தேகமாக இருந்ததால் அவனிடம் சொன்னேன்.
"எனக்குத் தெரியலையேடா...!".
அடுத்து "ஓணான்ல கேர்ள்ஸ்னு எப்படிம்மா தெரிஞ்சுக்கறது..?" போல அவனது சந்தேகங்கள் எல்லாம் விதவிதமாய், வீடு வந்து சேரும்வரை வந்து கொண்டே இருந்தாலும், நான் சொன்ன பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
"எனக்குத் தெரியலையேடா...!".
'எப்படித்தான் இவனுக்கு இத்தனை சந்தேகங்கள் வருது... தெரியலையே?' என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறக்கையில் அவன் கேட்டான்.
"ஏம்மா... நான் ரொம்ப கேள்வி கேட்டு உன்னைத் தொந்தரவு பண்ணறேனா..?".
டேனி கேட்டதும் சந்தோஷமாய்,"இல்லைடா கண்ணா...!" என்று சொன்னவள் தொடர்ந்து சொன்னேன்.
"நீ நிறைய கேள்விகள் கேட்டாத்தான், நிறையா கத்துக்க முடியும்...!".
.
.
.
Wednesday, December 8, 2010
ரத்த சரித்திரம்
டேனி படிக்கும் வகுப்பில் உயிரியலில் ரத்த ஓட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர்.
மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.
"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".
மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.
ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.
"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".
எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.
"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
.
.
.
மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.
"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".
மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.
ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.
"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".
எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.
"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
.
.
.
Labels:
எளிமை,
கால்,
தலைகீழ்,
முகம்,
யோசனை,
ரத்த சரித்திரம்
7
comments
Tuesday, December 7, 2010
நம்ம சிங்
ரயில்வே ஸ்டேஷனில் யாருக்காகவோ காத்திருந்தார் கிட்டத்தட்ட எழுபது வயதுக்கும் மேலான, மிகவும் கிராமத்து விவசாயியான நம்ம சிங்.
பக்கத்தில் இருந்தவர் நம்ம சிங்கின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டார்.
"யாருக்காகவோ வெயிட் பண்ணறீங்க போலிருக்கே..?"
நம்ம சிங் முகத்தில் ஆர்வம் சற்றும் குறையாமல் சொன்னார்.
"ஆமா சார்.. சரியா சொன்னீங்க. இந்தியா சுதந்திரத்தப்ப ரெண்டாப் பிரிஞ்சு பாகிஸ்தான் ஆனது. அப்ப, அந்த நாட்டோட தங்கிட்ட என் பெரியப்பா பையன் இன்னிக்கு இந்தியாவுக்கு ட்ரெயின்ல வர்றான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...!".
பக்கத்தில் இருந்தவர் இப்போது கேட்டார்.
"இங்கிருந்து போனப்ப அவருக்கு என்ன வயசு இருக்கும்..?".
நம்ம சிங் சொன்னார்.
"ஒரு நாலு இல்லாட்டி அஞ்சு வயசு இருக்கும் சார்..!".
"அதுக்கப்புறம் எப்போதாவது அவரப் பாத்து இருக்கீங்களா..?".
நம்ம சிங் சோகமாய்ச் சொன்னார்.
"எங்கே.. யாரு விட்டா.? எழுதப்படிக்கத் தெரியதனால இதுவரைக்கும் ஒரு லெட்டர் போக்குவரத்துகூடக் கிடையாது. ஒரு ஃபோட்டோ கீட்டோ பார்த்தது கிடையாது. ஏதோ இப்ப ரெண்டு நாட்டுக்கு இடையில ரயில் ஓடறதால இப்பவாவது பாக்க முடிஞ்சது..."
கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகும் சகோதரர்கள்... நெகிழ்ச்சியுடன் பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.
"உங்களால இப்ப அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா..?".
நம்ம சிங் பரிதாபமாய்ச் சொன்னார்.
"அதெப்படிங்க முடியும்.? அவனை நான் கடைசியா அறுபது எழுவது வருஷத்துக்கு முன்னால சின்னப்பையனா இருந்தப்ப பார்த்தது..! இப்ப என்ன வயசாச்சோ.. எவ்வளோ பெருசா இருக்கானோ..!".
அதே சோகத்துடன் பக்கத்திலிருந்தவர் கேட்டார்.
"அப்ப.. அவராவது உங்களை கண்டுபுடிச்சுடுவாரா..?".
பக்கத்தில் இருந்தவர் கேட்டதும் நம்ம சிங் உற்சாகமாய் பதில் சொன்னார்.
"கண்டிப்பா அவன் என்னைக் கண்டுபுடிச்சுடுவான் சார். ஏன்னா, நான் எங்கேயும் போகலியே... இங்கேயேதான இருக்கேன்..!".
.
.
.
பக்கத்தில் இருந்தவர் நம்ம சிங்கின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டார்.
"யாருக்காகவோ வெயிட் பண்ணறீங்க போலிருக்கே..?"
நம்ம சிங் முகத்தில் ஆர்வம் சற்றும் குறையாமல் சொன்னார்.
"ஆமா சார்.. சரியா சொன்னீங்க. இந்தியா சுதந்திரத்தப்ப ரெண்டாப் பிரிஞ்சு பாகிஸ்தான் ஆனது. அப்ப, அந்த நாட்டோட தங்கிட்ட என் பெரியப்பா பையன் இன்னிக்கு இந்தியாவுக்கு ட்ரெயின்ல வர்றான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...!".
பக்கத்தில் இருந்தவர் இப்போது கேட்டார்.
"இங்கிருந்து போனப்ப அவருக்கு என்ன வயசு இருக்கும்..?".
நம்ம சிங் சொன்னார்.
"ஒரு நாலு இல்லாட்டி அஞ்சு வயசு இருக்கும் சார்..!".
"அதுக்கப்புறம் எப்போதாவது அவரப் பாத்து இருக்கீங்களா..?".
நம்ம சிங் சோகமாய்ச் சொன்னார்.
"எங்கே.. யாரு விட்டா.? எழுதப்படிக்கத் தெரியதனால இதுவரைக்கும் ஒரு லெட்டர் போக்குவரத்துகூடக் கிடையாது. ஒரு ஃபோட்டோ கீட்டோ பார்த்தது கிடையாது. ஏதோ இப்ப ரெண்டு நாட்டுக்கு இடையில ரயில் ஓடறதால இப்பவாவது பாக்க முடிஞ்சது..."
கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகும் சகோதரர்கள்... நெகிழ்ச்சியுடன் பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.
"உங்களால இப்ப அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா..?".
நம்ம சிங் பரிதாபமாய்ச் சொன்னார்.
"அதெப்படிங்க முடியும்.? அவனை நான் கடைசியா அறுபது எழுவது வருஷத்துக்கு முன்னால சின்னப்பையனா இருந்தப்ப பார்த்தது..! இப்ப என்ன வயசாச்சோ.. எவ்வளோ பெருசா இருக்கானோ..!".
அதே சோகத்துடன் பக்கத்திலிருந்தவர் கேட்டார்.
"அப்ப.. அவராவது உங்களை கண்டுபுடிச்சுடுவாரா..?".
பக்கத்தில் இருந்தவர் கேட்டதும் நம்ம சிங் உற்சாகமாய் பதில் சொன்னார்.
"கண்டிப்பா அவன் என்னைக் கண்டுபுடிச்சுடுவான் சார். ஏன்னா, நான் எங்கேயும் போகலியே... இங்கேயேதான இருக்கேன்..!".
.
.
.
Labels:
அடையாளம்,
இந்தியா,
எழுதப்படிக்க,
சுதந்திரம்,
நெகிழ்ச்சி,
பாகிஸ்தான்,
ரயில்
0
comments
Saturday, December 4, 2010
மிட்டாய்க் கடவுள்
கோவில் ஒன்றில் சிறுவர்களுக்காக ஏற்பாடாகியிருந்த, அந்த ஒருநாள் நிகழ்ச்சியின் மதிய உணவு நேரம்.
தனக்குத் தானே பறிமாறிக் கொள்ளும் முறையில் அமைந்திருந்தது அந்த உணவு வேளை.
குழந்தைகளுக்கு சாப்பாடு முடிந்து வரிசையாய் வெளியேறும் இடத்தில், இரண்டு பெரிய தட்டுகளில் முதல் தட்டில் நிறைய பிஸ்கெட்டுகள் இருந்தன.
குழந்தைகள் அதை நெருங்கும்போது, ஒரு பகதர் தட்டின் அருகே இவ்வாறு எழுதி வைத்திருப்பதைக் கவனித்தார்கள்.
"கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்..!".
அந்த வரிசை இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் அடுத்த தட்டில் நிறைய சாக்லேட்டுகள் இருப்பது தெரிந்தது.
முன்னால் இருந்த ஒரு சிறுவன், 'சாக்லெட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா... இல்லை இரண்டை எடுக்கலாமா...?' என்று குழப்பத்துடன் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த டேனி சொன்னான்.
"டேய் ரமேஷ்... எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. கடவுள் பிஸ்கெட்டைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு..!".
.
.
.
தனக்குத் தானே பறிமாறிக் கொள்ளும் முறையில் அமைந்திருந்தது அந்த உணவு வேளை.
குழந்தைகளுக்கு சாப்பாடு முடிந்து வரிசையாய் வெளியேறும் இடத்தில், இரண்டு பெரிய தட்டுகளில் முதல் தட்டில் நிறைய பிஸ்கெட்டுகள் இருந்தன.
குழந்தைகள் அதை நெருங்கும்போது, ஒரு பகதர் தட்டின் அருகே இவ்வாறு எழுதி வைத்திருப்பதைக் கவனித்தார்கள்.
"கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்..!".
அந்த வரிசை இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் அடுத்த தட்டில் நிறைய சாக்லேட்டுகள் இருப்பது தெரிந்தது.
முன்னால் இருந்த ஒரு சிறுவன், 'சாக்லெட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா... இல்லை இரண்டை எடுக்கலாமா...?' என்று குழப்பத்துடன் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த டேனி சொன்னான்.
"டேய் ரமேஷ்... எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. கடவுள் பிஸ்கெட்டைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு..!".
.
.
.
Friday, December 3, 2010
தண்டச்சோறு தில்லுதுர
பொருளாதார வீழ்ச்சி தில்லுதுரயையும் பாதித்திருந்த காலம் அது.
தில்லுதுர தன் பிசினஸையும் கவனிக்காமல், வேலைக்கும் போகாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவியின் குடும்பம் மொத்தமுமே, தில்லுதுரயின் குடும்பத்தை சப்போர்ட் செய்து கொண்டிருந்தது.
யார் யாரோ எவ்வளவோ சொல்லியும், தில்லுதுர அசைவதாய் இல்லை.
வீட்டுச் செலவைச் சமாளிக்க, பொருளாதாரத் தேவைகளைச் சாமாளிக்க பணமும் இன்னபிறவும் தில்லுதுரயின் மாமியார் வீட்டிலிருந்தே வந்து கொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான், அந்த மாதச் செலவுக்காக அப்பா அனுப்பிய பணத்தைப் பெற்றுக் கொண்ட மனைவி, தில்லுதுரயிடம் வருத்தத்துடன் சொன்னாள்.
"எனக்கே கேவலமாய் இருக்கு. என் அப்பா சாப்பாட்டுக்குப் பணம் அனுப்பறாரு. அண்ணன் துணிமணிகள் எடுத்துக் கொடுத்துடறான். தம்பி காய்கறி பூராவும் அனுப்பிடறான். இதெல்லாம் போக, என்னோட ஒரு மாமாவும் மளிகைச் சாமானுக்காக பணம் அனுப்பறாரு. இதெல்லாம் வெளியே சொல்லக் கூட எனக்கு வெட்கமாய் இருக்கு...!"
கேட்டுக் கொண்டிருந்த தில்லுதுர அதைவிட வருத்தத்துடன் சொன்னார்.
"ஆமாம், எனக்கும் வெட்கமாத்தான் இருக்கு. உன்னுடைய ஒரு மாமாதான் பணம் அனுப்ப்றாரு... இன்னொரு மாமா எதுவுமே செய்யறதில்லியே...!".
.
.
.
தில்லுதுர தன் பிசினஸையும் கவனிக்காமல், வேலைக்கும் போகாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவியின் குடும்பம் மொத்தமுமே, தில்லுதுரயின் குடும்பத்தை சப்போர்ட் செய்து கொண்டிருந்தது.
யார் யாரோ எவ்வளவோ சொல்லியும், தில்லுதுர அசைவதாய் இல்லை.
வீட்டுச் செலவைச் சமாளிக்க, பொருளாதாரத் தேவைகளைச் சாமாளிக்க பணமும் இன்னபிறவும் தில்லுதுரயின் மாமியார் வீட்டிலிருந்தே வந்து கொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான், அந்த மாதச் செலவுக்காக அப்பா அனுப்பிய பணத்தைப் பெற்றுக் கொண்ட மனைவி, தில்லுதுரயிடம் வருத்தத்துடன் சொன்னாள்.
"எனக்கே கேவலமாய் இருக்கு. என் அப்பா சாப்பாட்டுக்குப் பணம் அனுப்பறாரு. அண்ணன் துணிமணிகள் எடுத்துக் கொடுத்துடறான். தம்பி காய்கறி பூராவும் அனுப்பிடறான். இதெல்லாம் போக, என்னோட ஒரு மாமாவும் மளிகைச் சாமானுக்காக பணம் அனுப்பறாரு. இதெல்லாம் வெளியே சொல்லக் கூட எனக்கு வெட்கமாய் இருக்கு...!"
கேட்டுக் கொண்டிருந்த தில்லுதுர அதைவிட வருத்தத்துடன் சொன்னார்.
"ஆமாம், எனக்கும் வெட்கமாத்தான் இருக்கு. உன்னுடைய ஒரு மாமாதான் பணம் அனுப்ப்றாரு... இன்னொரு மாமா எதுவுமே செய்யறதில்லியே...!".
.
.
.
Labels:
அண்ணன்,
அப்பா,
சப்போர்ட்,
தம்பி,
பொருளாதார வீழ்ச்சி,
மாதச் செலவு,
மாமா,
வெட்கம்
1 comments
Wednesday, December 1, 2010
அவ்வளவுக்கவ்வளவு
துறவியிடம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "
துறவி சொன்னார்.
"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".
அவன் தொடர்ந்து கேட்டான்.
"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"
"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".
அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.
"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".
துறவி சிரித்தபடி சொன்னார்.
"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.
"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".
துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.
"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.
"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "
துறவி சொன்னார்.
"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".
அவன் தொடர்ந்து கேட்டான்.
"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"
"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".
அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.
"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".
துறவி சிரித்தபடி சொன்னார்.
"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.
"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".
துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.
"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.
Tuesday, November 30, 2010
டேனியும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கும்
நான் ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.
மொழியை மோசமாய்க் கையாளும் யாரைக் கண்டாலும் கோபமாய் வரும் எனக்கு.
என் மகன் டேனியோ, அவனது தந்தையின் விருப்பப்படி கான்வென்டில் படிப்பவன்.
ஆங்கிலம் கலக்காமல் அவனுக்கு ஒரு வாக்கியம் கூடப் பேசவே வராது.
அதனால், அவன் ஆங்கிலம் பேசும்போது அதற்கிணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருவதும் அதை அவனைப் பேச வைப்பதும் என் வழக்கம்.
இது சம்பந்தமாக அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும் எங்களுக்குள்.
அன்றும் அப்பிடித்தான்...
நான் டேனியுயுடன் கடைவீதியில் வீட்டிற்குத் தேவையான எல்லாம் வாங்கிவிட்டு திரும்பும் போது, டீ சாப்பிடுவதற்காக ஒரு நல்ல அடுமனைக்குள்(பேக்கரி) நுழைந்தோம்.
அடுமனையில் நல்ல நல்ல கேக்குகளைப் பார்த்த டேனி,"அம்மா... ஒரு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குமா..!"என்றான் கண்கள் நிறைய ஆவலுடன்.
நான் 'சரி' சொல்லவும் சந்தோசமாய் கடைக்காரரை அழைத்து கேக்கை ஆர்டர் செய்துவிட்டு,"ஹை சூப்பர்... ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ரொம்ப அட்டகாசமாய் இருக்கும்..! ஐ ஜஸ்ட் லவ் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்..." என்றான்.
நான் வழக்கம்போல்,"என்ன மொழி பேசற நீ...? சூப்பர்,அட்டகாசம்,ஜஸ்ட் லவ்னு... ஒழுங்கா நல்லாத் தமிழ்ல சொல்லு. இல்லைனா, உனக்கு கேக் கிடையாது...!".
சொல்லிவிட்டு நான் கோபமாய்த் திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
டேனி என் வருத்தத்தைச் சங்கடத்துடன் கவனித்தவன், "சரிம்மா... நான் தெளிவாத் தமிழ்ல சொல்லறேன்..."என்றவன், கடைக்காரர் கொண்டுவந்து டேபிளில் வைத்த கேக்கை ஆவலுடன் பார்த்தபடியே சொன்னான்.
"ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மிக நன்றாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்..!".
நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பும்போது அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.
"ஆனா அம்மா... இந்த மாதிரிச் சொல்லும்போது எனக்கு என்னவோ ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கைப் பத்திச் சொல்லற மாதிரியே இல்லை. ஏதோ... காய்ச்சலுக்கு வாங்கிட்டுப் போற காய்ஞ்சுபோன ப்ரட்டைப் பத்திச் சொல்லற மாதிரித்தான் இருக்கு...!".
.
.
.
மொழியை மோசமாய்க் கையாளும் யாரைக் கண்டாலும் கோபமாய் வரும் எனக்கு.
என் மகன் டேனியோ, அவனது தந்தையின் விருப்பப்படி கான்வென்டில் படிப்பவன்.
ஆங்கிலம் கலக்காமல் அவனுக்கு ஒரு வாக்கியம் கூடப் பேசவே வராது.
அதனால், அவன் ஆங்கிலம் பேசும்போது அதற்கிணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருவதும் அதை அவனைப் பேச வைப்பதும் என் வழக்கம்.
இது சம்பந்தமாக அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும் எங்களுக்குள்.
அன்றும் அப்பிடித்தான்...
நான் டேனியுயுடன் கடைவீதியில் வீட்டிற்குத் தேவையான எல்லாம் வாங்கிவிட்டு திரும்பும் போது, டீ சாப்பிடுவதற்காக ஒரு நல்ல அடுமனைக்குள்(பேக்கரி) நுழைந்தோம்.
அடுமனையில் நல்ல நல்ல கேக்குகளைப் பார்த்த டேனி,"அம்மா... ஒரு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குமா..!"என்றான் கண்கள் நிறைய ஆவலுடன்.
நான் 'சரி' சொல்லவும் சந்தோசமாய் கடைக்காரரை அழைத்து கேக்கை ஆர்டர் செய்துவிட்டு,"ஹை சூப்பர்... ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ரொம்ப அட்டகாசமாய் இருக்கும்..! ஐ ஜஸ்ட் லவ் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்..." என்றான்.
நான் வழக்கம்போல்,"என்ன மொழி பேசற நீ...? சூப்பர்,அட்டகாசம்,ஜஸ்ட் லவ்னு... ஒழுங்கா நல்லாத் தமிழ்ல சொல்லு. இல்லைனா, உனக்கு கேக் கிடையாது...!".
சொல்லிவிட்டு நான் கோபமாய்த் திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
டேனி என் வருத்தத்தைச் சங்கடத்துடன் கவனித்தவன், "சரிம்மா... நான் தெளிவாத் தமிழ்ல சொல்லறேன்..."என்றவன், கடைக்காரர் கொண்டுவந்து டேபிளில் வைத்த கேக்கை ஆவலுடன் பார்த்தபடியே சொன்னான்.
"ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மிக நன்றாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்..!".
நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பும்போது அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.
"ஆனா அம்மா... இந்த மாதிரிச் சொல்லும்போது எனக்கு என்னவோ ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கைப் பத்திச் சொல்லற மாதிரியே இல்லை. ஏதோ... காய்ச்சலுக்கு வாங்கிட்டுப் போற காய்ஞ்சுபோன ப்ரட்டைப் பத்திச் சொல்லற மாதிரித்தான் இருக்கு...!".
.
.
.
Labels:
ஆங்கிலம்,
கடைவீதி,
காய்ச்சல்,
காய்ஞ்சு,
கேக்,
டீ,
ப்ரட்,
ப்ளாக் ஃபாரஸ்ட்
7
comments
Thursday, November 25, 2010
நாயே நாயே
நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடி வந்தபோது நடந்து இது.
என் மகன் டேனியின் செல்ல நாய்குட்டி சீஸரை எங்கே விடுவது என்று ஒரு மஹா குழப்பம் இருந்தது.
கோவையில் நாங்கள் இருந்த வீடு தனி வீடு; அதனால், நாய் வளர்ப்பது பெரிய இடைஞ்சலாய் இல்லை.
ஆனால், நாங்கள் சென்னையில் பார்த்திருப்பதோ ஒரு நெருக்கமான அபார்ட்மென்ட்; அதில், சீஸரை வைத்திருப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்பது எனக்கும் கணவருக்கும் யோசனையாய் இருந்தது.
என்றாலும், டேனி சீஸர் இல்லாமல் ஏங்கிப் போய்விடுவானே என்று நாயையும் எங்களுடனேயே அழைத்து வந்துவிட்டோம்.
சென்னை வந்து ரொம்ப நாள் ஆனபின்னாலும்கூட வீட்டுக்குள்ளேயே இருப்பது, சீஸருக்குப் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்தது.
சின்னதாய் கதவைத் திறந்தாலும் வெளியே ஓடிவிடுவது அதன் குணமாய் இருந்தது.
அப்படித்தான் ஒரு சனிக்கிழமை நடந்தது.
டேனி ஸ்கூலுக்குப் போயிருந்தான்.
நான் கேஸ் வந்திருக்கிறது என்று சமயலறையின் உள்ளே சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, கதவு திறந்திருக்க அதன் வழியே சீஸர் வெளியே ஓடிவிட்டது.
கேஸ்காரர் வெளியே போய் சற்று நேரத்துக்கு அப்புறம்தான், சீஸர் வீட்டுக்குள் இல்லை என்பதே எங்களுக்கு உறைத்தது.
வெளியே இறங்கி அபார்ட்மென்ட் முழுவதும் தேடியாகிவிட்டது.
அக்கம்பக்கம், அபார்ட்மென்ட் வாட்ச்மேன் யாரும் சீஸரை கவனிக்கவில்லை என்பதால், காரை எடுத்துக் கொண்டு தெரு, மெயின் ரோடு எல்லாம் தேடியும் கிடைக்காமல்... ஒவ்வொரு தெருவாய் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே வந்தோம்.
சுத்தமாய் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டோம்... சீஸர் கிடைக்கவில்லை.
டேனி வந்ததும் சீஸர் இல்லை என்றால் அழுவானே என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற பயம் அதிகமாக... என் கணவரும் காரை நிறுத்தி எதிரில் வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.
"தம்பி... இந்தப் பக்கமா ஒரு ப்ரவுன் கலர் நாய் எதையாவதைப் பார்த்தியா.? எங்க நாயைக் காணோம்..!".
என் கணவர் கேட்டு முடித்ததும் அந்தச் சிறுவன் பதிலுக்குச் சிரித்தபடியே அவரிடம் கேட்டான்.
"எந்த நாய் அங்கிள்... ரொம்ப நேரமா உங்க கார் பின்னாடியே ஓடி வந்திட்டிருக்கே, அந்த நாயவா தேடறீங்க..?".
.
.
.
என் மகன் டேனியின் செல்ல நாய்குட்டி சீஸரை எங்கே விடுவது என்று ஒரு மஹா குழப்பம் இருந்தது.
கோவையில் நாங்கள் இருந்த வீடு தனி வீடு; அதனால், நாய் வளர்ப்பது பெரிய இடைஞ்சலாய் இல்லை.
ஆனால், நாங்கள் சென்னையில் பார்த்திருப்பதோ ஒரு நெருக்கமான அபார்ட்மென்ட்; அதில், சீஸரை வைத்திருப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்பது எனக்கும் கணவருக்கும் யோசனையாய் இருந்தது.
என்றாலும், டேனி சீஸர் இல்லாமல் ஏங்கிப் போய்விடுவானே என்று நாயையும் எங்களுடனேயே அழைத்து வந்துவிட்டோம்.
சென்னை வந்து ரொம்ப நாள் ஆனபின்னாலும்கூட வீட்டுக்குள்ளேயே இருப்பது, சீஸருக்குப் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்தது.
சின்னதாய் கதவைத் திறந்தாலும் வெளியே ஓடிவிடுவது அதன் குணமாய் இருந்தது.
அப்படித்தான் ஒரு சனிக்கிழமை நடந்தது.
டேனி ஸ்கூலுக்குப் போயிருந்தான்.
நான் கேஸ் வந்திருக்கிறது என்று சமயலறையின் உள்ளே சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, கதவு திறந்திருக்க அதன் வழியே சீஸர் வெளியே ஓடிவிட்டது.
கேஸ்காரர் வெளியே போய் சற்று நேரத்துக்கு அப்புறம்தான், சீஸர் வீட்டுக்குள் இல்லை என்பதே எங்களுக்கு உறைத்தது.
வெளியே இறங்கி அபார்ட்மென்ட் முழுவதும் தேடியாகிவிட்டது.
அக்கம்பக்கம், அபார்ட்மென்ட் வாட்ச்மேன் யாரும் சீஸரை கவனிக்கவில்லை என்பதால், காரை எடுத்துக் கொண்டு தெரு, மெயின் ரோடு எல்லாம் தேடியும் கிடைக்காமல்... ஒவ்வொரு தெருவாய் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே வந்தோம்.
சுத்தமாய் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டோம்... சீஸர் கிடைக்கவில்லை.
டேனி வந்ததும் சீஸர் இல்லை என்றால் அழுவானே என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற பயம் அதிகமாக... என் கணவரும் காரை நிறுத்தி எதிரில் வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.
"தம்பி... இந்தப் பக்கமா ஒரு ப்ரவுன் கலர் நாய் எதையாவதைப் பார்த்தியா.? எங்க நாயைக் காணோம்..!".
என் கணவர் கேட்டு முடித்ததும் அந்தச் சிறுவன் பதிலுக்குச் சிரித்தபடியே அவரிடம் கேட்டான்.
"எந்த நாய் அங்கிள்... ரொம்ப நேரமா உங்க கார் பின்னாடியே ஓடி வந்திட்டிருக்கே, அந்த நாயவா தேடறீங்க..?".
.
.
.
Labels:
அபார்ட்மென்ட்,
குழப்பம்,
கேஸ்,
சீஸர்,
ப்ரவுன்,
மஹா,
மெயின்,
ரவுண்ட்
9
comments
Tuesday, November 23, 2010
மாணவன் குறும்பு
அப்போது நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.
நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.
ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.
ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.
எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.
"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."
நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.
"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.
நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.
ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.
ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.
எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.
"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."
நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.
"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.
Labels:
க்ளாஸ் டீச்சர்,
டாக்டர்,
தூண்டு,
மெட்ரிகுலேஷன்,
வக்கீல்,
ஸ்டூடண்ட்
5
comments
Friday, November 19, 2010
ஒரே ஒரு டால்மேஷன்
தில்லுதுரயின் பையன் '101 டால்மேஷன் ' படம் பார்த்துவிட்டு வந்ததும் அதேபோல் எனக்கும் ஒரு நாய் வேண்டும் என்று ரகளை பண்ண ஆரம்பித்துவிட்டான்.
வெள்ளை உடலில் கருப்பு புள்ளிகளுடன் இருக்குமே, அதுதான் டால்மேஷன்.
அந்தப் படம் 101 டால்மேஷன் நாய்களைப் பற்றிய கதை என்பதால், தில்லுதுரயின் பையன் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி.. 'நாய் உடனே வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு' என்று ஒற்றைக் காலில் நின்றான்.
தில்லுதுரயும் ஒவ்வொரு பெட் ஷாப்பாய் அழைந்து கடைசியில், ஒரு குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஓரளவு பெரிய குட்டி என்பதால், விலையும் கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால், மகன் கேட்டதாயிற்றே...!
நாய்க்குட்டி நன்றாகத்தான் வளர்ந்துவந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்ததும்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
நாய் ஏதோ வியாதி கண்டு, சினிமா ஹீரோபோல் ரத்தரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தது.
என்னென்ன வெட்னரி டாக்டர் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய்க் காட்டியாகிவிட்டது.
நாய் தேறிய பாட்டைக் காணோம்... பத்தாதற்கு வியாதி இன்னும் முற்றிக் கொண்டே போனது.
பையனின் அழுகை தாங்காமல், இன்னும் புதிய டாக்டர்களைத் தேடி அழையும் போதுதான் தில்லுதுரைக்கு நண்பர் ராஜாவின் ஞாபகம் வந்தது.
ஒருமுறை, அவர் வீட்டு நாய்க்கும் இதேபோல் பிரச்சினை என்று சொன்னது ஞாபகம் வந்ததும்... உடனே அவருக்கு போன் செய்து கேட்டார்.
"அந்த வியாதிக்கு உன் நாய்க்கு என்ன மருந்து கொடுத்தே ராஜா..?".
ராஜா மறுமுனையில் சொன்னார்.
"டர்பன்டைன் கொடுத்தேன்..!".
தில்லுதுர உடனே உற்சாகமாய் 'நன்றி' சொல்லிவிட்டு, கடைவீதி போய் தேடித் தேடி டர்பன்டைன் வாங்கி வந்து நாய்க்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
ரெண்டே நாள்... டால்மேஷனின் நிலைமை இன்னும் மோசமாகி இறந்தேபோய் விட்டது.
ரொம்பவும் சோகத்துடன் மறுபடி ராஜாவுக்கு போன் செய்தார் தில்லுதுர.
"ராஜா... நீ சொன்னபடி நாய்க்கு டர்பன்டைன் கொடுத்தேன். ஆனாலும், நாய் ரெக்கவர் ஆகல... செத்துப் போச்சு..!".
தில்லுதுர சொன்னதும் மறுமுனையில் ராஜா கூலாய்ச் சொன்னார்.
"ஆமா நண்பா... என் நாய்கூட செத்துப் போச்சு..!".
.
.
.
வெள்ளை உடலில் கருப்பு புள்ளிகளுடன் இருக்குமே, அதுதான் டால்மேஷன்.
அந்தப் படம் 101 டால்மேஷன் நாய்களைப் பற்றிய கதை என்பதால், தில்லுதுரயின் பையன் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி.. 'நாய் உடனே வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு' என்று ஒற்றைக் காலில் நின்றான்.
தில்லுதுரயும் ஒவ்வொரு பெட் ஷாப்பாய் அழைந்து கடைசியில், ஒரு குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஓரளவு பெரிய குட்டி என்பதால், விலையும் கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால், மகன் கேட்டதாயிற்றே...!
நாய்க்குட்டி நன்றாகத்தான் வளர்ந்துவந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்ததும்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
நாய் ஏதோ வியாதி கண்டு, சினிமா ஹீரோபோல் ரத்தரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தது.
என்னென்ன வெட்னரி டாக்டர் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய்க் காட்டியாகிவிட்டது.
நாய் தேறிய பாட்டைக் காணோம்... பத்தாதற்கு வியாதி இன்னும் முற்றிக் கொண்டே போனது.
பையனின் அழுகை தாங்காமல், இன்னும் புதிய டாக்டர்களைத் தேடி அழையும் போதுதான் தில்லுதுரைக்கு நண்பர் ராஜாவின் ஞாபகம் வந்தது.
ஒருமுறை, அவர் வீட்டு நாய்க்கும் இதேபோல் பிரச்சினை என்று சொன்னது ஞாபகம் வந்ததும்... உடனே அவருக்கு போன் செய்து கேட்டார்.
"அந்த வியாதிக்கு உன் நாய்க்கு என்ன மருந்து கொடுத்தே ராஜா..?".
ராஜா மறுமுனையில் சொன்னார்.
"டர்பன்டைன் கொடுத்தேன்..!".
தில்லுதுர உடனே உற்சாகமாய் 'நன்றி' சொல்லிவிட்டு, கடைவீதி போய் தேடித் தேடி டர்பன்டைன் வாங்கி வந்து நாய்க்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
ரெண்டே நாள்... டால்மேஷனின் நிலைமை இன்னும் மோசமாகி இறந்தேபோய் விட்டது.
ரொம்பவும் சோகத்துடன் மறுபடி ராஜாவுக்கு போன் செய்தார் தில்லுதுர.
"ராஜா... நீ சொன்னபடி நாய்க்கு டர்பன்டைன் கொடுத்தேன். ஆனாலும், நாய் ரெக்கவர் ஆகல... செத்துப் போச்சு..!".
தில்லுதுர சொன்னதும் மறுமுனையில் ராஜா கூலாய்ச் சொன்னார்.
"ஆமா நண்பா... என் நாய்கூட செத்துப் போச்சு..!".
.
.
.
Labels:
இம்ப்ரஸ்,
குட்டி,
டர்பன்டைன்,
டால்மேஷன்,
வாந்தி,
ஹீரோ
3
comments
Thursday, November 18, 2010
தில்லுதுரயும் டாக்ஸியும்
தில்லுதுர அன்று அலுவலக வேலையாய் ஒரு மீட்டிங்கிற்காக கோவை வந்திருந்தார்.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.
கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.
டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.
அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.
எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.
தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.
டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.
"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".
தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.
"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".
இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.
"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.
கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.
டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.
அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.
எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.
தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.
டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.
"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".
தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.
"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".
இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.
"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.
Labels:
அமைதி,
உத்தரவு,
கோவை,
பெருமூச்சு,
மீட்டிங்,
மேடு,
லேப்டாப்,
ஹோட்டல்
6
comments
Tuesday, November 16, 2010
மகளிர் மட்டும்
ராஃபியா பஸிரி ஒரு பெண் ஸூஃபி.
ஒரு முறை அவரைச் சந்தித்த சிலர்,சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, அவரை அவமானப்படுத்தும் நோக்குடன் அவரிடம் கேட்டார்கள்.
"என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு பெண்தானே..! இறைவன் தனது தூதர்களாக ஆண்களை மட்டும்தானே அனுப்பி வைத்திருக்கிறான்.. அது ஏன்? பெண்களின் பலவீனங்களைத் தெரிந்ததால்தானே, அவன் பெண்களைத் தன் தூதர்களாய் அனுப்பவில்லை..?".
உடனே, ராஃபியா பஸிரி அவர்கள் அறியாமையைப் பார்த்துப் புன்னகைத்தபடி கூறினார்.
"நீங்கள் சொல்வது மிகச் சரிதான் நண்பர்களே..! ஆனால், நீங்கள் சொல்லும் அந்தத் தூதர்களை பெற்றெடுக்க இறைவன் பெண்களைத்தானே தேர்ந்தெடுத்திருக்கிறார். நீங்கள் சொல்லும் எந்த ஆணையும் அவர் அதற்குத் தேர்ந்தெடுக்கவில்லையே..!".
கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க... நண்பர்களோ சொல்ல பதிலின்றி வாயடைத்து நின்றனர்.
.
.
.
ஒரு முறை அவரைச் சந்தித்த சிலர்,சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, அவரை அவமானப்படுத்தும் நோக்குடன் அவரிடம் கேட்டார்கள்.
"என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு பெண்தானே..! இறைவன் தனது தூதர்களாக ஆண்களை மட்டும்தானே அனுப்பி வைத்திருக்கிறான்.. அது ஏன்? பெண்களின் பலவீனங்களைத் தெரிந்ததால்தானே, அவன் பெண்களைத் தன் தூதர்களாய் அனுப்பவில்லை..?".
உடனே, ராஃபியா பஸிரி அவர்கள் அறியாமையைப் பார்த்துப் புன்னகைத்தபடி கூறினார்.
"நீங்கள் சொல்வது மிகச் சரிதான் நண்பர்களே..! ஆனால், நீங்கள் சொல்லும் அந்தத் தூதர்களை பெற்றெடுக்க இறைவன் பெண்களைத்தானே தேர்ந்தெடுத்திருக்கிறார். நீங்கள் சொல்லும் எந்த ஆணையும் அவர் அதற்குத் தேர்ந்தெடுக்கவில்லையே..!".
கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க... நண்பர்களோ சொல்ல பதிலின்றி வாயடைத்து நின்றனர்.
.
.
.
Thursday, November 11, 2010
மளிகைக்கடை நாடார்
மருதாசல நாடார் தனது மரணப் படுக்கையில் கிடந்தார்.
மருதாசல நாடாரை எங்க பக்கம் மளிகைக்கடை நாடார் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.
எங்கோ உடன்குடியில் பிறந்தவர், இன்று சென்னையில் இவ்வளவு லட்சத்திற்கு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்றால்... அதற்கு அவருடைய மளிகைக்கடையும் மாறாத உழைப்பும்தான் காரணம்.
அப்பேர்ப்பட்ட மருதாசலநாடார் தான் இப்போது படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்.
ரெண்டு நாளாய் தொடர்ந்து மயக்கத்தில் இருந்தவர், காலை ஒரு பதினோரு மணிப் போல கண்ணைத் திறந்ததும், அருகில் சோகமே வடிவாய் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
"மூத்தவன் எங்கேடி...?"
மனைவி அவரது கைகளை ஆறுதலாய்ப் பற்றிக் கொண்டு பதில் சொன்னார்.
"அதோ பாருங்க... அந்த பெஞ்ச்லதான் உக்காந்திருக்கான். நீங்க நல்லபடி எந்திரிச்சு வரணும்னு சாமி கும்பிட்டுகிட்டு இருக்கான்..."
மருதாசல நாடார் அடுத்துக் கேட்டார்.
"ரெண்டாவது மகன் இருக்கானா..?".
மனைவி பதில் சொன்னாள்.
"அவனும் மூத்தவனுக்குப் பக்கத்திலதான் நிக்கறான் பாருங்க.."
இதைக் கேட்டதும், மருதாசல நாடார் படுக்கையில் தட்டுத்தடுமாறி எழுந்து உட்காரப் பார்த்தார்.
அதைக் கண்டதும் பதறிப் போன மனைவி கேட்டார்.
"என்னங்க... என்ன வேணும் சொல்லுங்க..?".
மருதாசல நாடார் கேட்டார்.
"எ..எ..என் மூணாவது பையன்...?".
கேட்கும்போதே மூச்சு வாங்கியது அவருக்கு.
இதைக்கேட்டதும் அவர் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
'இவருக்குத்தான் குடும்பத்தின்மீது எவ்வளவு அன்பு..?' என்று எண்ணியபடியே மூன்றாவது மகன் சொன்னான்.
"அப்பா... நான் இங்கேதான் இருக்கேன்... நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம். நீங்க இந்த நேரத்துல எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க..!".
மரணப் படுக்கையில் இருந்த மருதாசல நாடார் சற்றே கோபமாய் திணறித் திணறிக் கோபமாய்க் கத்தினார்.
"நீங்க எல்லோரும் இங்கே இருந்தா நான் கவலைப்படாம எப்படி இருக்க முடியும்..? என் கவலையே அதுதான்டா ... எல்லோருமே இங்கே இருந்தா அப்ப அங்கே கடையை கவனிக்கறது யாரு..?".
.
.
.
மருதாசல நாடாரை எங்க பக்கம் மளிகைக்கடை நாடார் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.
எங்கோ உடன்குடியில் பிறந்தவர், இன்று சென்னையில் இவ்வளவு லட்சத்திற்கு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்றால்... அதற்கு அவருடைய மளிகைக்கடையும் மாறாத உழைப்பும்தான் காரணம்.
அப்பேர்ப்பட்ட மருதாசலநாடார் தான் இப்போது படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்.
ரெண்டு நாளாய் தொடர்ந்து மயக்கத்தில் இருந்தவர், காலை ஒரு பதினோரு மணிப் போல கண்ணைத் திறந்ததும், அருகில் சோகமே வடிவாய் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
"மூத்தவன் எங்கேடி...?"
மனைவி அவரது கைகளை ஆறுதலாய்ப் பற்றிக் கொண்டு பதில் சொன்னார்.
"அதோ பாருங்க... அந்த பெஞ்ச்லதான் உக்காந்திருக்கான். நீங்க நல்லபடி எந்திரிச்சு வரணும்னு சாமி கும்பிட்டுகிட்டு இருக்கான்..."
மருதாசல நாடார் அடுத்துக் கேட்டார்.
"ரெண்டாவது மகன் இருக்கானா..?".
மனைவி பதில் சொன்னாள்.
"அவனும் மூத்தவனுக்குப் பக்கத்திலதான் நிக்கறான் பாருங்க.."
இதைக் கேட்டதும், மருதாசல நாடார் படுக்கையில் தட்டுத்தடுமாறி எழுந்து உட்காரப் பார்த்தார்.
அதைக் கண்டதும் பதறிப் போன மனைவி கேட்டார்.
"என்னங்க... என்ன வேணும் சொல்லுங்க..?".
மருதாசல நாடார் கேட்டார்.
"எ..எ..என் மூணாவது பையன்...?".
கேட்கும்போதே மூச்சு வாங்கியது அவருக்கு.
இதைக்கேட்டதும் அவர் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
'இவருக்குத்தான் குடும்பத்தின்மீது எவ்வளவு அன்பு..?' என்று எண்ணியபடியே மூன்றாவது மகன் சொன்னான்.
"அப்பா... நான் இங்கேதான் இருக்கேன்... நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம். நீங்க இந்த நேரத்துல எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க..!".
மரணப் படுக்கையில் இருந்த மருதாசல நாடார் சற்றே கோபமாய் திணறித் திணறிக் கோபமாய்க் கத்தினார்.
"நீங்க எல்லோரும் இங்கே இருந்தா நான் கவலைப்படாம எப்படி இருக்க முடியும்..? என் கவலையே அதுதான்டா ... எல்லோருமே இங்கே இருந்தா அப்ப அங்கே கடையை கவனிக்கறது யாரு..?".
.
.
.
Labels:
உடன்குடி,
நாடார்,
பதறி,
பையன்,
மளிகைக்கடை,
மூத்தவன்
4
comments
Wednesday, November 10, 2010
வோடஃபோன் நாய்க்குட்டி
அது நாங்கள் புதிதாய் வீடு வாங்கிக் குடியேறியிருந்த நேரம்.
வீட்டில் எல்லா மரச் சாமான்களும் புதிதாய் வாங்கியிருந்தோம்.
என் கணவர் அன்று வீட்டுக்கு வரும்போது, என் மகன் டேனிக்குப் ரொம்ப நாளாய் அவன் கேட்டுக் கொண்டிருந்த, விளம்பரங்களில் வரும் நாயின் குட்டி ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்திருந்தார்.
மொபைல் விளம்பரங்களில் ஒரு பையன் பின்னால் ஓடிக் கொண்டிருக்குமே அந்த நாய்... அதைப்போலவே அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தது.
நாய்க்குட்டி பார்ப்பதற்கு உண்மையிலேயே மிக அழகாயிருந்தாலும், அதனிடம் ஒரு கெட்ட பழக்கம் எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாய் இருந்தது.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவுமில்லாமல் அதற்கு தோன்றும் போதெல்லாம், அப்போதுதான் புதிதாய் வாங்கியிருந்த ஷோஃபாவை பின்புறம் 'க்ரீச்.. க்ரீச்..' எனப் பிராண்டுவது அதற்கு பிடித்தமான பழக்கமாய் இருந்தது.
ஷோஃபா நாசமாவது தாங்காமல் ஒருநாள், ஒரு குச்சியைத் தூக்கிக் கொண்டு அந்த நாயை அடிக்கப் போகையில், எங்கிருந்தோ ஓடி வந்த டேனி அதைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு என்னைப் பார்த்து பரிதாபமாய் சொன்னான்.
"அம்மா அடிக்காதம்மா... நான் இந்த நாயை எப்படி ட்ரெயின் பண்ணறேன் பாரேன்..!" என்றவன் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
அதற்கப்புறம், நிறைய நாட்கள் டேனி அந்த நாய்க்குட்டியை பொறுமையாய்ப் பழக்குவதை நான் பார்த்திருக்கிறேன்.
எப்போதெல்லாம் அந்த நாய், என் ஷோஃபாவைப் பிராண்டுகிறதோ அப்போதெல்லாம் என் மகன் எனக்குத் தொந்தரவில்லாமல் நாயை டிரெயின் பண்ண பொறுப்புடன் வெளியே தூக்கிச் செல்லுவதைப் பற்றி பெருமையுடன் என் கணவரிடம் சொல்லியிருக்கிறேன்.
அந்த நாயும், வெகு சீக்கிரமே பழகி விட்டதென்றே நினைக்கிறேன்.
அதற்கப்புறம், அது எப்போதெல்லாம் வெளியே போக ஆசைப்பட்டதோ... அப்போதெல்லாம் அது ஷோஃபாவைப் பிராண்டக் கற்றுக் கொண்டு விட்டது.
.
.
.
வீட்டில் எல்லா மரச் சாமான்களும் புதிதாய் வாங்கியிருந்தோம்.
என் கணவர் அன்று வீட்டுக்கு வரும்போது, என் மகன் டேனிக்குப் ரொம்ப நாளாய் அவன் கேட்டுக் கொண்டிருந்த, விளம்பரங்களில் வரும் நாயின் குட்டி ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்திருந்தார்.
மொபைல் விளம்பரங்களில் ஒரு பையன் பின்னால் ஓடிக் கொண்டிருக்குமே அந்த நாய்... அதைப்போலவே அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தது.
நாய்க்குட்டி பார்ப்பதற்கு உண்மையிலேயே மிக அழகாயிருந்தாலும், அதனிடம் ஒரு கெட்ட பழக்கம் எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாய் இருந்தது.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவுமில்லாமல் அதற்கு தோன்றும் போதெல்லாம், அப்போதுதான் புதிதாய் வாங்கியிருந்த ஷோஃபாவை பின்புறம் 'க்ரீச்.. க்ரீச்..' எனப் பிராண்டுவது அதற்கு பிடித்தமான பழக்கமாய் இருந்தது.
ஷோஃபா நாசமாவது தாங்காமல் ஒருநாள், ஒரு குச்சியைத் தூக்கிக் கொண்டு அந்த நாயை அடிக்கப் போகையில், எங்கிருந்தோ ஓடி வந்த டேனி அதைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு என்னைப் பார்த்து பரிதாபமாய் சொன்னான்.
"அம்மா அடிக்காதம்மா... நான் இந்த நாயை எப்படி ட்ரெயின் பண்ணறேன் பாரேன்..!" என்றவன் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
அதற்கப்புறம், நிறைய நாட்கள் டேனி அந்த நாய்க்குட்டியை பொறுமையாய்ப் பழக்குவதை நான் பார்த்திருக்கிறேன்.
எப்போதெல்லாம் அந்த நாய், என் ஷோஃபாவைப் பிராண்டுகிறதோ அப்போதெல்லாம் என் மகன் எனக்குத் தொந்தரவில்லாமல் நாயை டிரெயின் பண்ண பொறுப்புடன் வெளியே தூக்கிச் செல்லுவதைப் பற்றி பெருமையுடன் என் கணவரிடம் சொல்லியிருக்கிறேன்.
அந்த நாயும், வெகு சீக்கிரமே பழகி விட்டதென்றே நினைக்கிறேன்.
அதற்கப்புறம், அது எப்போதெல்லாம் வெளியே போக ஆசைப்பட்டதோ... அப்போதெல்லாம் அது ஷோஃபாவைப் பிராண்டக் கற்றுக் கொண்டு விட்டது.
.
.
.
Labels:
க்ரீச்,
டிரெயின்,
நாசம்,
நாய்க்குட்டி,
பிடித்தம்,
மொபைல்,
வோடஃபோன்,
ஷோஃபா
6
comments
Tuesday, November 9, 2010
மாமியாரின் ஆசை
இது எப்போதும் எங்கள் வீட்டில் நடப்பதுதான்.
என் கணவர், அவருடைய அம்மாவை நான் எப்போதுமே சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்.
கணவர் வெளியூரில் இருக்க, பள்ளிக்குச் செல்லும் குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தபடி, என்னால் மாமியாரை எவ்வளவு கவனிக்க முடியுமோ அதற்கும் மேலேதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனாலும், இந்தப் பிரச்சினை அடிக்கடி வந்தபடியேதான் இருக்கும்.
மனதார எந்தத் தவறும் என்மேல் இல்லாதபோது, அவர் குற்றம் சொல்லி... அதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கும்போது பிரச்சினை முற்றி சண்டையில் முடிவது போல்தான் அன்றும் நடந்தது.
சண்டையின் இடையே என் கணவர் கோபத்துடன் சொன்னார்.
"எல்லாம் என்னோட தப்புடி. 'படிச்ச பொண்ணக் கட்டிக்காத... படிச்ச பொண்ணக் கட்டிக்காத'னு என் அப்பா தலையால தண்ணி குடிச்சாரு. நாந்தான் உன்னையே கட்டிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப அவஸ்தைப் படறேன்..!".
நானும் மிதமிஞ்சிய கோபத்தில் கண்ணீருடன் சொன்னேன்.
"நானும்தான்... என் அம்மா 'இந்த சம்பந்தம் வேண்டாம்'னு சொன்னப்ப அவங்க சொல்பேச்சு கேட்டிருந்தாக்கூட நான் இப்ப இவ்வளோ கஷ்டப்பட வேண்டியதில்லையே..!".
கோபத்தில் நான் சடாரென்று உண்மையை உளறியதும், அதுவரை சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த என் கணவர் சட்டென்று அமைதியாகிப் போனார்.
முகமெல்லாம் ஒரு மாதிரி மாறிப்போய், யோசித்தபடியே திரும்பிய அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.
"என்ன சொன்ன... உன் அம்மா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்களா..?".
எனக்கிருந்த கோபத்தில் அப்போதும் என்ன செய்கிறேன் என்பது கூட உறைக்காமல் ஆவேசமாய், 'ஆமாம்..!' என்று தலையாட்டினேன்.
மெல்லிய யோசனையுடன் திரும்பியவர் சொன்னார்.
"எப்பேர்ப்பட்ட பொம்பள உன் அம்மா.." என்றவர் தொடர்ந்து கிண்டலாய்ச் சொன்னார்.
"எவ்வளவு நல்லெண்ணம் அவங்களுக்கு ... நான் நல்லா இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டிருக்காங்க... அவங்களப் போயி நான் தப்பா நெனச்சுட்டேனே..!".
.
.
.
என் கணவர், அவருடைய அம்மாவை நான் எப்போதுமே சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்.
கணவர் வெளியூரில் இருக்க, பள்ளிக்குச் செல்லும் குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தபடி, என்னால் மாமியாரை எவ்வளவு கவனிக்க முடியுமோ அதற்கும் மேலேதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனாலும், இந்தப் பிரச்சினை அடிக்கடி வந்தபடியேதான் இருக்கும்.
மனதார எந்தத் தவறும் என்மேல் இல்லாதபோது, அவர் குற்றம் சொல்லி... அதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கும்போது பிரச்சினை முற்றி சண்டையில் முடிவது போல்தான் அன்றும் நடந்தது.
சண்டையின் இடையே என் கணவர் கோபத்துடன் சொன்னார்.
"எல்லாம் என்னோட தப்புடி. 'படிச்ச பொண்ணக் கட்டிக்காத... படிச்ச பொண்ணக் கட்டிக்காத'னு என் அப்பா தலையால தண்ணி குடிச்சாரு. நாந்தான் உன்னையே கட்டிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப அவஸ்தைப் படறேன்..!".
நானும் மிதமிஞ்சிய கோபத்தில் கண்ணீருடன் சொன்னேன்.
"நானும்தான்... என் அம்மா 'இந்த சம்பந்தம் வேண்டாம்'னு சொன்னப்ப அவங்க சொல்பேச்சு கேட்டிருந்தாக்கூட நான் இப்ப இவ்வளோ கஷ்டப்பட வேண்டியதில்லையே..!".
கோபத்தில் நான் சடாரென்று உண்மையை உளறியதும், அதுவரை சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த என் கணவர் சட்டென்று அமைதியாகிப் போனார்.
முகமெல்லாம் ஒரு மாதிரி மாறிப்போய், யோசித்தபடியே திரும்பிய அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.
"என்ன சொன்ன... உன் அம்மா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்களா..?".
எனக்கிருந்த கோபத்தில் அப்போதும் என்ன செய்கிறேன் என்பது கூட உறைக்காமல் ஆவேசமாய், 'ஆமாம்..!' என்று தலையாட்டினேன்.
மெல்லிய யோசனையுடன் திரும்பியவர் சொன்னார்.
"எப்பேர்ப்பட்ட பொம்பள உன் அம்மா.." என்றவர் தொடர்ந்து கிண்டலாய்ச் சொன்னார்.
"எவ்வளவு நல்லெண்ணம் அவங்களுக்கு ... நான் நல்லா இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டிருக்காங்க... அவங்களப் போயி நான் தப்பா நெனச்சுட்டேனே..!".
.
.
.
Labels:
குற்றம்,
சண்டை,
சம்பந்தம்,
நல்லெண்ணம்,
பொம்பள,
மிதமிஞ்சிய,
விரிவுரையாளர்
10
comments
Tuesday, November 2, 2010
சகிக்கமுடியாத மனைவி
தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் டாக்டரைப் பார்க்க அழைத்துப் போனார் தில்லுதுர.
சற்று கவனிக்க வேண்டிய நிலையில் தில்லுதுரயின் மனைவி இருந்ததால், டாக்டர் சிலபல செக்கப்களை செய்யச் சொன்னார்.
எல்லாவற்றையும் முடித்து வந்ததும் ரிப்போர்ட்களைப் பார்த்த டாக்டர், தில்லுதுரயிடம் அவர் மனைவியின் நிலை குறித்துக் கேட்டார்.
"என்ன உங்க வொய்ஃப் இப்படி இருக்காங்க..? பார்க்கவே சகிக்கலை...!".
டாக்டர் கேட்டதும், தில்லுதுர தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னார்.
"ஆமா டாக்டர். என்னாலயும்தான் சகிச்சுக்க முடியல. என்ன பண்ணறது..? ஆனா, நல்லா சமைப்பா டாக்டர். அதுவுமில்லாம என் குழந்தைகளுக்கும் அவள்னா உயிரு...!" என்றார்.
.
.
.
சற்று கவனிக்க வேண்டிய நிலையில் தில்லுதுரயின் மனைவி இருந்ததால், டாக்டர் சிலபல செக்கப்களை செய்யச் சொன்னார்.
எல்லாவற்றையும் முடித்து வந்ததும் ரிப்போர்ட்களைப் பார்த்த டாக்டர், தில்லுதுரயிடம் அவர் மனைவியின் நிலை குறித்துக் கேட்டார்.
"என்ன உங்க வொய்ஃப் இப்படி இருக்காங்க..? பார்க்கவே சகிக்கலை...!".
டாக்டர் கேட்டதும், தில்லுதுர தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னார்.
"ஆமா டாக்டர். என்னாலயும்தான் சகிச்சுக்க முடியல. என்ன பண்ணறது..? ஆனா, நல்லா சமைப்பா டாக்டர். அதுவுமில்லாம என் குழந்தைகளுக்கும் அவள்னா உயிரு...!" என்றார்.
.
.
.
Labels:
உடல்நிலை,
குழந்தை,
டாக்டர்,
மனைவி,
ரிப்போர்ட்,
வொய்ஃப்
4
comments
Saturday, October 30, 2010
என்ன ருசி...என்ன ருசி...?
ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மிகவும் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலைச் சந்திக்க வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார்.
அண்ணலைப் பார்த்து தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் கொடுத்தார் அந்தப் பெண்மணி.
சிரித்துக் கொண்டே அதில் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்ட அண்ணல் அவர்கள், பிறகு யாருக்கும் கொடுக்காமல் அந்தப் பெண்மணியின் கண் முன்னாலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.
அந்தப் பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.
அவர் சென்றபின் நண்பர்கள் அண்ணலிடம் கேட்டனர்.
''அண்ணலே... இது என்ன புதுப் பழக்கம்?. வழக்கமாக யார், எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்துத்தானே சாப்பிடுவீர்கள்... ஆனால், இன்று பழம் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே, பழம் மிக ருசியாய் இருந்ததோ..?''
புன்னகையுடன் அண்ணல் சொன்னார்.
''அந்தப் பெண்மணி கொடுத்த பழத்தில் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகவும் புளிப்பாக இருந்தது. உங்களிடம் கொடுத்தால் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது இயல்பாய் சொல்லியிருப்பீர்கள். அதைக்கேட்டு அந்த பெண்ணின் மனம் மிகவும் வருத்தமாகி இருக்கும். அதனால்தான் சிரித்துக் கொண்டே, நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். அந்த பெண்ணின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் பார்த்தீர்களா..?.
.
.
அப்போது மிகவும் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலைச் சந்திக்க வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார்.
அண்ணலைப் பார்த்து தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் கொடுத்தார் அந்தப் பெண்மணி.
சிரித்துக் கொண்டே அதில் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்ட அண்ணல் அவர்கள், பிறகு யாருக்கும் கொடுக்காமல் அந்தப் பெண்மணியின் கண் முன்னாலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.
அந்தப் பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.
அவர் சென்றபின் நண்பர்கள் அண்ணலிடம் கேட்டனர்.
''அண்ணலே... இது என்ன புதுப் பழக்கம்?. வழக்கமாக யார், எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்துத்தானே சாப்பிடுவீர்கள்... ஆனால், இன்று பழம் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே, பழம் மிக ருசியாய் இருந்ததோ..?''
புன்னகையுடன் அண்ணல் சொன்னார்.
''அந்தப் பெண்மணி கொடுத்த பழத்தில் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகவும் புளிப்பாக இருந்தது. உங்களிடம் கொடுத்தால் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது இயல்பாய் சொல்லியிருப்பீர்கள். அதைக்கேட்டு அந்த பெண்ணின் மனம் மிகவும் வருத்தமாகி இருக்கும். அதனால்தான் சிரித்துக் கொண்டே, நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். அந்த பெண்ணின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் பார்த்தீர்களா..?.
.
.
Labels:
அண்ணல் நபி,
சந்தோசம்,
திராட்சை,
பழம்,
புளிப்பு,
பெண்மணி,
ருசி
4
comments
Friday, October 29, 2010
கேள்வியே இல்லாத நிலை
மனோதத்துவ நிபுணர் ஒருவர் ஸென் ஞானி ஒருவரைச் சந்தித்தபோது நிகழ்ந்தது இது.
அவருக்கு தீராத சந்தேகம் ஒன்று இருப்பதாக ஸென் துறவியைப் பார்த்துக் கேட்டார்.
"எந்த விதத்தில் மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்..?.
அதற்கு ஸென் ஞானி அந்த மனோதத்துவ நிபுணரிடம் சொன்னார்.
"அவர்களால் மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிடுவேன்....!".
.
.
அவருக்கு தீராத சந்தேகம் ஒன்று இருப்பதாக ஸென் துறவியைப் பார்த்துக் கேட்டார்.
"எந்த விதத்தில் மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்..?.
அதற்கு ஸென் ஞானி அந்த மனோதத்துவ நிபுணரிடம் சொன்னார்.
"அவர்களால் மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிடுவேன்....!".
.
.
Labels:
உதவு,
கேள்வி,
ஞானி,
தீராத சந்தேகம்,
நிபுணர்,
நிலை
3
comments
Thursday, October 28, 2010
பொறியாளர்
மதுரை மாநாட்டில் அம்மா சொன்ன குட்டிக் கதை இது.
ஒரு புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் இருந்தார்.
அவர் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பாலத்தைக் கட்டினார்.
அந்தப் பாலத்தின் தன்மை மற்றும் உறுதி பற்றிக் கூறும்போது அவர் சொன்னார்.
"இந்தப் பாலம் முப்பது டன் எடை வரை தாங்கக்கூடியது. ஆனால், அதற்குமேல் ஒரு குண்டூசி வெயிட் அதிகமானால்கூட பாலம் உடைந்து நொறுங்கிவிடும்...!" என்றாராம்.
அதையும் செக் செய்துவிடலாம் என்று, மொத்த எடையுடன் தனது எடையும் சேர்த்து சரியாய் முப்பது டன் எடையுடன் ஒரு லாரி பாலத்தின் மீது அனுப்பப்பட்டது.
லாரி கிளம்பி கிட்டத்தட்ட நடுப்பாலம் வரை வந்துவிட்டது.
அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.
எங்கிருந்தோ பறந்து வந்த நான்கு புறாக்கள் லாரியின் மீது சாவகாசமாய் வந்து அமர்ந்தன.
எல்லோரும், பாலம் எப்போது உடையுமோ என்று திக் திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திற்கு எந்த ஒரு சேதமும் இல்லாமல்... லாரி பாலத்தின் மறுபக்கம் வந்து சேர்ந்தது.
எல்லோரும் அந்த பொறியாளரைப் பார்த்து,"என்ன உங்க கணக்கு தப்பாகிவிட்டதே..?" என்று கேட்க, அந்த பொறியாளர் சொன்னார்.
"என் கணக்கு எப்போதும் தப்பாகாது. லாரி பாலத்தின் இந்த முனையிலிருந்து கிளம்பி நடுவே வருவதற்கு ஒன்றரை கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் வருவதற்கு செலவான டீசலின் எடையைவிட புறாக்களின் எடை குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான், பாலம் உடையவில்லை..!" என்று விளக்கம் கொடுத்துவிட்டு தனது மாணவர்களுடன் நடந்து போனாராம்.
.
.
.
ஒரு புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் இருந்தார்.
அவர் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பாலத்தைக் கட்டினார்.
அந்தப் பாலத்தின் தன்மை மற்றும் உறுதி பற்றிக் கூறும்போது அவர் சொன்னார்.
"இந்தப் பாலம் முப்பது டன் எடை வரை தாங்கக்கூடியது. ஆனால், அதற்குமேல் ஒரு குண்டூசி வெயிட் அதிகமானால்கூட பாலம் உடைந்து நொறுங்கிவிடும்...!" என்றாராம்.
அதையும் செக் செய்துவிடலாம் என்று, மொத்த எடையுடன் தனது எடையும் சேர்த்து சரியாய் முப்பது டன் எடையுடன் ஒரு லாரி பாலத்தின் மீது அனுப்பப்பட்டது.
லாரி கிளம்பி கிட்டத்தட்ட நடுப்பாலம் வரை வந்துவிட்டது.
அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.
எங்கிருந்தோ பறந்து வந்த நான்கு புறாக்கள் லாரியின் மீது சாவகாசமாய் வந்து அமர்ந்தன.
எல்லோரும், பாலம் எப்போது உடையுமோ என்று திக் திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திற்கு எந்த ஒரு சேதமும் இல்லாமல்... லாரி பாலத்தின் மறுபக்கம் வந்து சேர்ந்தது.
எல்லோரும் அந்த பொறியாளரைப் பார்த்து,"என்ன உங்க கணக்கு தப்பாகிவிட்டதே..?" என்று கேட்க, அந்த பொறியாளர் சொன்னார்.
"என் கணக்கு எப்போதும் தப்பாகாது. லாரி பாலத்தின் இந்த முனையிலிருந்து கிளம்பி நடுவே வருவதற்கு ஒன்றரை கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் வருவதற்கு செலவான டீசலின் எடையைவிட புறாக்களின் எடை குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான், பாலம் உடையவில்லை..!" என்று விளக்கம் கொடுத்துவிட்டு தனது மாணவர்களுடன் நடந்து போனாராம்.
.
.
.
Labels:
எடை,
கிலோமீட்டர்,
குண்டூசி,
திருடன்,
பாலம்,
புறா,
பொறியாளர்,
மதுரை
6
comments
ஸென் குட்டிக் கதை
இது ஒரு ஸென் பள்ளியில் நடந்த சுவையான நிகழ்ச்சி.
மாணவன் : "எதற்காக நாங்கள் தியான வகுப்பு முடிந்ததும், தலை வணங்க வேண்டும்...?"
ஆசிரியர் : "ஒரு வழியாக முடிந்ததே, என்று கடவுளுக்கு நன்றி கூறுவதற்காக..!" என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
.
.
மாணவன் : "எதற்காக நாங்கள் தியான வகுப்பு முடிந்ததும், தலை வணங்க வேண்டும்...?"
ஆசிரியர் : "ஒரு வழியாக முடிந்ததே, என்று கடவுளுக்கு நன்றி கூறுவதற்காக..!" என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
.
.
Wednesday, October 27, 2010
அழகுக் குறிப்பு
அன்று விடுமுறையாதலால் வீட்டிலேயே இயற்கை முறையில் ஃபேஷியல் செய்வதாக முடிவு செய்தேன்.
வீட்டில் அவரும் இல்லாதது, இன்னும் வசதியாய்ப் போனது.
சமீபத்தில், ஒரு புத்தகத்தில் அதற்கான வழிமுறைகளை வேறு படித்திருந்தது என்னை இன்னுமே தைரியமாய் இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது.
புத்தகத்தில் சொன்னபடி ஒரு தக்காளி, ஒரு சின்ன வெள்ளரிப் பிஞ்சு, நாலைந்து கறிவேப்பிலை எல்லாம் எடுத்து மிக்ஸியில் அடிப்பதையும், பிறகு எலுமிச்சை ஒரு மூடி அதில் பிழிவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நான்கு வயது மகன் டேனி.
இதையெல்லாம் ஏதோ புதிய சமையல் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், அந்தக் க்ரீமை எடுத்து என் முகத்தில் பூசத் துவங்கியதும் குழப்பத்துடன் கேட்டான்.
"என்னம்மா பண்ணறே..?".
நான் அவனுக்கும் புரியட்டுமே என்று விளக்கமாய்ச் சொன்னேன்.
"இதுக்குப் பேருதான் ஃபேஷியல்..!".
அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
"இதை எதுக்கு செய்யணும்..?".
"இப்படி செஞ்சா அம்மா இன்னும் அழகாயிடுவேன்..!".
சொல்லிக் கொண்டே நான் இன்னும் க்ரீமைப் பூசிக் கொண்டிருக்க, என் முகம் முழுவதும் அது கவர் ஆகி அவனுக்கு விநோதமாய்த் தெரிய, அவன் பேசுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
புத்தகத்தில் சொன்னபடி பத்து நிமிடங்களில், காய்ந்துபோன அந்தக் கிரீமை மெல்ல இழுக்க அது தோல் போல உரிந்துவர ஆரம்பித்தது.
அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேனி, அப்போது தன் மழலை மாறாமல் கேட்டான்.
"ஏம்மா... வேணாம்னு விட்டுட்டியா...?".
.
.
.
வீட்டில் அவரும் இல்லாதது, இன்னும் வசதியாய்ப் போனது.
சமீபத்தில், ஒரு புத்தகத்தில் அதற்கான வழிமுறைகளை வேறு படித்திருந்தது என்னை இன்னுமே தைரியமாய் இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது.
புத்தகத்தில் சொன்னபடி ஒரு தக்காளி, ஒரு சின்ன வெள்ளரிப் பிஞ்சு, நாலைந்து கறிவேப்பிலை எல்லாம் எடுத்து மிக்ஸியில் அடிப்பதையும், பிறகு எலுமிச்சை ஒரு மூடி அதில் பிழிவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நான்கு வயது மகன் டேனி.
இதையெல்லாம் ஏதோ புதிய சமையல் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், அந்தக் க்ரீமை எடுத்து என் முகத்தில் பூசத் துவங்கியதும் குழப்பத்துடன் கேட்டான்.
"என்னம்மா பண்ணறே..?".
நான் அவனுக்கும் புரியட்டுமே என்று விளக்கமாய்ச் சொன்னேன்.
"இதுக்குப் பேருதான் ஃபேஷியல்..!".
அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
"இதை எதுக்கு செய்யணும்..?".
"இப்படி செஞ்சா அம்மா இன்னும் அழகாயிடுவேன்..!".
சொல்லிக் கொண்டே நான் இன்னும் க்ரீமைப் பூசிக் கொண்டிருக்க, என் முகம் முழுவதும் அது கவர் ஆகி அவனுக்கு விநோதமாய்த் தெரிய, அவன் பேசுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
புத்தகத்தில் சொன்னபடி பத்து நிமிடங்களில், காய்ந்துபோன அந்தக் கிரீமை மெல்ல இழுக்க அது தோல் போல உரிந்துவர ஆரம்பித்தது.
அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேனி, அப்போது தன் மழலை மாறாமல் கேட்டான்.
"ஏம்மா... வேணாம்னு விட்டுட்டியா...?".
.
.
.
Labels:
அழகுக்குறிப்பு,
இயற்கைமுறை,
கறிவேப்பிலை,
தக்காளி,
பேஷியல்,
மிக்ஸி,
வெள்ளரி
5
comments
Tuesday, October 26, 2010
விமலாவும் வேதிகாவும் பின்னெ ஒரு முதலாளியும்
விமலாவும் வேதிகாவும் அந்தக் கம்பெனியில் ஒரே நாளில்தான் இன்டர்வியூவுக்கு வந்தார்கள்.
இருவருமே நல்ல அழகிகள்.
அந்தக் கம்பெனியில் சேர்வதற்கு அழகும் ஒரு முக்கியமான விஷயமாய் இருந்ததால், வந்திருந்த எத்தனையோ பேர்களில் அவர்கள் இருவர் மட்டுமே, அந்தக் கம்பெனியின் இளைய முதலாளியால் அங்கே வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
விமலா கடின உழைப்பாளி. அவள் கடினமாக உழைத்தாள். வேலையில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எந்த வேலையைத் தொட்டாலும் வெற்றிகரமாய் முடித்தாள். வெகு சீக்கிரமாய், அவள் வேலை செய்த பிரிவின் தலைவியாகப் பதவி உயர்வு பெற்றாள்.
ஆனால் வேதிகாவோ... வேலையே செய்யவில்லை. தான் அழகாய் இருப்பதிலேயே கவனம் செலுத்தினாள். பியூட்டி பார்லரே கதி என்று கிடந்தாள். உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்வதும், உடைகளை விலையுயர்ந்ததாய் உடுத்துவதுமே அவள் குறியாய் இருந்தது.
அவள், வெகுவிரைவில் அந்தக் கம்பெனி இளைய முதலாளியை கல்யாணம் செய்து கொண்டு முதலாளியம்மா ஆகிவிட்டாள்.
.
.
.
இருவருமே நல்ல அழகிகள்.
அந்தக் கம்பெனியில் சேர்வதற்கு அழகும் ஒரு முக்கியமான விஷயமாய் இருந்ததால், வந்திருந்த எத்தனையோ பேர்களில் அவர்கள் இருவர் மட்டுமே, அந்தக் கம்பெனியின் இளைய முதலாளியால் அங்கே வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
விமலா கடின உழைப்பாளி. அவள் கடினமாக உழைத்தாள். வேலையில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எந்த வேலையைத் தொட்டாலும் வெற்றிகரமாய் முடித்தாள். வெகு சீக்கிரமாய், அவள் வேலை செய்த பிரிவின் தலைவியாகப் பதவி உயர்வு பெற்றாள்.
ஆனால் வேதிகாவோ... வேலையே செய்யவில்லை. தான் அழகாய் இருப்பதிலேயே கவனம் செலுத்தினாள். பியூட்டி பார்லரே கதி என்று கிடந்தாள். உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்வதும், உடைகளை விலையுயர்ந்ததாய் உடுத்துவதுமே அவள் குறியாய் இருந்தது.
அவள், வெகுவிரைவில் அந்தக் கம்பெனி இளைய முதலாளியை கல்யாணம் செய்து கொண்டு முதலாளியம்மா ஆகிவிட்டாள்.
.
.
.
Labels:
அழகி,
இளைய,
உடை,
உழைப்பாளி,
தலைவி,
பியூட்டி பார்லர்,
முதலாளி,
வெற்றி
8
comments
Monday, October 25, 2010
சாவே போ
முத்துசாமி ஒரு தீவிர கடவுள் பக்தன்.
எல்லாம் கடவுளால் மட்டுமே நடக்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவான் முத்துசாமி.
சின்ன வயதில் ஊருக்கு வந்த ஒரு சாமியாரை சந்தித்த பின்னால்தான், அவனுக்கு அவன் வாழ்வில் மாற்றங்கள் வர ஆரம்பித்தது.
"சிவனைக் கும்பிடு.. சிவனைக் கும்பிடு.. வாழ்க்கை மேல போகும்..!" என்று போகிற போக்கில் அந்த சாமியார் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
முத்துசாமி அதை நம்பினான் என்று சொல்லக்கூடாது.
அப்படியே பைத்தியமாய் சிவனைக் கும்பிட ஆரம்பித்தான்.
வாழ்க்கை மாற ஆரம்பித்தது.
பூஜ்யமாய் இருந்த அவன் வாழ்வில், இன்று இந்தச் சின்ன வயதிலேயே கோடிக் கோடியான பணத்தில் புரள்வதற்குக் காரணம் சிவன் தான் என்பது அவனுக்குத் தெரியும்.
சம்பாதிப்பதில் பாதியை அவன் சிவாலயங்களுக்கும் சிவனடியார்களுக்குமே செலவழித்து வந்தான் அவன்.
பணம் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், அவனுடைய பக்தியும் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தது.
சாமியார், சிவனடியார் என்று சுற்றிக் கொண்டிருந்தவன்.. இப்போது, சித்தர்கள் என சுற்ற ஆரம்பித்தான்.
திருவண்ணாமலை, கொல்லிமலை, சதுரகிரி என அவன் சித்தர்களை பல இடங்களில், மலைகளில், குகைகளில், இன்னும் பல ரகசிய இடங்களில் அவன் சித்தர்களை சந்தித்து பல நம்பமுடியாத சக்திகளைப் பெற்றுவிட்டான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
கடைசியில் முத்துசாமி வந்து நின்ற இடம் சாவே இல்லாத வாழ்க்கை... மரணமற்ற பெரு வாழ்வு.
அவன், தான் கற்றுக் கொண்ட சித்துக்களை வைத்து ஒரு பெருந்தவம் செய்ய ஆரம்பித்தான்.
தவம்னா இப்படி அப்படி சாதாரண தவம் அல்ல... மிரண்டு போய் அந்த சிவனே முத்துசாமியின் முன்னால் வந்து நிற்கும் அளவுக்கு கடுந்தவம்.
முன்னால் வந்து நின்ற சிவன் சொன்னார்.
"பக்தா... உன் கடுந்தவம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்ன வரம் வேண்டும் உனக்கு..? கேள், தருகிறேன்..!".
முத்துசாமி கேட்டான்.
"கடவுளே.. நான் கேட்பது ஒரே ஒரு வரம்தான். அதற்காகத்தான் இவ்வளவு நாள் தவம் இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கையில் சாவே வரக்கூடாது..! அதுமட்டும் போதும்..".
'சாவே வராத வாழ்வு மனிதனுக்கு கொடுக்கக் கூடதே, அது இயற்கைக்கு எதிராயிற்றே..' என்று யோசித்த சிவன், முத்துசாமியின் கடும் தவத்தையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"அப்படியே வரம் தந்தேன் முத்துசாமி. இனி உனக்கு சாவே வராது...!".
வரம் தந்த சிவன் மறைந்ததும், மகிழ்ச்சியுடன் தூங்கப் போனான் முத்துசாமி.
மறுநாள், காலையில் கண் விழித்து, வாக்கிங் முடித்து பேப்பர் எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கம்பெனி மேனேஜருக்குப் போன் செய்தான்.
"ஹலோ... நான் முத்துமி பேசறேன்..!" என்றவன் ஒருகணம் யோசித்தான்.
'என்ன இது.. தன் பெயரையே சொல்ல வரவில்லையே..!'
முத்துசாமி என்று தன் பெயரைப் பலதடவை சொல்லிப் பார்த்தான்... முத்துமி, முத்துமி என்றே வந்தது.
முத்துசாமியில் 'சா' வரவில்லை.
முத்துசாமியில் மட்டுமல்ல...எந்த வார்த்தையிலும் அவனுக்கு 'சா' வரவில்லை.
சாகும் வரை முத்துசாமிக்கு 'சா'வே வரவில்லை.
.
.
.
எல்லாம் கடவுளால் மட்டுமே நடக்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவான் முத்துசாமி.
சின்ன வயதில் ஊருக்கு வந்த ஒரு சாமியாரை சந்தித்த பின்னால்தான், அவனுக்கு அவன் வாழ்வில் மாற்றங்கள் வர ஆரம்பித்தது.
"சிவனைக் கும்பிடு.. சிவனைக் கும்பிடு.. வாழ்க்கை மேல போகும்..!" என்று போகிற போக்கில் அந்த சாமியார் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
முத்துசாமி அதை நம்பினான் என்று சொல்லக்கூடாது.
அப்படியே பைத்தியமாய் சிவனைக் கும்பிட ஆரம்பித்தான்.
வாழ்க்கை மாற ஆரம்பித்தது.
பூஜ்யமாய் இருந்த அவன் வாழ்வில், இன்று இந்தச் சின்ன வயதிலேயே கோடிக் கோடியான பணத்தில் புரள்வதற்குக் காரணம் சிவன் தான் என்பது அவனுக்குத் தெரியும்.
சம்பாதிப்பதில் பாதியை அவன் சிவாலயங்களுக்கும் சிவனடியார்களுக்குமே செலவழித்து வந்தான் அவன்.
பணம் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், அவனுடைய பக்தியும் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தது.
சாமியார், சிவனடியார் என்று சுற்றிக் கொண்டிருந்தவன்.. இப்போது, சித்தர்கள் என சுற்ற ஆரம்பித்தான்.
திருவண்ணாமலை, கொல்லிமலை, சதுரகிரி என அவன் சித்தர்களை பல இடங்களில், மலைகளில், குகைகளில், இன்னும் பல ரகசிய இடங்களில் அவன் சித்தர்களை சந்தித்து பல நம்பமுடியாத சக்திகளைப் பெற்றுவிட்டான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
கடைசியில் முத்துசாமி வந்து நின்ற இடம் சாவே இல்லாத வாழ்க்கை... மரணமற்ற பெரு வாழ்வு.
அவன், தான் கற்றுக் கொண்ட சித்துக்களை வைத்து ஒரு பெருந்தவம் செய்ய ஆரம்பித்தான்.
தவம்னா இப்படி அப்படி சாதாரண தவம் அல்ல... மிரண்டு போய் அந்த சிவனே முத்துசாமியின் முன்னால் வந்து நிற்கும் அளவுக்கு கடுந்தவம்.
முன்னால் வந்து நின்ற சிவன் சொன்னார்.
"பக்தா... உன் கடுந்தவம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்ன வரம் வேண்டும் உனக்கு..? கேள், தருகிறேன்..!".
முத்துசாமி கேட்டான்.
"கடவுளே.. நான் கேட்பது ஒரே ஒரு வரம்தான். அதற்காகத்தான் இவ்வளவு நாள் தவம் இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கையில் சாவே வரக்கூடாது..! அதுமட்டும் போதும்..".
'சாவே வராத வாழ்வு மனிதனுக்கு கொடுக்கக் கூடதே, அது இயற்கைக்கு எதிராயிற்றே..' என்று யோசித்த சிவன், முத்துசாமியின் கடும் தவத்தையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"அப்படியே வரம் தந்தேன் முத்துசாமி. இனி உனக்கு சாவே வராது...!".
வரம் தந்த சிவன் மறைந்ததும், மகிழ்ச்சியுடன் தூங்கப் போனான் முத்துசாமி.
மறுநாள், காலையில் கண் விழித்து, வாக்கிங் முடித்து பேப்பர் எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கம்பெனி மேனேஜருக்குப் போன் செய்தான்.
"ஹலோ... நான் முத்துமி பேசறேன்..!" என்றவன் ஒருகணம் யோசித்தான்.
'என்ன இது.. தன் பெயரையே சொல்ல வரவில்லையே..!'
முத்துசாமி என்று தன் பெயரைப் பலதடவை சொல்லிப் பார்த்தான்... முத்துமி, முத்துமி என்றே வந்தது.
முத்துசாமியில் 'சா' வரவில்லை.
முத்துசாமியில் மட்டுமல்ல...எந்த வார்த்தையிலும் அவனுக்கு 'சா' வரவில்லை.
சாகும் வரை முத்துசாமிக்கு 'சா'வே வரவில்லை.
.
.
.
Labels:
குகை,
கொல்லிமலை,
சதுரகிரி,
சாமியார்,
சித்தர்,
சிவனடியார்,
திருவண்ணாமலை
8
comments
Saturday, October 23, 2010
99 நாட் அவுட்...
பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள்.
'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.
அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.
அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.
போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.
'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.
"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"
அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.
99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.
பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.
அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.
அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.
"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".
நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.
"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.
'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.
அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.
அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.
போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.
'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.
"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"
அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.
99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.
பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.
அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.
அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.
"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".
நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.
"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.
Labels:
செலவு,
பிறந்தநாள்,
பொக்கை,
மகன்,
வயசு,
வயதானவர்,
விசேஷம்,
ஸ்டுடியோ
5
comments
Friday, October 22, 2010
24 புல்லட்ஸ்
சமீபத்தில் ஏதோ விளையாட்டு விழா முடிவு நாள் நிகழ்ச்சி நடந்திருக்கிறது நம் ஊரில்.
அதற்கு, நமது அண்டை நாட்டு அதிபர் வந்திருக்கிறார்.
நம் மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்ததில் பெயர் போனவர் அந்த அதிபர்.
ஆனால், அவர் வந்ததோ நம் நாட்டுடனான நட்பு ரீதியில்.
அவருக்கு வரவேற்று மரியாதை செலுத்தும் முறையில் நமது 24 பீரங்கிகள் முழங்கின.
அவற்றின் முழக்கம் ஓய்ந்த பிறகு அந்த சுட்டவர்களில் ஒருவரை நெருங்கிக் காரணம் கேட்டிருக்கிறான் நம்ம காத்தமுத்து.
அந்த வீரன், காத்தமுத்துவிடம் 'இன்னார் வந்திருக்கார்.. அதனால சுட்டோம்'னு காரணம் சொன்னார்.
அதுக்கப்புறம் காத்தமுத்து ரொம்ப ஆர்வமாய் அவரிடம் கேட்டான்.
"இப்ப அவர் எங்கே.. பார்க்கமுடியுமா.?"
அதற்கு அந்த வீரர்,"அவர் இப்பத்தானே காரில் ஏறிப் போனார்..!".
வீரர் சொன்ன பதிலைக் கேட்ட காத்தமுத்து வருத்தத்தோட இப்படிச் சொன்னான்.
"இத்தனை தடவை சுட்டும் உங்க குறி தப்பிடுச்சேப்பா...!".
.
.
.
அதற்கு, நமது அண்டை நாட்டு அதிபர் வந்திருக்கிறார்.
நம் மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்ததில் பெயர் போனவர் அந்த அதிபர்.
ஆனால், அவர் வந்ததோ நம் நாட்டுடனான நட்பு ரீதியில்.
அவருக்கு வரவேற்று மரியாதை செலுத்தும் முறையில் நமது 24 பீரங்கிகள் முழங்கின.
அவற்றின் முழக்கம் ஓய்ந்த பிறகு அந்த சுட்டவர்களில் ஒருவரை நெருங்கிக் காரணம் கேட்டிருக்கிறான் நம்ம காத்தமுத்து.
அந்த வீரன், காத்தமுத்துவிடம் 'இன்னார் வந்திருக்கார்.. அதனால சுட்டோம்'னு காரணம் சொன்னார்.
அதுக்கப்புறம் காத்தமுத்து ரொம்ப ஆர்வமாய் அவரிடம் கேட்டான்.
"இப்ப அவர் எங்கே.. பார்க்கமுடியுமா.?"
அதற்கு அந்த வீரர்,"அவர் இப்பத்தானே காரில் ஏறிப் போனார்..!".
வீரர் சொன்ன பதிலைக் கேட்ட காத்தமுத்து வருத்தத்தோட இப்படிச் சொன்னான்.
"இத்தனை தடவை சுட்டும் உங்க குறி தப்பிடுச்சேப்பா...!".
.
.
.
Labels:
24,
அண்டை,
அதிபர்,
பீரங்கி,
புல்லட்ஸ்,
விளையாட்டு
5
comments
Thursday, October 21, 2010
தந்திரன்
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
அன்று மாலை சினிமாப் பார்க்க கணவர், குழந்தையோடு கோவையின் அந்தத் தியேட்டருக்குப் போயிருந்தோம்.
டிவி, ரேடியோக்களின் விடாத விளம்பரங்களும், உடன் பணிபுரிவோரின் விடாத விசாரிப்புகளும் அந்தத் திரைபடத்தைப் பார்க்காததை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாற்றியிருந்தன.
நல்ல கூட்டம்... கிராமத்து மக்கள், நகரத்து மக்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.
என் கணவர் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்ததால், நாங்கள் தொந்தரவின்றி தியேட்டருக்குள் நுழைந்துவிட்டோம்.
நடுவே நுழையும் பாதையும், இரண்டு பக்கமும் சீட் நம்பர் தேடி உட்காருவதும் போல சிஸ்டம்.
எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததோ, நுழைந்ததும் வலது பக்கம் வழிக்குப் பக்கத்திலேயே முதல் மூன்று சீட்டுகள்.
அதற்கப்புறம், எங்களைப்போலவே ஒரு குடும்பமும் அதையடுத்து ஒரு கிராமத்துக் குடும்பமும் அப்புறம், ஒன்றிரண்டு இளைஞர்களும் என எங்கள் வரிசை நிரம்பியிருந்தது.
அதுவும், அந்த கிராமத்துக் குடும்பம் மொத்தமும் அந்த நடிகரின் தீவிரமான ரசிகர்கள் என அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.
அவர்கள் தங்கள் நடிகரின் பெருமையை, தங்கள் குழந்தைகளுக்கு மிகப் பெருமையாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
படம் ஆரம்பித்ததும் தான் அவர்கள் பேச்சுச் சப்தம் ஓய்ந்தது.
படம் போட்டு ஒரு மணி நேரம் இருக்கும்... இன்டர்வலுக்குச் சற்று முன்பாகவே அவரது ஒரு குழந்தை டாய்லெட் போக அவசரப் படுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் கணவன் மனைவி இருவரும், 'கொஞ்சம் பொறுத்துக்க..' என்று சொல்லியபடி உற்சாகமாய்ப் படம் பார்த்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை ஓவென்று அழவே ஆரம்பித்து விட்டது.
கடைசியாய், அந்தக் கிராமத்து மனிதர் எரிச்சலுடன், குழந்தையை அந்த அரையிருட்டில் அழைத்துக் கொண்டு, வரிசையில் நடுவிலிருந்து கடுப்புடன் ஒவ்வொருவராகத் தாண்டிக் கொண்டு வந்தார்.
வந்தவர், கடைசியாய் உட்கார்ந்திருந்த என் கணவரைத் தாண்டும்போது, காலை நறுக்கென்று ஒரு மிதி மிதித்துவிட்டு... ஒரு சாரியோ மன்னிப்போ எதுவும் கேட்காமல் வேகவேகமாய் குழந்தையை அழைத்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கிப் போனார்.
ஏற்கனவே, செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு வெறும் காலில் உட்கார்ந்திருந்த என் கணவர், வலி தாங்காமல் அவரைத் ஏதோ திட்ட வாயெடுத்தார்.
நான் இடைமறித்து,"விடுங்க ஏதோ படம் பாக்கற இன்ட்ரஸ்ட்ல போறாரு..."என்றதும் அமைதியாகி விட்டார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு திரும்ப வந்து அந்த அரையிருட்டில் கண்கள் பழகும்வரை நின்றவர்... மெல்ல தட்டுத் தடுமாறி வரிசையைத் தேடிக் கொண்டே வந்து, என் கணவர் அருகில் வந்ததும் லேசான யோசனையுடன் கேட்டார்.
"சார்... போகும்போது உங்க காலையா நான் மிதிச்சுட்டேன்..?".
அந்த கிராமத்து ஆள் கேட்டதும் என் கணவரும் ஏதோ சாரி சொல்லப் போகிறானோ என்ற உணர்வில்,"ஆமாம், என் காலைத்தான் மிதிச்சீங்க..!" என்றார்.
கிட்டத்தட்ட அந்த கிராமத்து ஆள் சாரி சொன்னால் 'பரவாயில்லை' என்று சொல்லக்கூட என் கணவர் தயாரான அந்த விநாடியில் தான் அந்த ஆள் தனது குழந்தையைப் பார்த்துச் சொன்னார்.
"டேய் ராசு, இந்த வரிசைதாண்டா... யோசிக்காம உள்ளே போ..!".
.
.
அன்று மாலை சினிமாப் பார்க்க கணவர், குழந்தையோடு கோவையின் அந்தத் தியேட்டருக்குப் போயிருந்தோம்.
டிவி, ரேடியோக்களின் விடாத விளம்பரங்களும், உடன் பணிபுரிவோரின் விடாத விசாரிப்புகளும் அந்தத் திரைபடத்தைப் பார்க்காததை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாற்றியிருந்தன.
நல்ல கூட்டம்... கிராமத்து மக்கள், நகரத்து மக்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.
என் கணவர் ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருந்ததால், நாங்கள் தொந்தரவின்றி தியேட்டருக்குள் நுழைந்துவிட்டோம்.
நடுவே நுழையும் பாதையும், இரண்டு பக்கமும் சீட் நம்பர் தேடி உட்காருவதும் போல சிஸ்டம்.
எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததோ, நுழைந்ததும் வலது பக்கம் வழிக்குப் பக்கத்திலேயே முதல் மூன்று சீட்டுகள்.
அதற்கப்புறம், எங்களைப்போலவே ஒரு குடும்பமும் அதையடுத்து ஒரு கிராமத்துக் குடும்பமும் அப்புறம், ஒன்றிரண்டு இளைஞர்களும் என எங்கள் வரிசை நிரம்பியிருந்தது.
அதுவும், அந்த கிராமத்துக் குடும்பம் மொத்தமும் அந்த நடிகரின் தீவிரமான ரசிகர்கள் என அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.
அவர்கள் தங்கள் நடிகரின் பெருமையை, தங்கள் குழந்தைகளுக்கு மிகப் பெருமையாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
படம் ஆரம்பித்ததும் தான் அவர்கள் பேச்சுச் சப்தம் ஓய்ந்தது.
படம் போட்டு ஒரு மணி நேரம் இருக்கும்... இன்டர்வலுக்குச் சற்று முன்பாகவே அவரது ஒரு குழந்தை டாய்லெட் போக அவசரப் படுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் கணவன் மனைவி இருவரும், 'கொஞ்சம் பொறுத்துக்க..' என்று சொல்லியபடி உற்சாகமாய்ப் படம் பார்த்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை ஓவென்று அழவே ஆரம்பித்து விட்டது.
கடைசியாய், அந்தக் கிராமத்து மனிதர் எரிச்சலுடன், குழந்தையை அந்த அரையிருட்டில் அழைத்துக் கொண்டு, வரிசையில் நடுவிலிருந்து கடுப்புடன் ஒவ்வொருவராகத் தாண்டிக் கொண்டு வந்தார்.
வந்தவர், கடைசியாய் உட்கார்ந்திருந்த என் கணவரைத் தாண்டும்போது, காலை நறுக்கென்று ஒரு மிதி மிதித்துவிட்டு... ஒரு சாரியோ மன்னிப்போ எதுவும் கேட்காமல் வேகவேகமாய் குழந்தையை அழைத்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கிப் போனார்.
ஏற்கனவே, செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு வெறும் காலில் உட்கார்ந்திருந்த என் கணவர், வலி தாங்காமல் அவரைத் ஏதோ திட்ட வாயெடுத்தார்.
நான் இடைமறித்து,"விடுங்க ஏதோ படம் பாக்கற இன்ட்ரஸ்ட்ல போறாரு..."என்றதும் அமைதியாகி விட்டார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு திரும்ப வந்து அந்த அரையிருட்டில் கண்கள் பழகும்வரை நின்றவர்... மெல்ல தட்டுத் தடுமாறி வரிசையைத் தேடிக் கொண்டே வந்து, என் கணவர் அருகில் வந்ததும் லேசான யோசனையுடன் கேட்டார்.
"சார்... போகும்போது உங்க காலையா நான் மிதிச்சுட்டேன்..?".
அந்த கிராமத்து ஆள் கேட்டதும் என் கணவரும் ஏதோ சாரி சொல்லப் போகிறானோ என்ற உணர்வில்,"ஆமாம், என் காலைத்தான் மிதிச்சீங்க..!" என்றார்.
கிட்டத்தட்ட அந்த கிராமத்து ஆள் சாரி சொன்னால் 'பரவாயில்லை' என்று சொல்லக்கூட என் கணவர் தயாரான அந்த விநாடியில் தான் அந்த ஆள் தனது குழந்தையைப் பார்த்துச் சொன்னார்.
"டேய் ராசு, இந்த வரிசைதாண்டா... யோசிக்காம உள்ளே போ..!".
.
.
Wednesday, October 20, 2010
வடை போச்சே...!
மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.
வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் டிபன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டே சாப்பிட்டனர்.
சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள்.
மூவரும் பரிட்சை எழுத போவதைப் பற்றிக் கூறினார்கள்.
அதற்கு பாட்டி, "நீங்க ரெண்டு பேரும் ஃபெயில் ஆயிடுவீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா இந்தத் தம்பி கண்டிப்பா பாஸ் ஆயிடும்..." எனக் கூறினாள்.
பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அனால், ரிசல்ட் என்னவோ பாட்டி சொன்னபடித்தான் இருந்தது..
இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "எப்படி பாட்டி ரிஸல்ட்டைக் கரெக்ட்டா சொன்னீங்க..? உங்களுக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா...?" என்று கேட்டதற்கு பாட்டி சொன்னாள்.
"எனக்கு ஜோசியமெல்லாம் தெரியாதப்பா... ஆனால், ஒண்ணு தெரியும். வேகாத வடை சத்தம் போட்டுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடும்... வெந்த வடையோ அமைதியா ஒரே எடத்துல இருக்கும்...!".
.
.
.
வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் டிபன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டே சாப்பிட்டனர்.
சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள்.
மூவரும் பரிட்சை எழுத போவதைப் பற்றிக் கூறினார்கள்.
அதற்கு பாட்டி, "நீங்க ரெண்டு பேரும் ஃபெயில் ஆயிடுவீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா இந்தத் தம்பி கண்டிப்பா பாஸ் ஆயிடும்..." எனக் கூறினாள்.
பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அனால், ரிசல்ட் என்னவோ பாட்டி சொன்னபடித்தான் இருந்தது..
இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "எப்படி பாட்டி ரிஸல்ட்டைக் கரெக்ட்டா சொன்னீங்க..? உங்களுக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா...?" என்று கேட்டதற்கு பாட்டி சொன்னாள்.
"எனக்கு ஜோசியமெல்லாம் தெரியாதப்பா... ஆனால், ஒண்ணு தெரியும். வேகாத வடை சத்தம் போட்டுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடும்... வெந்த வடையோ அமைதியா ஒரே எடத்துல இருக்கும்...!".
.
.
.
Tuesday, October 19, 2010
சுந்து என்கிற சுந்தரன்
அது ஒரு சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே.
ஒரு சிறுவனைக் குழந்தைகள் உட்காரும் இடத்தில் வைத்து ட்ராலியைத் தள்ளியபடி பொருட்களை எடுத்து வண்டியின் உள்ளே போட்டுக் கொண்டிருந்தார் அவனுடைய அப்பா.
அந்த வண்டி ஒரு ஸ்வீட் ரேக்கின் அருகே வரும் போது அந்தச் சிறுவன்,"அப்பா சாக்லேட்..." என்றான்.
"ம்ஹூம்..!" என்றவாறு அப்பா ட்ராலியைத் தள்ள...
"எனக்கு அந்த சாக்லேட் வேணும்... வேணும்...!" என்று பெருங்குரல் எடுத்துக் கத்த ஆரம்பித்தான் சிறுவன்.
கோபமாய் திரும்பிய அவன் அப்பா, ஒரு விநாடியில் தன்னைக் கன்ட்ரோல் செய்து கொண்டு கனிவாய்ச் சொன்னார்.
"நோ சுந்தர் நோ... இன்னும் ரெண்டு மூணு ரேக்தான்... முடிஞ்சது... வெயிட் பண்ணு..!" என்று சொல்லிக் கொண்டே ட்ராலியை அந்த இடத்தை விட்டு வேகமாய்த் தள்ளிக் கொண்டு அடுத்த வரிசைக்குப் போனார்.
சற்று நேரம்தான்.
ட்ராலி ஐஸ்க்ரீம் இருக்கும் பக்கம் போனதும் பையன் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தான்.
"அப்பா ஐஸ்க்ரீம்...!".
அப்பா இப்போதும், "ம்ம்ஹூம்..!" என்றபடி ட்ராலியைத் தள்ள...
"ஐஸ்க்ரீம் வேணும்...!" என்று பையன் பிடிவாதமாய்க் கத்த ஆரம்பித்தான்.
"ஏற்கனவே சளிப் பிடிச்சிருக்கு.. இப்ப ஐஸ்க்ரீம் வேண்டாம்..!"என்றபடி ட்ராலியை அடுத்த வரிசைக்குத் திருப்பினார்.
பையன் இப்போது அதிக சப்தமாய், "எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்...ஐஸ்க்ரீம் வேணும்..." என்று அழுக ஆரம்பித்தான்.
இன்னும் டென்ஷனான அப்பா பல்லைக் கடித்துக் கொண்டு தணிந்த குரலில் சொன்னார்.
"சுந்தர் இன்னும் பத்து நிமிஷம்தான்... இப்ப முடிஞ்சுடும்..!" என்றபடி ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வர வர பையனுடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்தது.
ட்ராலி பில் போடும் வரிசையில் நிற்கும்போது பையன் 'சிக்லெட்' கேட்க ஆரம்பித்திருந்தான்.
அப்போதும் அவனுடைய அப்பா, அந்தச் சிறுவனை ஆறுதல் படுத்தும் தொனியில் மெதுவான குரலில் சொன்னார்.
"நோ சுந்தர்.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷத்தில வெளியே போயிடுவோம். அதுக்கப்புறம் அஞ்சு நிமிஷத்தில வீட்டுக்கு போயிடுவோம். வீட்டுக்குப் போனதும் நல்ல ஒரு டிபன், அப்புறம் சூடா ஒரு கப் காப்பி... எதுவாயிருந்தாலும் அப்புறம்தான்.!".
அப்பா சொல்லிய பிறகும் விடாமல் 'சிக்லெட்' கேட்டுக் கொண்டே இருந்தான் சிறுவன்.
பில் போட்டு முடித்து காரை நெருங்கும்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த ஸ்ரீராம் அந்த அப்பாவை நெருங்கிச் சொன்னார்.
"ஹலோ.. நானும் முழுக்க உங்களை கவனிச்சுட்டே இருந்தேன். இந்தக் குட்டிப் பையன் சுந்தரை அழகா ஹேண்டில் பண்ணினீங்க... நல்ல பொறுமை உங்களுக்கு.. சூப்பர்..!".
கேட்டுக் கொண்டிருந்த அந்த அப்பா சொன்னார்.
"ஹையோ சார்... நீங்க வேற, நாந்தான் சுந்தர். இன்னேரம் நான் என்னைத்தான் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதோ என்னை டென்ஷன் பண்ணிட்டே இருக்கானே என் பையன்.. இவன் பேரு டேனி...!".
.
.
.
ஒரு சிறுவனைக் குழந்தைகள் உட்காரும் இடத்தில் வைத்து ட்ராலியைத் தள்ளியபடி பொருட்களை எடுத்து வண்டியின் உள்ளே போட்டுக் கொண்டிருந்தார் அவனுடைய அப்பா.
அந்த வண்டி ஒரு ஸ்வீட் ரேக்கின் அருகே வரும் போது அந்தச் சிறுவன்,"அப்பா சாக்லேட்..." என்றான்.
"ம்ஹூம்..!" என்றவாறு அப்பா ட்ராலியைத் தள்ள...
"எனக்கு அந்த சாக்லேட் வேணும்... வேணும்...!" என்று பெருங்குரல் எடுத்துக் கத்த ஆரம்பித்தான் சிறுவன்.
கோபமாய் திரும்பிய அவன் அப்பா, ஒரு விநாடியில் தன்னைக் கன்ட்ரோல் செய்து கொண்டு கனிவாய்ச் சொன்னார்.
"நோ சுந்தர் நோ... இன்னும் ரெண்டு மூணு ரேக்தான்... முடிஞ்சது... வெயிட் பண்ணு..!" என்று சொல்லிக் கொண்டே ட்ராலியை அந்த இடத்தை விட்டு வேகமாய்த் தள்ளிக் கொண்டு அடுத்த வரிசைக்குப் போனார்.
சற்று நேரம்தான்.
ட்ராலி ஐஸ்க்ரீம் இருக்கும் பக்கம் போனதும் பையன் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தான்.
"அப்பா ஐஸ்க்ரீம்...!".
அப்பா இப்போதும், "ம்ம்ஹூம்..!" என்றபடி ட்ராலியைத் தள்ள...
"ஐஸ்க்ரீம் வேணும்...!" என்று பையன் பிடிவாதமாய்க் கத்த ஆரம்பித்தான்.
"ஏற்கனவே சளிப் பிடிச்சிருக்கு.. இப்ப ஐஸ்க்ரீம் வேண்டாம்..!"என்றபடி ட்ராலியை அடுத்த வரிசைக்குத் திருப்பினார்.
பையன் இப்போது அதிக சப்தமாய், "எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்...ஐஸ்க்ரீம் வேணும்..." என்று அழுக ஆரம்பித்தான்.
இன்னும் டென்ஷனான அப்பா பல்லைக் கடித்துக் கொண்டு தணிந்த குரலில் சொன்னார்.
"சுந்தர் இன்னும் பத்து நிமிஷம்தான்... இப்ப முடிஞ்சுடும்..!" என்றபடி ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வர வர பையனுடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்தது.
ட்ராலி பில் போடும் வரிசையில் நிற்கும்போது பையன் 'சிக்லெட்' கேட்க ஆரம்பித்திருந்தான்.
அப்போதும் அவனுடைய அப்பா, அந்தச் சிறுவனை ஆறுதல் படுத்தும் தொனியில் மெதுவான குரலில் சொன்னார்.
"நோ சுந்தர்.. இன்னும் ரெண்டு மூணு நிமிஷத்தில வெளியே போயிடுவோம். அதுக்கப்புறம் அஞ்சு நிமிஷத்தில வீட்டுக்கு போயிடுவோம். வீட்டுக்குப் போனதும் நல்ல ஒரு டிபன், அப்புறம் சூடா ஒரு கப் காப்பி... எதுவாயிருந்தாலும் அப்புறம்தான்.!".
அப்பா சொல்லிய பிறகும் விடாமல் 'சிக்லெட்' கேட்டுக் கொண்டே இருந்தான் சிறுவன்.
பில் போட்டு முடித்து காரை நெருங்கும்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த ஸ்ரீராம் அந்த அப்பாவை நெருங்கிச் சொன்னார்.
"ஹலோ.. நானும் முழுக்க உங்களை கவனிச்சுட்டே இருந்தேன். இந்தக் குட்டிப் பையன் சுந்தரை அழகா ஹேண்டில் பண்ணினீங்க... நல்ல பொறுமை உங்களுக்கு.. சூப்பர்..!".
கேட்டுக் கொண்டிருந்த அந்த அப்பா சொன்னார்.
"ஹையோ சார்... நீங்க வேற, நாந்தான் சுந்தர். இன்னேரம் நான் என்னைத்தான் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதோ என்னை டென்ஷன் பண்ணிட்டே இருக்கானே என் பையன்.. இவன் பேரு டேனி...!".
.
.
.
Friday, October 15, 2010
தியான மண்டப திகில்
பொள்ளாச்சிக்கு அருகில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்தது அந்த தியான மண்டபம்.
அன்று நான் வேலை செய்த கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் அந்த மண்டபம் போவதும் ஒரு நிகழ்வாயிருந்தது.
அந்தச் சுற்றுலா சனிக்கிழமை ஏற்பாடானது.
அன்று பள்ளி விடுமுறை என்பதால், என் நான்கு வயது மகன் டேனி என்னுடன் சுற்றுலா வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆளியாறு அணை, குரங்கு அருவி, பூங்கா எல்லாம் சுற்றிவிட்டு தியான மண்டபம் போவது என முடிவு செய்து அதன்படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
மாணவர்களுடன் ஒன்றாகக் கலந்துவிட்ட என் மகன், அருவியிலும் அணையிலும் ஆடிய ஆட்டங்கள் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாகவே இருந்தது.
எல்லாம் முடிந்து, கடைசியில் தியான மண்டபம் வந்தபோதுதான்... உண்மையான பிரச்சினை ஆரம்பமானது.
தியான மண்டபத்தில், அதன் வழிகாட்டி மாணவ மாணவியரை தியானத்தில் எவ்வாறு உட்கார வேண்டும், எவ்வாறு தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அமைதியாகத்தான் இருந்தான் டேனி.
ஆனால், எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்ததும் அந்த அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மெல்ல சப்தம் செய்ய ஆரம்பித்தான்.
யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய ஆரம்பித்ததும் அவன் சப்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.
நான் அவனைச் சட்டென்று தியான மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் 'தியானம் என்றால் என்ன' என்பது குறித்து எல்லாம் அவனுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லிவிட்டுக் கேட்டேன்.
"என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா...?".
புரிந்தது என்று தலையாட்டினான் டேனி.
"இப்பச் சொல்லு டேனி... தியான மண்டபத்துக்குள்ளே ஏன் சத்தம் போடக் கூடாது...?".
நான் கேட்டதும் எல்லாம் புரிந்ததுபோல் தலையாட்டிய படிக் கேட்டுக் கொண்டிருந்தவன் சொன்னான்.
"அதுவா... நான் சத்தம் போட்டா அங்கே தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு டிஸ்டபென்ஸா இருக்கும்...!".
.
.
.
அன்று நான் வேலை செய்த கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் அந்த மண்டபம் போவதும் ஒரு நிகழ்வாயிருந்தது.
அந்தச் சுற்றுலா சனிக்கிழமை ஏற்பாடானது.
அன்று பள்ளி விடுமுறை என்பதால், என் நான்கு வயது மகன் டேனி என்னுடன் சுற்றுலா வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஆளியாறு அணை, குரங்கு அருவி, பூங்கா எல்லாம் சுற்றிவிட்டு தியான மண்டபம் போவது என முடிவு செய்து அதன்படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
மாணவர்களுடன் ஒன்றாகக் கலந்துவிட்ட என் மகன், அருவியிலும் அணையிலும் ஆடிய ஆட்டங்கள் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாகவே இருந்தது.
எல்லாம் முடிந்து, கடைசியில் தியான மண்டபம் வந்தபோதுதான்... உண்மையான பிரச்சினை ஆரம்பமானது.
தியான மண்டபத்தில், அதன் வழிகாட்டி மாணவ மாணவியரை தியானத்தில் எவ்வாறு உட்கார வேண்டும், எவ்வாறு தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அமைதியாகத்தான் இருந்தான் டேனி.
ஆனால், எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்ததும் அந்த அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மெல்ல சப்தம் செய்ய ஆரம்பித்தான்.
யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய ஆரம்பித்ததும் அவன் சப்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.
நான் அவனைச் சட்டென்று தியான மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் 'தியானம் என்றால் என்ன' என்பது குறித்து எல்லாம் அவனுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லிவிட்டுக் கேட்டேன்.
"என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா...?".
புரிந்தது என்று தலையாட்டினான் டேனி.
"இப்பச் சொல்லு டேனி... தியான மண்டபத்துக்குள்ளே ஏன் சத்தம் போடக் கூடாது...?".
நான் கேட்டதும் எல்லாம் புரிந்ததுபோல் தலையாட்டிய படிக் கேட்டுக் கொண்டிருந்தவன் சொன்னான்.
"அதுவா... நான் சத்தம் போட்டா அங்கே தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு டிஸ்டபென்ஸா இருக்கும்...!".
.
.
.
Labels:
இயற்கை,
எழில்,
சத்தம்,
சுற்றுலா,
திகில்,
தியான மண்டபம்,
பொள்ளாச்சி
3
comments
Thursday, October 14, 2010
அப்பிடி இப்பிடி
சிஷ்யன்: சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் உண்டா குருவே..?
குரு: உண்டு.
சிஷ்யன்: இதற்குமுன் நான் போன குரு இல்லை என்கிறாரே..?
குரு: உனக்கு கல்யாணமாகிவிட்டதா..?
சிஷ்யன்: ஆமாம் குருவே... குழந்தைகள் கூட உண்டு.
குரு: முன்னர் நீ போன குருவுக்கு..?
சிஷ்யன்: அவர்தான் துறவி ஆயிற்றே குருவே..! அவருக்குத் திருமணம்
ஆகவில்லை.
குரு: அதனால்தான் அவருக்கு அப்படி உனக்கு இப்படி.
.
.
.
குரு: உண்டு.
சிஷ்யன்: இதற்குமுன் நான் போன குரு இல்லை என்கிறாரே..?
குரு: உனக்கு கல்யாணமாகிவிட்டதா..?
சிஷ்யன்: ஆமாம் குருவே... குழந்தைகள் கூட உண்டு.
குரு: முன்னர் நீ போன குருவுக்கு..?
சிஷ்யன்: அவர்தான் துறவி ஆயிற்றே குருவே..! அவருக்குத் திருமணம்
ஆகவில்லை.
குரு: அதனால்தான் அவருக்கு அப்படி உனக்கு இப்படி.
.
.
.
Labels:
அப்படி,
இப்படி,
குழந்தைகள்,
சொர்க்கம்,
திருமணம்,
நரகம்
3
comments
Monday, October 11, 2010
ஹாட் காஃபி
தில்லுதுர அன்று தீபாவளி பர்ச்சேஸ் முடிக்க தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு வந்திருந்தார்.
தீபாவளிப் பர்ச்சேஸை ஆடித் தள்ளுபடியிலேயே முடித்துவிடுவது அவர் ஸ்டைல்.
மனைவியைப் பெரும்பாலும் வெளியே அழைத்து வருவதும் அப்போதுதான்.
மனைவிக்கோ அவருடன் பர்ச்சேஸ் செய்வதென்பது மரண அவஸ்தை.
ப்ளாட்பார்ம் கடைகளில் கிடைக்காததை, அல்லது மனைவி குழந்தைகள் வாங்க மறுத்து வம்பு செய்தால் மட்டுமே கடைக்குள் நுழைவது அவர் பாலிஸி.
அதனால்தான், இன்று குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ் அனுப்பிவிட்டு மனைவியை மட்டும் அழைத்துக்க் கொண்டு ரங்கனாதன் தெருவுக்கு வந்திருந்தார்.
காசு கொடுத்து எதையும் வாங்குவதென்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.
வந்தவர் பர்ச்சேஸ் செய்த கதை சொல்ல கம்பனால்கூட முடியாது என்பதால் கடைசிச் சாப்டரை மட்டும் சொல்கிறேன் நான்.
பர்ச்சேஸ் முடித்துவிட்டு பஸ் ஸ்டான்ட் அருகில் வந்த அவர் மனைவி கேட்டதற்காக, அவளை முறைத்துக்கொண்டே காப்பிக் கடைக்குள் அழைத்துச் சென்றார்.
ரெண்டு காப்பி சொல்லிவிட்டு வந்ததும்...
அந்தக் காப்பியை ஆற்றக்கூட ஆற்றாமல் கொள்ளிவாய்ப் பிசாசு போல அப்படியே சுடசுடக் குடித்தார்.
அதைப் பார்த்துத் திகைப்படைந்து மனைவி கேட்டார்.
"என்னங்க... இவ்ளோ சூடாக் குடிக்கறீங்க...?".
தில்லுதுர அப்போதும் பதட்டத்துடன் சொன்னார்.
"அடியே... நீயும் சீக்கிரம் அந்தக் காபியை குடிச்சுடுடி. அங்கே போர்ட்ல என்ன போட்டிருக்கான் பாரு.. ஹாட் காஃபி 10 ரூபாய்... கோல்ட் காஃபி 25 ரூபாய் ...!".
.
.
தீபாவளிப் பர்ச்சேஸை ஆடித் தள்ளுபடியிலேயே முடித்துவிடுவது அவர் ஸ்டைல்.
மனைவியைப் பெரும்பாலும் வெளியே அழைத்து வருவதும் அப்போதுதான்.
மனைவிக்கோ அவருடன் பர்ச்சேஸ் செய்வதென்பது மரண அவஸ்தை.
ப்ளாட்பார்ம் கடைகளில் கிடைக்காததை, அல்லது மனைவி குழந்தைகள் வாங்க மறுத்து வம்பு செய்தால் மட்டுமே கடைக்குள் நுழைவது அவர் பாலிஸி.
அதனால்தான், இன்று குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ் அனுப்பிவிட்டு மனைவியை மட்டும் அழைத்துக்க் கொண்டு ரங்கனாதன் தெருவுக்கு வந்திருந்தார்.
காசு கொடுத்து எதையும் வாங்குவதென்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.
வந்தவர் பர்ச்சேஸ் செய்த கதை சொல்ல கம்பனால்கூட முடியாது என்பதால் கடைசிச் சாப்டரை மட்டும் சொல்கிறேன் நான்.
பர்ச்சேஸ் முடித்துவிட்டு பஸ் ஸ்டான்ட் அருகில் வந்த அவர் மனைவி கேட்டதற்காக, அவளை முறைத்துக்கொண்டே காப்பிக் கடைக்குள் அழைத்துச் சென்றார்.
ரெண்டு காப்பி சொல்லிவிட்டு வந்ததும்...
அந்தக் காப்பியை ஆற்றக்கூட ஆற்றாமல் கொள்ளிவாய்ப் பிசாசு போல அப்படியே சுடசுடக் குடித்தார்.
அதைப் பார்த்துத் திகைப்படைந்து மனைவி கேட்டார்.
"என்னங்க... இவ்ளோ சூடாக் குடிக்கறீங்க...?".
தில்லுதுர அப்போதும் பதட்டத்துடன் சொன்னார்.
"அடியே... நீயும் சீக்கிரம் அந்தக் காபியை குடிச்சுடுடி. அங்கே போர்ட்ல என்ன போட்டிருக்கான் பாரு.. ஹாட் காஃபி 10 ரூபாய்... கோல்ட் காஃபி 25 ரூபாய் ...!".
.
.
Friday, October 8, 2010
"யேசுவின் ஹேர் ஷ்டைல்"
பீட்டர் கர்த்தரை முழுமையாக விசுவசிக்கும் ஓர் அற்புதமான கிறிஸ்துவர்.
தானும் தனது வாழ்க்கையும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் இப்படிதான் இருக்கவேண்டும் எனக் கொள்கை வகுத்து, அதன்படி பிடிவாதமாக வாழ்ந்து வருபவர்.
ஆனால், மகன் ஜான்சன் இந்தக்கால முழு இளைஞன்.
அவன் போடும் ஜீன்ஸ்களும் பெரிய பெரிய டிஸைன் சட்டைகளும் பின் கழுத்துக்குக் கீழே தொங்கும் நீண்ட முடியும் நண்பர்களுடன் அவன் அடிக்கும் செல்போன் அரட்டையும் பீட்டருக்குச் சுத்தமாய்ப் பிடிக்காதுதான் என்றாலும்... தனது ஒரே மகன் வருத்தப் படக்கூடாது என்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்.
பிரச்சினை, ஜான்சன் தனது கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியதும்தான் ஆரம்பித்தது.
ஜான்சன் தன் அப்பாவிடம் வந்து கேட்டான்.
"அப்பா... நான் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியாச்சு. நாளைலருந்து நானும் உங்க காரை யூஸ் பண்ணப் போறேன்..!".
பீட்டர் தன் மகனை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு - தன் மகனுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க இதுதான் சரியான நேரம் என்று யோசித்தபடியே - சொன்னார்.
"ஜான்சன்... உனக்கு நம்ம காரை உபயோகப்படுத்த எல்லா உரிமையும் இருக்கு. ஆனால், அதுக்கு முன்னால் எனக்கு நம்பிக்கை வர நீ சில காரியங்கள் செய்யணும்..."
ஜான்சன் கேட்டான்,"என்னப்பா செய்யணும்..?".
"மொதல்ல டெய்லி பைபிள் படிக்கணும். சும்மா படிக்கறது இல்ல... உணர்ந்து படிக்கணும். எல்லார்கிட்டயும் நல்ல பையன்னு பேர் வாங்கற மாதிரி நடந்துக்கணும். அப்பறம், பின்னால தொங்கற அந்த நீளமான முடியைக் கட் பண்ணி ஷார்ட் பண்ணிக்கணும்..!"
"ஒக்கேப்பா... நீங்க சொன்னபடி செஞ்சுட்டு அப்புறம் காரை வாங்கிக்கறேன்...!".
மூன்று மாதங்கள்...ஜான்சன் சொன்னபடி செய்து காட்டினான்.
பொறுப்பான படிப்பு,நல்ல ரேங்க்,பைபிளில் நாட்டம், சர்ச்சுக்கு தவறாமல் செல்லுதல் என பீட்டருக்கேத்த பையன் என்று ஜான்சன் பேர் வாங்க ஆரம்பித்தான்.
எல்லாம் சரியாக இருந்தாலும்... அந்த ஹேர் ஷ்டைல் விஷயத்தில் மட்டும் மாற்றமே இல்லை.
பீட்டர் பொறுமையாய்க் காத்திருந்த அந்த நாள் வந்தது.
ஜான்சன் அப்பாவிடம் திரும்ப வந்தான்.
"அப்பா... நீங்க என்னைப் பத்தி இப்பத் திருப்தி ஆயிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். எனக்கு எப்ப இருந்து கார் தரப் போறீங்க..?".
பீட்டர் கேட்டார்,"ஜான்சன் நாம என்ன பேசினோம்னு மறந்திட்டியா...? மத்ததெல்லாம் சரி, இந்த ஹேர் ஷ்டைல்... அது அப்படியே இருக்கே...?".
ஜான்சன் தன் அப்பாவிடம் தெளிவாய்க் கூறினான்.
"அப்பா... நானும் மொதல்ல முடிய வெட்டிடலாம்னுதான் நெனச்சேன். ஆனா, பைபிள் படிக்க ஆரம்பிச்சதும்தான் அந்த முடிவை மாத்திக்கிட்டேன். பாருங்க, பைபிள்ல போட்டிருக்கு... சாம்சன் நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, மோசஸ் நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, நோவா நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, இன்னும் ஏன்... யேசுவே என்னை மாதிரி நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு...!".
ஜான்சன் சொல்லி முடித்ததும் பீட்டர் சிரித்தபடியே சொன்னார்.
"ஆமாம் மகனே... நீ சொன்ன மாதிரி அவங்க எல்லோரும் நீளமான முடிதான் வச்சிருந்தாங்க. ஆனா, அவங்க வெளியே போகும் போது, அவங்க அப்பாகிட்ட கார் கேக்கல.. நடந்துதான் போனாங்க...!".
.
.
.
தானும் தனது வாழ்க்கையும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் இப்படிதான் இருக்கவேண்டும் எனக் கொள்கை வகுத்து, அதன்படி பிடிவாதமாக வாழ்ந்து வருபவர்.
ஆனால், மகன் ஜான்சன் இந்தக்கால முழு இளைஞன்.
அவன் போடும் ஜீன்ஸ்களும் பெரிய பெரிய டிஸைன் சட்டைகளும் பின் கழுத்துக்குக் கீழே தொங்கும் நீண்ட முடியும் நண்பர்களுடன் அவன் அடிக்கும் செல்போன் அரட்டையும் பீட்டருக்குச் சுத்தமாய்ப் பிடிக்காதுதான் என்றாலும்... தனது ஒரே மகன் வருத்தப் படக்கூடாது என்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்.
பிரச்சினை, ஜான்சன் தனது கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியதும்தான் ஆரம்பித்தது.
ஜான்சன் தன் அப்பாவிடம் வந்து கேட்டான்.
"அப்பா... நான் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியாச்சு. நாளைலருந்து நானும் உங்க காரை யூஸ் பண்ணப் போறேன்..!".
பீட்டர் தன் மகனை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு - தன் மகனுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க இதுதான் சரியான நேரம் என்று யோசித்தபடியே - சொன்னார்.
"ஜான்சன்... உனக்கு நம்ம காரை உபயோகப்படுத்த எல்லா உரிமையும் இருக்கு. ஆனால், அதுக்கு முன்னால் எனக்கு நம்பிக்கை வர நீ சில காரியங்கள் செய்யணும்..."
ஜான்சன் கேட்டான்,"என்னப்பா செய்யணும்..?".
"மொதல்ல டெய்லி பைபிள் படிக்கணும். சும்மா படிக்கறது இல்ல... உணர்ந்து படிக்கணும். எல்லார்கிட்டயும் நல்ல பையன்னு பேர் வாங்கற மாதிரி நடந்துக்கணும். அப்பறம், பின்னால தொங்கற அந்த நீளமான முடியைக் கட் பண்ணி ஷார்ட் பண்ணிக்கணும்..!"
"ஒக்கேப்பா... நீங்க சொன்னபடி செஞ்சுட்டு அப்புறம் காரை வாங்கிக்கறேன்...!".
மூன்று மாதங்கள்...ஜான்சன் சொன்னபடி செய்து காட்டினான்.
பொறுப்பான படிப்பு,நல்ல ரேங்க்,பைபிளில் நாட்டம், சர்ச்சுக்கு தவறாமல் செல்லுதல் என பீட்டருக்கேத்த பையன் என்று ஜான்சன் பேர் வாங்க ஆரம்பித்தான்.
எல்லாம் சரியாக இருந்தாலும்... அந்த ஹேர் ஷ்டைல் விஷயத்தில் மட்டும் மாற்றமே இல்லை.
பீட்டர் பொறுமையாய்க் காத்திருந்த அந்த நாள் வந்தது.
ஜான்சன் அப்பாவிடம் திரும்ப வந்தான்.
"அப்பா... நீங்க என்னைப் பத்தி இப்பத் திருப்தி ஆயிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். எனக்கு எப்ப இருந்து கார் தரப் போறீங்க..?".
பீட்டர் கேட்டார்,"ஜான்சன் நாம என்ன பேசினோம்னு மறந்திட்டியா...? மத்ததெல்லாம் சரி, இந்த ஹேர் ஷ்டைல்... அது அப்படியே இருக்கே...?".
ஜான்சன் தன் அப்பாவிடம் தெளிவாய்க் கூறினான்.
"அப்பா... நானும் மொதல்ல முடிய வெட்டிடலாம்னுதான் நெனச்சேன். ஆனா, பைபிள் படிக்க ஆரம்பிச்சதும்தான் அந்த முடிவை மாத்திக்கிட்டேன். பாருங்க, பைபிள்ல போட்டிருக்கு... சாம்சன் நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, மோசஸ் நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, நோவா நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு, இன்னும் ஏன்... யேசுவே என்னை மாதிரி நீளமான முடிதான் வச்சிருந்திருக்காரு...!".
ஜான்சன் சொல்லி முடித்ததும் பீட்டர் சிரித்தபடியே சொன்னார்.
"ஆமாம் மகனே... நீ சொன்ன மாதிரி அவங்க எல்லோரும் நீளமான முடிதான் வச்சிருந்தாங்க. ஆனா, அவங்க வெளியே போகும் போது, அவங்க அப்பாகிட்ட கார் கேக்கல.. நடந்துதான் போனாங்க...!".
.
.
.
Thursday, October 7, 2010
டேனி @ கிரிக்கெட்
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஆடும் ஒன்டே மேட்ச் அது.
முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா ஆட, எல்லாம் முடிந்து கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுடன் இந்தியா ஆடிக் கொண்டிருக்கிறது.
கடைசியான இந்த ஓவரில் எடுக்க வேண்டிய ரன்கள் நான்கு.
சுலபமாய் ஜெயிக்க வாய்ப்பு இருந்தாலும், பேட்டிங் சைடில் இருப்பதோ டர்டஜன்சிங்.
மறுமுனையில் நிற்கும் கேப்டன் டேனிக்கு பகீரென்றிருந்தது.
பவுலரான டர்டஜன்சிங் அப்படியொன்றும் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், இப்போது எப்படியாவது ஒரு ரன் எடுத்து ஓடி வந்துவிட்டால், மேட்ச்சை ஜெயித்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருந்தான்.
இருப்பது ஆறு பால்... தேவையோ நாலு ரன்.
என்ன செய்யப் போகிறானோ டர்டஜன்சிங்..!
ஓவரின் முதல் பால்.
ஆஸ்திரேலியா பவுலர் பேயாய் ஓடி வந்து பாலைப் போட்டான்.
பவுன்ஸர்.
டர்டஜன்சிங் குனிந்து கொண்டான்.
ரன் இல்லை.
இன்னும் ஐந்து பால்.. நாலு ரன்.
இப்போது பவுலர் போட்டது யார்க்கர்.
கிழே விழ இருந்த டர்டஜன்சிங் ஒருவாறு சமாளித்து நின்றான்.
"அப்பாடா விக்கட் இல்லை..ரன்னும் இல்லை..."
டேனிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
இன்னும் நாலு பால், நாலு ரன்.
டேனி ஏதோ ஜாடை செய்கிறான்.
டர்டஜன்சிங் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
பவுலர் இப்போது போட்டதோ மகா ஸ்லோ பால்.
தட்டுத் தடுமாறி, டர்டஜன் அந்த பாலைத் தொடுவதற்குள் அது கீப்பர் கைக்குப் போய்விட்டது...ரன் இல்லை.
இன்னும் மூணு பால், நாலு ரன்.
கேப்டன் டேனி, கடுப்புடன் டர்டஜன்சிங்கிடம் சென்று ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தான்.
அடுத்த பால்... சற்று வேகமாய் ஸ்டெம்பை நோக்கி சீறிக் கொண்டு வர, டர்டஜன்சிங் சற்றும் யோசிக்காமல் ஸ்டம்ப்பை விட்டு சுத்தமாய் ரெண்டு அடி விலகி நின்றான்.
லட்டுப்போல், பந்து ஸ்டம்ப்பைத் தகர்க்க...
"க்ளீன் போல்ட்...!" ஆஸ்திரேலியர்கள் கத்திக்கொண்டு கொண்டாட்டமாய் ஓட...
இந்தியா தோற்றது.
பெவிலியன் திரும்பும்போது, டேனி பயங்கரக் கோபத்துடன் டர்டஜன்சிங்கைப் பார்த்துக் கேட்டான்.
"ஏண்டா... அப்படிப் பண்ணின...?"
டேனி அப்படிக் கேட்டதும், டர்டஜன்சிங் அப்பாவியாய் டேனியைப் பார்த்துக் கேட்டான்.
"என்னடா இப்படிக் கேக்கற..? நீதானடா சொன்ன - 'பயபடாம வெளயாடு, பீ போல்டுன்னு...' - அதான் போல்டாயிட்டேன்..!".
.
.
முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா ஆட, எல்லாம் முடிந்து கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுடன் இந்தியா ஆடிக் கொண்டிருக்கிறது.
கடைசியான இந்த ஓவரில் எடுக்க வேண்டிய ரன்கள் நான்கு.
சுலபமாய் ஜெயிக்க வாய்ப்பு இருந்தாலும், பேட்டிங் சைடில் இருப்பதோ டர்டஜன்சிங்.
மறுமுனையில் நிற்கும் கேப்டன் டேனிக்கு பகீரென்றிருந்தது.
பவுலரான டர்டஜன்சிங் அப்படியொன்றும் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், இப்போது எப்படியாவது ஒரு ரன் எடுத்து ஓடி வந்துவிட்டால், மேட்ச்சை ஜெயித்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருந்தான்.
இருப்பது ஆறு பால்... தேவையோ நாலு ரன்.
என்ன செய்யப் போகிறானோ டர்டஜன்சிங்..!
ஓவரின் முதல் பால்.
ஆஸ்திரேலியா பவுலர் பேயாய் ஓடி வந்து பாலைப் போட்டான்.
பவுன்ஸர்.
டர்டஜன்சிங் குனிந்து கொண்டான்.
ரன் இல்லை.
இன்னும் ஐந்து பால்.. நாலு ரன்.
இப்போது பவுலர் போட்டது யார்க்கர்.
கிழே விழ இருந்த டர்டஜன்சிங் ஒருவாறு சமாளித்து நின்றான்.
"அப்பாடா விக்கட் இல்லை..ரன்னும் இல்லை..."
டேனிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
இன்னும் நாலு பால், நாலு ரன்.
டேனி ஏதோ ஜாடை செய்கிறான்.
டர்டஜன்சிங் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
பவுலர் இப்போது போட்டதோ மகா ஸ்லோ பால்.
தட்டுத் தடுமாறி, டர்டஜன் அந்த பாலைத் தொடுவதற்குள் அது கீப்பர் கைக்குப் போய்விட்டது...ரன் இல்லை.
இன்னும் மூணு பால், நாலு ரன்.
கேப்டன் டேனி, கடுப்புடன் டர்டஜன்சிங்கிடம் சென்று ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தான்.
அடுத்த பால்... சற்று வேகமாய் ஸ்டெம்பை நோக்கி சீறிக் கொண்டு வர, டர்டஜன்சிங் சற்றும் யோசிக்காமல் ஸ்டம்ப்பை விட்டு சுத்தமாய் ரெண்டு அடி விலகி நின்றான்.
லட்டுப்போல், பந்து ஸ்டம்ப்பைத் தகர்க்க...
"க்ளீன் போல்ட்...!" ஆஸ்திரேலியர்கள் கத்திக்கொண்டு கொண்டாட்டமாய் ஓட...
இந்தியா தோற்றது.
பெவிலியன் திரும்பும்போது, டேனி பயங்கரக் கோபத்துடன் டர்டஜன்சிங்கைப் பார்த்துக் கேட்டான்.
"ஏண்டா... அப்படிப் பண்ணின...?"
டேனி அப்படிக் கேட்டதும், டர்டஜன்சிங் அப்பாவியாய் டேனியைப் பார்த்துக் கேட்டான்.
"என்னடா இப்படிக் கேக்கற..? நீதானடா சொன்ன - 'பயபடாம வெளயாடு, பீ போல்டுன்னு...' - அதான் போல்டாயிட்டேன்..!".
.
.
Labels:
கிரிக்கெட்,
பவுலர்,
பவுன்ஸர்,
பேட்ஸ்மேன்,
யார்க்கர்,
ரன்,
விக்கட்
2
comments
Wednesday, October 6, 2010
த்ரீ ஸ்டேஜஸ்
குரு தனது சிஷ்யர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
"ஞானம் அடைவதற்கு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது..!".
ஆர்வத்துடன் ஒரு சிஷ்யன் கேட்டார்.
"அவை என்னென்ன நிலைகள் என்று கூற முடியுமா குருவே..?".
குரு புன்னகைத்த படியே சொன்னார்.
"அவை பாமர நிலை, ஆன்மிக நிலை மற்றும் தெய்வீக நிலை..."
சிஷ்யர் தொடர்ந்து கேட்டார்.
"குருவே பாமர நிலை என்பது என்ன..?".
குரு சொன்னார்.
"அது மிக எளிமையானது. அந்த நிலையில் ஒருவனுக்கு மரங்கள் மரங்களாகவும் மலைகள் மலைகளாகவும் தெரிகிறது..!".
சிஷ்யர் அடுத்துக் கேட்டார்.
"சரி குருவே... ஆன்மிக நிலை என்பது என்ன..?"
குரு தொடர்ந்தார்.
"அது சற்று நுண்மையானது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் நிலை அது. இந்நிலையில் அவன் பொருட்களின் உள்ளார்ந்து பார்க்கும்போது மரங்கள் நீண்ட நேரம் மரங்களாக இருப்பதில்லை... மலைகளும் நீண்ட நேரம் மலைகளாக இருப்பதில்லை..!".
சிஷ்யர் விடுவதாயில்லை... அவர் கேட்டார்.
"அப்போ தெய்வீக நிலை என்பது என்ன குருவே..?".
குரு தனது புன்முறுவல் மாறாமல் தொடர்ந்து சொன்னார்.
"அதுதான் முழுவதும் உணர்ந்த ஞான நிலை. இப்போது மரங்கள் மீண்டும் மரங்களாகவும் மலைகள் மீண்டும் மலைகளாகவும் அவனுக்குத் தெரிய ஆரம்பிக்கும்...!".
"ஞானம் அடைவதற்கு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது..!".
ஆர்வத்துடன் ஒரு சிஷ்யன் கேட்டார்.
"அவை என்னென்ன நிலைகள் என்று கூற முடியுமா குருவே..?".
குரு புன்னகைத்த படியே சொன்னார்.
"அவை பாமர நிலை, ஆன்மிக நிலை மற்றும் தெய்வீக நிலை..."
சிஷ்யர் தொடர்ந்து கேட்டார்.
"குருவே பாமர நிலை என்பது என்ன..?".
குரு சொன்னார்.
"அது மிக எளிமையானது. அந்த நிலையில் ஒருவனுக்கு மரங்கள் மரங்களாகவும் மலைகள் மலைகளாகவும் தெரிகிறது..!".
சிஷ்யர் அடுத்துக் கேட்டார்.
"சரி குருவே... ஆன்மிக நிலை என்பது என்ன..?"
குரு தொடர்ந்தார்.
"அது சற்று நுண்மையானது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் நிலை அது. இந்நிலையில் அவன் பொருட்களின் உள்ளார்ந்து பார்க்கும்போது மரங்கள் நீண்ட நேரம் மரங்களாக இருப்பதில்லை... மலைகளும் நீண்ட நேரம் மலைகளாக இருப்பதில்லை..!".
சிஷ்யர் விடுவதாயில்லை... அவர் கேட்டார்.
"அப்போ தெய்வீக நிலை என்பது என்ன குருவே..?".
குரு தனது புன்முறுவல் மாறாமல் தொடர்ந்து சொன்னார்.
"அதுதான் முழுவதும் உணர்ந்த ஞான நிலை. இப்போது மரங்கள் மீண்டும் மரங்களாகவும் மலைகள் மீண்டும் மலைகளாகவும் அவனுக்குத் தெரிய ஆரம்பிக்கும்...!".
Tuesday, October 5, 2010
முத்தம்
அன்று என் வீட்டில் ஒரு கெட்-டுகெதர் அரேன்ஞ்மென்ட் ஏற்பாடு செய்திருந்தேன்.
அதன் பொருட்டு வீட்டிற்கு உடன் பணிபுரியும் தோழிகள் சிலரை வரச் சொல்லியிருந்தேன்.
நானும் என் கணவரும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, பார்ட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பு... கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு அப்படியே அழுக்காய் வந்து நின்றான் என் நான்கு வயது மகன் டேனி.
நான் அவனைப் பார்த்து,"டேனிக்குட்டி ஓடு... ஓடிபோய் முகத்தைப் பளிச்சுனு கழுவிட்டு வந்து நில்லு பார்ப்போம்...!".
டேனி உடனே மறுப்பாய்த் தலையை ஆட்டினான்.
"முடியாது... முகத்தைக் கழுவ மாட்டேன் போ...!".
சிலசமயங்களில், அவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால்.. அவனை தாஜா செய்ய ஆரம்பித்தேன்.
"டேனி குட் பாய்தானே...? யாராவது டேனியப் பார்த்து 'அழுக்குப் பையன்'னு சொல்லலாமா...? இப்ப நீ போட்டிருக்கற ட்ரஸ் சூப்பரா இருக்கு. போய் முகத்தை மட்டும் நல்லா சோப்புப் போட்டு கழுவிட்டு வருவியாம். அப்பத்தான் பார்ட்டிக்கு வர்ற அம்மாவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் 'யாரிந்த அழகான குட்டிப் பையன்'னு தூக்கி கன்னத்துல முத்தம் கொடுப்பாங்களாம்...?".
நான் செல்லமாய் அவனிடம் பேசப் பேச... லேசாய் மனம் மாறியவன் முகம் கழுவ ஒத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்.
பார்ட்டிக்கான டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கும்போது திருத்தமாய் ட்ரஸ் பண்ணிக்கொண்டு வேகவேகமாய் ஹாலுக்கு திரும்ப ஓடி வந்தவன், சிரித்தபடியே என்னிடம் சொன்னான்.
"அம்மா... அப்பாவும் முகம் கழுவிக்கிட்டு இருக்காங்க...!".
.
.
.
அதன் பொருட்டு வீட்டிற்கு உடன் பணிபுரியும் தோழிகள் சிலரை வரச் சொல்லியிருந்தேன்.
நானும் என் கணவரும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, பார்ட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பு... கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு அப்படியே அழுக்காய் வந்து நின்றான் என் நான்கு வயது மகன் டேனி.
நான் அவனைப் பார்த்து,"டேனிக்குட்டி ஓடு... ஓடிபோய் முகத்தைப் பளிச்சுனு கழுவிட்டு வந்து நில்லு பார்ப்போம்...!".
டேனி உடனே மறுப்பாய்த் தலையை ஆட்டினான்.
"முடியாது... முகத்தைக் கழுவ மாட்டேன் போ...!".
சிலசமயங்களில், அவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால்.. அவனை தாஜா செய்ய ஆரம்பித்தேன்.
"டேனி குட் பாய்தானே...? யாராவது டேனியப் பார்த்து 'அழுக்குப் பையன்'னு சொல்லலாமா...? இப்ப நீ போட்டிருக்கற ட்ரஸ் சூப்பரா இருக்கு. போய் முகத்தை மட்டும் நல்லா சோப்புப் போட்டு கழுவிட்டு வருவியாம். அப்பத்தான் பார்ட்டிக்கு வர்ற அம்மாவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் 'யாரிந்த அழகான குட்டிப் பையன்'னு தூக்கி கன்னத்துல முத்தம் கொடுப்பாங்களாம்...?".
நான் செல்லமாய் அவனிடம் பேசப் பேச... லேசாய் மனம் மாறியவன் முகம் கழுவ ஒத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்.
பார்ட்டிக்கான டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கும்போது திருத்தமாய் ட்ரஸ் பண்ணிக்கொண்டு வேகவேகமாய் ஹாலுக்கு திரும்ப ஓடி வந்தவன், சிரித்தபடியே என்னிடம் சொன்னான்.
"அம்மா... அப்பாவும் முகம் கழுவிக்கிட்டு இருக்காங்க...!".
.
.
.
Labels:
அரேன்ஞ்மென்ட்,
கெட்-டுகெதர்,
தாஜா,
தோழிகள்,
பளிச்,
முகம்,
முத்தம்
11
comments
மஞ்சுஸ்ரீ
மஞ்சுஸ்ரீ என்னும் சீடருக்கு ஞானம் வந்துவிட்டதை உணர்ந்த புத்தர் அவரை அழைத்தார்.
"மஞ்சு... நீ உலக மக்களுக்கு ஞானத்தை வழங்கும் நேரம் வந்துவிட்டது. விழிப்புணர்வு பெற்றுவிட்டாய்! நீ போகலாம்..." என்று வாழ்த்தி அனுப்பினார்.
குருவின் ஆணையை மீற முடியாத மஞ்சு, புத்தரைப் பிரிய மனமின்றி அழுது புரண்டார்.
அதைப் பார்த்த புத்தர்,"ஏன் அழுகிறாய்? உனக்கு ஞானம் வந்த பிறகும் ஏன் இந்த மயக்கம். இன்னும் என்னிடம் இருந்து உனக்கு என்ன நடக்கப் போகிறது..?" என்று கேட்டார்.
"ஐயனே! இதைவிட பாக்கியம் வேறு என்ன இருக்கப் போகிறது. உங்களை அன்றாடம் பார்த்துப் பரவசம் கொள்வது ஒன்றே எனக்குப் போதுமானது" என்று வருந்தினார் மஞ்சு.
புத்தர் மஞ்சுவை மிகப் பரிவாய் அருகில் அழைத்தார்.
"நீ எங்கிருந்தாலும் என் அன்பும் ஆசியும் உண்டு.. சென்று வா...!" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
இதைக் கண்ட மற்ற சீடர்கள் புத்தரிடம் கேட்டார்கள்.
"ஞானம் கைவரப் பெற்ற மஞ்சு ஏன் இப்படிச் செய்கிறார்?".
அதற்கு புத்தர் சொன்னார்.
"அடக்கம் உள்ள இடத்தில் அகந்தை என்றும் தலைகாட்டுவதில்லை...!".
.
.
.
"மஞ்சு... நீ உலக மக்களுக்கு ஞானத்தை வழங்கும் நேரம் வந்துவிட்டது. விழிப்புணர்வு பெற்றுவிட்டாய்! நீ போகலாம்..." என்று வாழ்த்தி அனுப்பினார்.
குருவின் ஆணையை மீற முடியாத மஞ்சு, புத்தரைப் பிரிய மனமின்றி அழுது புரண்டார்.
அதைப் பார்த்த புத்தர்,"ஏன் அழுகிறாய்? உனக்கு ஞானம் வந்த பிறகும் ஏன் இந்த மயக்கம். இன்னும் என்னிடம் இருந்து உனக்கு என்ன நடக்கப் போகிறது..?" என்று கேட்டார்.
"ஐயனே! இதைவிட பாக்கியம் வேறு என்ன இருக்கப் போகிறது. உங்களை அன்றாடம் பார்த்துப் பரவசம் கொள்வது ஒன்றே எனக்குப் போதுமானது" என்று வருந்தினார் மஞ்சு.
புத்தர் மஞ்சுவை மிகப் பரிவாய் அருகில் அழைத்தார்.
"நீ எங்கிருந்தாலும் என் அன்பும் ஆசியும் உண்டு.. சென்று வா...!" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
இதைக் கண்ட மற்ற சீடர்கள் புத்தரிடம் கேட்டார்கள்.
"ஞானம் கைவரப் பெற்ற மஞ்சு ஏன் இப்படிச் செய்கிறார்?".
அதற்கு புத்தர் சொன்னார்.
"அடக்கம் உள்ள இடத்தில் அகந்தை என்றும் தலைகாட்டுவதில்லை...!".
.
.
.
Labels:
அழுது,
ஆணை,
ஐயன்,
நேரம்,
பரவசம்,
பாக்கியம்,
மஞ்சுஸ்ரீ,
விழிப்புணர்வு
1 comments
வாய் கொஞ்சம் நீளம்
ஒரு காகமும் தவளையும் பேசிக் கொண்டிருந்தன.
காகம் தவளையிடம் சொன்னது.
"தவளையே... உனக்குத் தெரியுமா? சொர்க்கத்தில் ஒரு மிகப் பெரிய விருந்து நடக்கப் போகிறது...!".
தவளை உடனே தன் வாயைப் பிளந்தது.
"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".
காகம் தொடர்ந்தது.
"அங்கே, நீ இப்பூவுலகில் பார்த்த எல்லாவற்றையும்விட மிகச் சுவையான உணவுகளும் அமிர்த பானங்களும் பரிமாறப்படப் போகிறது..!".
தவளை மறுபடியும் தன் வாயைப் பிளந்தது.
"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".
காகம் தொடர்ந்தது.
"நாம் விளையாட உலகின் மிக அழகிய ஜோடியும் சின்ன சொர்க்கம் போன்ற வீடும் அங்கே கொடுப்பார்கள்..!"
தவளை தன் வாயை மேலும் அதிகமாகப் பிளந்தது.
"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".
காகம் தொடர்ந்து சொன்னது.
"ஆனால் ஒரு பிரச்சினை. அங்கே பெரிய வாயுடைய யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்களாம்...!"
தவளை உடனே தனது வாயை இறுக மூடிக்கொண்டு முணுமுணுத்தது.
"பாவம் முதலை... ஏமாந்துவிடும்..!".
.
.
.
காகம் தவளையிடம் சொன்னது.
"தவளையே... உனக்குத் தெரியுமா? சொர்க்கத்தில் ஒரு மிகப் பெரிய விருந்து நடக்கப் போகிறது...!".
தவளை உடனே தன் வாயைப் பிளந்தது.
"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".
காகம் தொடர்ந்தது.
"அங்கே, நீ இப்பூவுலகில் பார்த்த எல்லாவற்றையும்விட மிகச் சுவையான உணவுகளும் அமிர்த பானங்களும் பரிமாறப்படப் போகிறது..!".
தவளை மறுபடியும் தன் வாயைப் பிளந்தது.
"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".
காகம் தொடர்ந்தது.
"நாம் விளையாட உலகின் மிக அழகிய ஜோடியும் சின்ன சொர்க்கம் போன்ற வீடும் அங்கே கொடுப்பார்கள்..!"
தவளை தன் வாயை மேலும் அதிகமாகப் பிளந்தது.
"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".
காகம் தொடர்ந்து சொன்னது.
"ஆனால் ஒரு பிரச்சினை. அங்கே பெரிய வாயுடைய யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்களாம்...!"
தவளை உடனே தனது வாயை இறுக மூடிக்கொண்டு முணுமுணுத்தது.
"பாவம் முதலை... ஏமாந்துவிடும்..!".
.
.
.
Monday, October 4, 2010
தலையில் நின்ற செருப்பு
செனகா என்பவர் பித்தாகரசின் சீடர்.
அவர் தனது செருப்புகள் தேய்ந்து போனதால், செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புக்காக அளவு கொடுத்திருந்தார்.
செனகா அதைப் பெற்றுக்கொள்ளச் சென்ற அன்று, கையில் பணம் இல்லாததால்... அடுத்த வாரம் கூலிப்பணம் தருவதாகச் சொல்லி, கடனாக அந்த ஜோடிச் செருப்பைப் பெற்றுக் சென்றார்.
ஒரு வாரம் கழிந்தது.
செனகா அந்தப் பாக்கிப் பணத்தைக் கொடுக்கச் சென்றபோது, அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இறந்து போயிருந்தார்.
தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே சப்தமில்லாமல் திரும்பிவிட்டார் செனகா.
அடுத்த ஒரு வாரமும் நத்தையாய் நகர்ந்தது.
ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வில், உள்ளுக்குள்ளேயே குறுகிக் கொண்டிருந்தார் செனகா.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்...
ஒருநாள் பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசிவிட்டுக் கத்தினார்.
"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...!".
.
.
.
அவர் தனது செருப்புகள் தேய்ந்து போனதால், செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புக்காக அளவு கொடுத்திருந்தார்.
செனகா அதைப் பெற்றுக்கொள்ளச் சென்ற அன்று, கையில் பணம் இல்லாததால்... அடுத்த வாரம் கூலிப்பணம் தருவதாகச் சொல்லி, கடனாக அந்த ஜோடிச் செருப்பைப் பெற்றுக் சென்றார்.
ஒரு வாரம் கழிந்தது.
செனகா அந்தப் பாக்கிப் பணத்தைக் கொடுக்கச் சென்றபோது, அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இறந்து போயிருந்தார்.
தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே சப்தமில்லாமல் திரும்பிவிட்டார் செனகா.
அடுத்த ஒரு வாரமும் நத்தையாய் நகர்ந்தது.
ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வில், உள்ளுக்குள்ளேயே குறுகிக் கொண்டிருந்தார் செனகா.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்...
ஒருநாள் பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசிவிட்டுக் கத்தினார்.
"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...!".
.
.
.
Labels:
அளவு,
குறுகி,
செருப்பு,
செனகா,
தொழிலாளி,
பாக்கி,
பித்தாகரஸ்,
மெச்சி
1 comments
Friday, October 1, 2010
அப்பிரதட்சணம்
டேனி அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது..
வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடப் போய் இருக்கிறான்.
சாமி கும்பிட்டு விட்டு, அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான்.
கொஞ்ச நேரம் கழித்து, அவனைப் பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி.
வலமிருந்து இடமாக பிரதட்சணம் சுத்தாமல். பையன் அப்பிரதட்சணமாக இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.
இவனது கோக்குமாக்கை அந்த அர்ச்சகர், அவனை தடுத்து நிறுத்தி.. "ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க...?"ன்னு கேட்டிருக்கார்.
அவனோ, ”என்னோட அம்மா அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க... நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதலா சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்...”னு சொல்லி இருக்கான்.
.
.
.
நன்றி: யெஸ்.பாலபாரதி
வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடப் போய் இருக்கிறான்.
சாமி கும்பிட்டு விட்டு, அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான்.
கொஞ்ச நேரம் கழித்து, அவனைப் பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி.
வலமிருந்து இடமாக பிரதட்சணம் சுத்தாமல். பையன் அப்பிரதட்சணமாக இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.
இவனது கோக்குமாக்கை அந்த அர்ச்சகர், அவனை தடுத்து நிறுத்தி.. "ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க...?"ன்னு கேட்டிருக்கார்.
அவனோ, ”என்னோட அம்மா அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க... நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதலா சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்...”னு சொல்லி இருக்கான்.
.
.
.
நன்றி: யெஸ்.பாலபாரதி
Labels:
அர்ச்சகர்,
அனுமார்,
கோக்குமாக்கு,
சந்நிதி,
சுத்து,
பிரதட்சணம்
0
comments
Thursday, September 30, 2010
பனிக்கரடியின் குழப்பம்
உலகின் உச்சியில் துருவத்தின் ஒரு ஓரத்தில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன ஒரு அப்பாப் பனிக்கரடியும் குட்டிப் பனிக்கரடியும்.
துள்ளிகுதித்து விளையாடிக் கொண்டே ஓடிய குட்டிப் பனிக்கரடி திடீரென நின்று தன் அப்பாவைப் பார்த்துக் குழப்பத்துடன் கேட்டது.
"அப்பா... நான் உண்மையிலேயே பனிக்கரடிதானாப்பா..?"
அப்பாப் பனிக்கரடி குட்டியைப் பார்த்துச் சொன்னது.
"ஆமாடா செல்லம். அதுல என்ன சந்தேகம்..?"
குட்டி தனது அடுத்த கேள்வியைக் கேட்டது.
"அப்ப நீ..?"
"ஆமா, நானும் பனிக்கரடிதான்...!".
"அம்மா...?"
அப்பாப் பனிக்கரடி தன் மகனின் தலையை வாஞ்சையாய்த் தடவியவாறே சொன்னது.
"நான்,நீ,அம்மா எல்லோருமே பனிக்கரடிதான். ஏன் கேட்கிற...?".
குட்டி தன் குழப்பம் நீங்கவே சந்தோசமாய்,"ஒண்ணுமில்லப்பா, சும்மாத்தான் கேட்டேன்.." என்றபடி மறுபடி விளையாட ஓடியது.
கொஞ்ச நேரம்தான்...குட்டிப் பனிக்கரடி மீண்டும் குழப்பத்துடன் அப்பாவிடம் வந்தது.
"அப்பா.. நாமெல்லாம் உண்மையிலேயே பனிக்கரடிதானா..?"
அப்பா ஆச்சர்யத்துடன் திரும்பக் கேட்டது.
"ஆமாடா... ஏன் கேக்கற...?"
"சும்மாத்தாம்பா... நாம பனிக்கரடிங்கறது சரி. உன் அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான்...!".
"அம்மாவோட அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான். ஏன் கேக்கற?"
குட்டிப் பனிக்கரடி,"இல்லப்பா, கேட்டேன்..!" என்று சொல்லிவிட்டு மறுபடி குஷியாய் ஓடியது.
சில நிமிடம்தான் இருக்கும்.
குட்டி திரும்பவும் தன் அப்பாவிடம் ஓடி வந்தது.
"அப்பா... நாம உண்மையிலேயே பனிக்கரடிதானா..?".
அப்பாப் பனிக்கரடி இப்போது கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.
"இங்க பாரு... நாம பனிக்கரடிதான். எங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். அவங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். நம்ம பரம்பரையே பனிக்கரடிதான். இப்பச் சொல்லு நீ ஏன் அதைக் கேக்கற...?"
அப்பாப் பனிக்கரடி கோபத்துடன் கேட்டதும், குட்டிப் பனிக்கரடி தன் குழப்பம் சற்றும் விலகாமல் சொன்னது.
"இல்லப்பா... எனக்கு லேசாய்க் குளிருது...!".
துள்ளிகுதித்து விளையாடிக் கொண்டே ஓடிய குட்டிப் பனிக்கரடி திடீரென நின்று தன் அப்பாவைப் பார்த்துக் குழப்பத்துடன் கேட்டது.
"அப்பா... நான் உண்மையிலேயே பனிக்கரடிதானாப்பா..?"
அப்பாப் பனிக்கரடி குட்டியைப் பார்த்துச் சொன்னது.
"ஆமாடா செல்லம். அதுல என்ன சந்தேகம்..?"
குட்டி தனது அடுத்த கேள்வியைக் கேட்டது.
"அப்ப நீ..?"
"ஆமா, நானும் பனிக்கரடிதான்...!".
"அம்மா...?"
அப்பாப் பனிக்கரடி தன் மகனின் தலையை வாஞ்சையாய்த் தடவியவாறே சொன்னது.
"நான்,நீ,அம்மா எல்லோருமே பனிக்கரடிதான். ஏன் கேட்கிற...?".
குட்டி தன் குழப்பம் நீங்கவே சந்தோசமாய்,"ஒண்ணுமில்லப்பா, சும்மாத்தான் கேட்டேன்.." என்றபடி மறுபடி விளையாட ஓடியது.
கொஞ்ச நேரம்தான்...குட்டிப் பனிக்கரடி மீண்டும் குழப்பத்துடன் அப்பாவிடம் வந்தது.
"அப்பா.. நாமெல்லாம் உண்மையிலேயே பனிக்கரடிதானா..?"
அப்பா ஆச்சர்யத்துடன் திரும்பக் கேட்டது.
"ஆமாடா... ஏன் கேக்கற...?"
"சும்மாத்தாம்பா... நாம பனிக்கரடிங்கறது சரி. உன் அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான்...!".
"அம்மாவோட அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான். ஏன் கேக்கற?"
குட்டிப் பனிக்கரடி,"இல்லப்பா, கேட்டேன்..!" என்று சொல்லிவிட்டு மறுபடி குஷியாய் ஓடியது.
சில நிமிடம்தான் இருக்கும்.
குட்டி திரும்பவும் தன் அப்பாவிடம் ஓடி வந்தது.
"அப்பா... நாம உண்மையிலேயே பனிக்கரடிதானா..?".
அப்பாப் பனிக்கரடி இப்போது கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.
"இங்க பாரு... நாம பனிக்கரடிதான். எங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். அவங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். நம்ம பரம்பரையே பனிக்கரடிதான். இப்பச் சொல்லு நீ ஏன் அதைக் கேக்கற...?"
அப்பாப் பனிக்கரடி கோபத்துடன் கேட்டதும், குட்டிப் பனிக்கரடி தன் குழப்பம் சற்றும் விலகாமல் சொன்னது.
"இல்லப்பா... எனக்கு லேசாய்க் குளிருது...!".
Tuesday, September 28, 2010
கண்ணாமூச்சி
மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
Labels:
ஒளிந்து,
கண்டுபிடி,
கண்ணாமூச்சி,
விளையாட்டு
1 comments
Monday, September 27, 2010
பேசு பேசாமலிரு
புத்தர் வாழ்ந்த காலத்தில் சாரிபுத்தர் என்ற துறவி இருந்தார்.
ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர்,"உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை." என்று புகழ்ந்தார்.
புத்தரும் அவரிடம்,"அருமையாகச் சொன்னீர்கள். இதற்கு முன்வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..!" என்று கேட்டார்.
மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.
"அது சரி.. பரவாயில்லை.! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்...!" என்றார்.
அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.
அப்போது புத்தர்,"அதுதான் சரி. தெரிந்ததைப்பற்றிப் பேசுவதும் தெரியாததைப் பற்றி மௌனம் காப்பதும்தான் சாலச்சிறந்தது...!" என்றார்.
அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவரான சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப்போல ஏற்றார்.
.
.
ஒருமுறை புத்தரைக் காண வந்த சாரிபுத்தர்,"உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவர் வேறொருவர் உலகில் இல்லை." என்று புகழ்ந்தார்.
புத்தரும் அவரிடம்,"அருமையாகச் சொன்னீர்கள். இதற்கு முன்வாழ்ந்த புத்தர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..!" என்று கேட்டார்.
மறுமொழி ஏதும்பேச முடியாமல் சாரிபுத்தர் தயங்கி நின்றார்.
"அது சரி.. பரவாயில்லை.! என்னைப் பற்றியாவது சொல்லுங்களேன். நான் எப்படி வாழ்கிறேன் என்றாவது சொல்லுங்கள்...!" என்றார்.
அதற்கும் சாரிபுத்தர் அமைதி காத்தார்.
அப்போது புத்தர்,"அதுதான் சரி. தெரிந்ததைப்பற்றிப் பேசுவதும் தெரியாததைப் பற்றி மௌனம் காப்பதும்தான் சாலச்சிறந்தது...!" என்றார்.
அறிவிலும் ஞானத்திலும் சிறந்தவரான சாரிபுத்தரும் புத்தரின் அறிவுரையை ஒரு நண்பரைப்போல ஏற்றார்.
.
.
Labels:
அருமை,
காத்தார்,
சாரிபுத்தர்,
சிறந்தவர்,
மறுமொழி,
மௌனம்
2
comments
Saturday, September 25, 2010
டேனியின் ஆம்புலன்ஸ்
ஆற்றுக்குள் சற்றே இறக்கித் தனது வண்டியைக் கழுவிக் கொண்டிருந்தார் அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர்.
கொஞ்ச நேரம் கழுவிய பிறகு, இந்தப் பக்கமாய் வந்த போதுதான் ஆற்றங்கரையில் நாயுடனும் பூனையுடனும் நின்றிருந்த அந்தச் சிறுவன் டேனியைக் கவனித்தார்.
அவன் கையில் இழுத்துச் செல்லக்கூடிய அளவில் சற்றே பெரிய வெள்ளை வண்டியை வைத்திருந்தான்.
அது பார்க்க ஒருமாதிரி ஆம்புலன்ஸ் போலவேதான் இருந்தது.
அந்த வண்டியின் உடலில், அவன் ஆம்புலன்ஸைப் பார்த்துப் பார்த்து அதைப் போலவே அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
அவர் வண்டியைக் கழுவி முடித்தபோது, டேனியும் தனது வண்டியைக் கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தான்.
வண்டியை அவர் துடைக்க ஆரம்பித்த போது அவர் டேனி செய்வதைக் கவனித்து அதிர்ந்து போனார்.
அவன் கையிலிருந்த ஒரு கயிற்றால் அவனுடைய வண்டியை, அந்த நாயின் கழுத்தைச் சுற்றி இழுத்துச் செல்ல வசதியாய் ஒரு பெல்ட்டால் கட்டியிருந்தான்.
கூடவே மற்றொரு கயிற்றால் அந்தப் பூனையின் வயிற்றை அழுத்திப் பிடிக்கும்படி, வண்டி ஓடும்போது வண்டியுடன் இழுத்துச் செல்லும்படி பின்புறமாய் இணைத்துக் கட்டியிருந்தான்.
அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.
ஏற்கனவே கயிறு இறுக்கிய வலியால் பூனை கதறிக் கொண்டிருக்க, டேனி ஆம்புலன்ஸை ஓட்டுகிறேன் என்று நாயை விரட்டினால் பூனை கதறியே குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும்.
எனவே, அவர் அந்தப் பூனையைக் காப்பாற்ற முடிவு செய்து டேனியிடம் சொன்னார்.
"தம்பி... நீ பூனையை முன்னாடி நாய்கூடச் சேர்த்துக் கட்டினேனு வையேன். ரெண்டும் சேர்ந்து இழுக்கும்போது ஆம்புலன்ஸ் இன்னும் ஸ்பீடாப் போகும்ல...?"
ட்ரைவர் சொன்னதும் ஒரு கணம் யோசித்தவன் சொன்னான்.
"ஆமா சார், நீங்க சொல்லற மாதிரி செஞ்சா ஆம்புலன்ஸ் ஸ்பீடாப் போகும்... ஆனா, என் ஆம்புலன்ஸுக்கு சைரென் கிடையாதே.! அதுக்குத்தான் பூனையைக் கத்தற மாதிரிக் கட்டியிருந்தேன்..!".
.
.
.
கொஞ்ச நேரம் கழுவிய பிறகு, இந்தப் பக்கமாய் வந்த போதுதான் ஆற்றங்கரையில் நாயுடனும் பூனையுடனும் நின்றிருந்த அந்தச் சிறுவன் டேனியைக் கவனித்தார்.
அவன் கையில் இழுத்துச் செல்லக்கூடிய அளவில் சற்றே பெரிய வெள்ளை வண்டியை வைத்திருந்தான்.
அது பார்க்க ஒருமாதிரி ஆம்புலன்ஸ் போலவேதான் இருந்தது.
அந்த வண்டியின் உடலில், அவன் ஆம்புலன்ஸைப் பார்த்துப் பார்த்து அதைப் போலவே அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
அவர் வண்டியைக் கழுவி முடித்தபோது, டேனியும் தனது வண்டியைக் கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போலவே மாற்றியிருந்தான்.
வண்டியை அவர் துடைக்க ஆரம்பித்த போது அவர் டேனி செய்வதைக் கவனித்து அதிர்ந்து போனார்.
அவன் கையிலிருந்த ஒரு கயிற்றால் அவனுடைய வண்டியை, அந்த நாயின் கழுத்தைச் சுற்றி இழுத்துச் செல்ல வசதியாய் ஒரு பெல்ட்டால் கட்டியிருந்தான்.
கூடவே மற்றொரு கயிற்றால் அந்தப் பூனையின் வயிற்றை அழுத்திப் பிடிக்கும்படி, வண்டி ஓடும்போது வண்டியுடன் இழுத்துச் செல்லும்படி பின்புறமாய் இணைத்துக் கட்டியிருந்தான்.
அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.
ஏற்கனவே கயிறு இறுக்கிய வலியால் பூனை கதறிக் கொண்டிருக்க, டேனி ஆம்புலன்ஸை ஓட்டுகிறேன் என்று நாயை விரட்டினால் பூனை கதறியே குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகிவிடும்.
எனவே, அவர் அந்தப் பூனையைக் காப்பாற்ற முடிவு செய்து டேனியிடம் சொன்னார்.
"தம்பி... நீ பூனையை முன்னாடி நாய்கூடச் சேர்த்துக் கட்டினேனு வையேன். ரெண்டும் சேர்ந்து இழுக்கும்போது ஆம்புலன்ஸ் இன்னும் ஸ்பீடாப் போகும்ல...?"
ட்ரைவர் சொன்னதும் ஒரு கணம் யோசித்தவன் சொன்னான்.
"ஆமா சார், நீங்க சொல்லற மாதிரி செஞ்சா ஆம்புலன்ஸ் ஸ்பீடாப் போகும்... ஆனா, என் ஆம்புலன்ஸுக்கு சைரென் கிடையாதே.! அதுக்குத்தான் பூனையைக் கத்தற மாதிரிக் கட்டியிருந்தேன்..!".
.
.
.
Labels:
அலங்காரம்,
ஆம்புலன்ஸ்,
இழுத்து,
கதறி,
கழுவி,
சைரென்,
பெல்ட்,
வெள்ளை
2
comments
Friday, September 24, 2010
ஸ்தோத்திரம் ஃபாதர்
தில்லுதுரயும் அவர் நண்பரும் நடந்து போகும் வழியில், ஒரு ஆர்.சி. சர்ச் வாசலில் அந்த நபரைப் பார்த்தார்கள்.
நீண்ட வெள்ளை மழைக்கோட்டை மாட்டி, இடுப்பில் நழுவாமல் இருக்க ஒரு கயிற்றாலும் கட்டியிருந்த அவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் போலவே இருக்க அவரிடம்,"ஸ்தோத்திரம் ஃபாதர்..." என்றார் தில்லுதுரயின் நண்பர்.
அவரும் பதிலுக்கு கிண்டலாகச் சிரித்தபடியே, "ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்..." என்று சொல்லிவிட்டுப் போனார்.
நண்பர் தொடர்ந்து அவரிடம்,"ஃபாதர்..." என்று ஏதோ தொடரப் போக...
இடைநுழைந்த தில்லுதுர, "டேய் நிறுத்து, அவரை எனக்குத் தெரியும்..." என்றவர் தொடர்ந்து சொன்னார்.
"அவர் ஃபாதரே கிடையாது. ஏன்னா, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகூட இருக்கு..!".
.
.
.
நீண்ட வெள்ளை மழைக்கோட்டை மாட்டி, இடுப்பில் நழுவாமல் இருக்க ஒரு கயிற்றாலும் கட்டியிருந்த அவரைப் பார்க்க ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் போலவே இருக்க அவரிடம்,"ஸ்தோத்திரம் ஃபாதர்..." என்றார் தில்லுதுரயின் நண்பர்.
அவரும் பதிலுக்கு கிண்டலாகச் சிரித்தபடியே, "ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்..." என்று சொல்லிவிட்டுப் போனார்.
நண்பர் தொடர்ந்து அவரிடம்,"ஃபாதர்..." என்று ஏதோ தொடரப் போக...
இடைநுழைந்த தில்லுதுர, "டேய் நிறுத்து, அவரை எனக்குத் தெரியும்..." என்றவர் தொடர்ந்து சொன்னார்.
"அவர் ஃபாதரே கிடையாது. ஏன்னா, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகூட இருக்கு..!".
.
.
.
Labels:
ஃபாதர்,
சர்ச்,
நழுவாமல்,
மழைக்கோட்டு,
ஸ்தோத்திரம்
3
comments
Saturday, September 18, 2010
ட்வென்டி 20
அப்பா,அண்ணன்,கணவர்,குழந்தை என மூன்று தலைமுறை மக்களுடன் வாழ்ந்து கிரிக்கெட் பற்றி நன்றாகத் தெரியும் எனக்கு.
நான் சின்னப் பெண்ணாய் இருக்கும் போதிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.
கோபால் அண்ணனும் அப்பாவும் ரேடியோவில் டெஸ்ட் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
கிரிக்கெட் கமெண்ட்ரி இடையில் வரும் ஹிந்தியைப் புரிந்து கொள்வதற்காகவே அடிப்படை ஹிந்தி கற்றுக் கொண்டவன் அண்ணன்.
இதுபோக, மறுநாள் ஹிண்டு ஸ்போர்ட்ஸ் காலம் பார்த்துவிட்டு வேறு ஆர்க்யூமென்ட் ஒரு மணிநேரம் ஓடும்.
பிறகு அப்பா டெஸ்ட் போட்டிகளிலேயே தங்கிவிட, அண்ணன் ஒன்டே மேட்ச் பார்க்க வந்துவிட்டான்.
ஒரு டீமுக்கு அறுபது ஓவர் என்றும் அப்போது தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தது என்றும் ஞாபகம்.
அதற்கப்புறம், கிரிக்கெட் பற்றிப் பேசுபவர்கள் கன்னாபின்னாவெண்று அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.
ஐம்பது ஓவர் மேட்ச் ஆனதும் கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள்.
எங்கள் கல்லூரிப் பெண்கள்கூடக் கிரிக்கெட் பேச ஆரம்பித்தது அப்போதுதான்.
திருமணம் முடிந்து பார்த்தால், கணவரும் லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட் பைத்தியமாகவே இருந்தார்.
மேட்ச் ஃபிக்சிங்' தெரிய ஆரம்பித்த பிறகு அவருடைய கிரிக்கெட் ஆர்வம் குறைந்தது நன்றாகவே தெரிந்தாலும், மேட்ச் நடக்கும்போது வீட்டு டிவியில் கிரிக்கெட்தான் ஓடிக்கொண்டிருக்கும்.
இது தொடரவே, என் மகன் டேனியும் கிரிக்கெட் பைத்தியங்களில் ஒன்றாகவே வளர்ந்து கொண்டிருந்தான்.
இப்போது ட்வென்டி ட்வென்டி எனப் புதிதாய் ஒரு ஐடியாவைப் பிடித்திருக்கிறார்கள் கிரிக்கெட்காரர்கள்.
முதலிலிருந்து கடைசிவரை முரட்டு அடியாய் விளையாடுகிறார்கள் வீரர்கள்.
ஆண்கள் உள்ளே ஆடினால் .. பெண்கள் வெளியே ஆடுகிறார்கள்.
அவசரத்துக்கும் வியாபாரத்துக்கும் ஏற்றபடி விளையாட்டும் மாறிவிட்டது.
இப்போது அப்பாவும் பையனும் ஒன்றாக மேட்ச் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.
முன்பு, கோபால் அண்ணன் மே மாத ஞாயிறு பகல் பூராவும் வெயிலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, ஓய்ந்துபோய் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
என் கணவரும் அப்பிடித்தான் என்பது அவர் பேசும்போது புரிந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது என் பையன் டேனியின் முறை.
என்றும்போல், இன்றும் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட அவன் நண்பர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.
எப்போதுமே தனது ஆண் நண்பர்களை மட்டுமே கூப்பிடும் அவன் இந்த முறை குடியிருப்பின் பெண் தோழிகளையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
டேனியின் நண்பர்கள் ஊருக்குப் போய்விட்டார்களா... இல்லை, பெண்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது விட்டார்களா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் டேனியைக் கூப்பிடும் கேட்டேன்.
"என்னடா ஆர்த்தி,நிஷாவையெல்லாம் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுட்டு இருக்க...? பொண்ணுங்க எல்லாமா கிரிக்கெட் விளையாடறாங்க...!".
கேட்டதும் டேனி மிகச் சாதாரணமாய்ப் பதிலளித்தான்.
"இல்லம்மா... அவங்கெல்லாம் 'சியர் லீடர்ஸ்'. கிரிக்கெட் வெளையாடமாட்டாங்க... நாங்க வெளையாடும்போது சிக்ஸர், ஃபோர் அடிச்சா டேன்ஸ் ஆடி எங்களை என்கரேஜ் பண்ணுவாங்க...!".
.
.
.
நான் சின்னப் பெண்ணாய் இருக்கும் போதிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.
கோபால் அண்ணனும் அப்பாவும் ரேடியோவில் டெஸ்ட் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
கிரிக்கெட் கமெண்ட்ரி இடையில் வரும் ஹிந்தியைப் புரிந்து கொள்வதற்காகவே அடிப்படை ஹிந்தி கற்றுக் கொண்டவன் அண்ணன்.
இதுபோக, மறுநாள் ஹிண்டு ஸ்போர்ட்ஸ் காலம் பார்த்துவிட்டு வேறு ஆர்க்யூமென்ட் ஒரு மணிநேரம் ஓடும்.
பிறகு அப்பா டெஸ்ட் போட்டிகளிலேயே தங்கிவிட, அண்ணன் ஒன்டே மேட்ச் பார்க்க வந்துவிட்டான்.
ஒரு டீமுக்கு அறுபது ஓவர் என்றும் அப்போது தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தது என்றும் ஞாபகம்.
அதற்கப்புறம், கிரிக்கெட் பற்றிப் பேசுபவர்கள் கன்னாபின்னாவெண்று அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.
ஐம்பது ஓவர் மேட்ச் ஆனதும் கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள்.
எங்கள் கல்லூரிப் பெண்கள்கூடக் கிரிக்கெட் பேச ஆரம்பித்தது அப்போதுதான்.
திருமணம் முடிந்து பார்த்தால், கணவரும் லீவ் போட்டுவிட்டு மேட்ச் பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட் பைத்தியமாகவே இருந்தார்.
மேட்ச் ஃபிக்சிங்' தெரிய ஆரம்பித்த பிறகு அவருடைய கிரிக்கெட் ஆர்வம் குறைந்தது நன்றாகவே தெரிந்தாலும், மேட்ச் நடக்கும்போது வீட்டு டிவியில் கிரிக்கெட்தான் ஓடிக்கொண்டிருக்கும்.
இது தொடரவே, என் மகன் டேனியும் கிரிக்கெட் பைத்தியங்களில் ஒன்றாகவே வளர்ந்து கொண்டிருந்தான்.
இப்போது ட்வென்டி ட்வென்டி எனப் புதிதாய் ஒரு ஐடியாவைப் பிடித்திருக்கிறார்கள் கிரிக்கெட்காரர்கள்.
முதலிலிருந்து கடைசிவரை முரட்டு அடியாய் விளையாடுகிறார்கள் வீரர்கள்.
ஆண்கள் உள்ளே ஆடினால் .. பெண்கள் வெளியே ஆடுகிறார்கள்.
அவசரத்துக்கும் வியாபாரத்துக்கும் ஏற்றபடி விளையாட்டும் மாறிவிட்டது.
இப்போது அப்பாவும் பையனும் ஒன்றாக மேட்ச் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.
முன்பு, கோபால் அண்ணன் மே மாத ஞாயிறு பகல் பூராவும் வெயிலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, ஓய்ந்துபோய் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
என் கணவரும் அப்பிடித்தான் என்பது அவர் பேசும்போது புரிந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது என் பையன் டேனியின் முறை.
என்றும்போல், இன்றும் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட அவன் நண்பர்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.
எப்போதுமே தனது ஆண் நண்பர்களை மட்டுமே கூப்பிடும் அவன் இந்த முறை குடியிருப்பின் பெண் தோழிகளையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
டேனியின் நண்பர்கள் ஊருக்குப் போய்விட்டார்களா... இல்லை, பெண்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது விட்டார்களா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் டேனியைக் கூப்பிடும் கேட்டேன்.
"என்னடா ஆர்த்தி,நிஷாவையெல்லாம் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுட்டு இருக்க...? பொண்ணுங்க எல்லாமா கிரிக்கெட் விளையாடறாங்க...!".
கேட்டதும் டேனி மிகச் சாதாரணமாய்ப் பதிலளித்தான்.
"இல்லம்மா... அவங்கெல்லாம் 'சியர் லீடர்ஸ்'. கிரிக்கெட் வெளையாடமாட்டாங்க... நாங்க வெளையாடும்போது சிக்ஸர், ஃபோர் அடிச்சா டேன்ஸ் ஆடி எங்களை என்கரேஜ் பண்ணுவாங்க...!".
.
.
.
Labels:
உலகக்கோப்பை,
ஒன்டே,
ஓவர்,
கமெண்ட்ரி,
கிரிக்கெட்,
டெஸ்ட்,
ஸ்போர்ட்ஸ்,
ஹிந்தி
5
comments
Tuesday, September 14, 2010
நெக்ஸ்ட் டைம் டார்லிங்
.
பேசிக்கலாய் தில்லுதுர பயங்கர சோம்பேறி.
வீட்டு வேலைகள் செய்வதென்றால் எட்டிக்காயாய் கசக்கும் அவருக்கு.
வீட்டுக்கு வந்தால் செய்தித்தாள் புரட்டுவதும் டிவியில் சேனல்கள் வேட்டையாடுவதும்தான் அவரது விருப்ப வேலைகள்.
திருமணம் முடிந்த புதிதில், அவர் மனைவி அவரை ஒரு சின்ன வேலைகூட வாங்க முடியாமல் பட்ட கஷ்டம்... கொஞ்ச நஞ்சமில்லை.
ஆச்சு ரெண்டு வருஷம்.
தில்லுதுர அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவும் ஆகிவிட்டார்.
குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள், உடனிருந்த மாமியாரும் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.
அன்று சனிக்கிழமை.
விடுமுறை என்பதால் தில்லுதுர வீட்டில் இருந்தார்.
காலையில் நியூஸ் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது குழந்தை தொட்டிலிலேயே உச்சா போய்விட்டான்.
மனைவி ஏதோ வேலையாய் உள்ளே இருக்க, தில்லுதுர வாத்ஸல்யமாய் குரல் கொடுத்தார்.
"ஹனி... உன் பிள்ளை என்ன காரியம் பண்ணிருக்கான்னு வந்து பாரு...!".
உள்ளேயிருந்து வேகவேகமாய் வந்த மனைவி,"ஏங்க...நான் தான் உள்ளே வேலையாய் இருக்கேனில்ல... நீங்க கொஞ்சம் இவனுக்கு பேம்பர்ஸ் மாத்திவிடக் கூடாதா...?".
தில்லுதுர இன்னும் கொஞ்சலாய் மனைவியிடம் சொன்னார்.
"அடுத்த தடவை கண்டிப்பா மாத்திவிடுறேன் ஸ்வீட்டி...!".
கணவனின் கொஞ்சலில் மயங்கிப் போன அவள், சந்தோசமாய் குழந்தைக்கு பேம்பர்ஸை மாற்றிவிட்டுப் போனாள்.
காலை முடிந்து மதியம்.. இதேபோல் ஒரு சிச்சுவேஷன் வர மனைவி தில்லுதுரயிடம் சொன்னாள்,"ஏங்க காலைல என்ன சொன்னீங்க...? வாங்க... இப்ப இவனுக்கு பேம்பர்ஸை மாத்திவிடுங்க...!".
ஒருகணம் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்த தில்லுதுர பிறகு தெளிவான குரலில் சொன்னார்.
"டார்லிங்... அடுத்த தடவைனு நான் சொன்னது அடுத்த பேம்பர்ஸுக்கு இல்லை... அடுத்த குழந்தைக்கு...!".
.
.
.
பேசிக்கலாய் தில்லுதுர பயங்கர சோம்பேறி.
வீட்டு வேலைகள் செய்வதென்றால் எட்டிக்காயாய் கசக்கும் அவருக்கு.
வீட்டுக்கு வந்தால் செய்தித்தாள் புரட்டுவதும் டிவியில் சேனல்கள் வேட்டையாடுவதும்தான் அவரது விருப்ப வேலைகள்.
திருமணம் முடிந்த புதிதில், அவர் மனைவி அவரை ஒரு சின்ன வேலைகூட வாங்க முடியாமல் பட்ட கஷ்டம்... கொஞ்ச நஞ்சமில்லை.
ஆச்சு ரெண்டு வருஷம்.
தில்லுதுர அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவும் ஆகிவிட்டார்.
குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள், உடனிருந்த மாமியாரும் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.
அன்று சனிக்கிழமை.
விடுமுறை என்பதால் தில்லுதுர வீட்டில் இருந்தார்.
காலையில் நியூஸ் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது குழந்தை தொட்டிலிலேயே உச்சா போய்விட்டான்.
மனைவி ஏதோ வேலையாய் உள்ளே இருக்க, தில்லுதுர வாத்ஸல்யமாய் குரல் கொடுத்தார்.
"ஹனி... உன் பிள்ளை என்ன காரியம் பண்ணிருக்கான்னு வந்து பாரு...!".
உள்ளேயிருந்து வேகவேகமாய் வந்த மனைவி,"ஏங்க...நான் தான் உள்ளே வேலையாய் இருக்கேனில்ல... நீங்க கொஞ்சம் இவனுக்கு பேம்பர்ஸ் மாத்திவிடக் கூடாதா...?".
தில்லுதுர இன்னும் கொஞ்சலாய் மனைவியிடம் சொன்னார்.
"அடுத்த தடவை கண்டிப்பா மாத்திவிடுறேன் ஸ்வீட்டி...!".
கணவனின் கொஞ்சலில் மயங்கிப் போன அவள், சந்தோசமாய் குழந்தைக்கு பேம்பர்ஸை மாற்றிவிட்டுப் போனாள்.
காலை முடிந்து மதியம்.. இதேபோல் ஒரு சிச்சுவேஷன் வர மனைவி தில்லுதுரயிடம் சொன்னாள்,"ஏங்க காலைல என்ன சொன்னீங்க...? வாங்க... இப்ப இவனுக்கு பேம்பர்ஸை மாத்திவிடுங்க...!".
ஒருகணம் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்த தில்லுதுர பிறகு தெளிவான குரலில் சொன்னார்.
"டார்லிங்... அடுத்த தடவைனு நான் சொன்னது அடுத்த பேம்பர்ஸுக்கு இல்லை... அடுத்த குழந்தைக்கு...!".
.
.
.
Labels:
உச்சா,
டார்லிங்,
பேசிக்,
பேம்பர்ஸ்,
வாத்ஸல்யம்
6
comments
Monday, September 13, 2010
கேளு...கேட்க விடு...!
.
அது ஒரு பௌத்த விஹாரம்.
அதனுள் மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது.
ஒரு வயோதிகத் துறவி அந்த விஹாரத்திற்கு உள்ளே வந்தார்.
அமைதியாக நெடுநேரம் தியானத்தில் லயித்திருந்தார்.
தியானம் முடிந்து அமைதியாக வெளியேறினார்.
இது தினந்தோறும் நிகழ்ந்தது.
விஹாரத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார்.
அன்றும் வழக்கம்போல் துறவி வந்தார்... தியானத்தில் ஆழ்ந்தார்.
தியானம் முடிந்து கிளம்பும்போது மடத்தின் தலைவர் அவரிடம் கேட்டார்.
"அய்யா... நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்...?"
"அவர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்...!".
அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைவர்.
"அப்படியா? அதுசரி... அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்...?"
அந்த வயோதிகத் துறவி அமைதியாக பதில் சொன்னார்.
"நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன்...!".
.
.
.
அது ஒரு பௌத்த விஹாரம்.
அதனுள் மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது.
ஒரு வயோதிகத் துறவி அந்த விஹாரத்திற்கு உள்ளே வந்தார்.
அமைதியாக நெடுநேரம் தியானத்தில் லயித்திருந்தார்.
தியானம் முடிந்து அமைதியாக வெளியேறினார்.
இது தினந்தோறும் நிகழ்ந்தது.
விஹாரத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார்.
அன்றும் வழக்கம்போல் துறவி வந்தார்... தியானத்தில் ஆழ்ந்தார்.
தியானம் முடிந்து கிளம்பும்போது மடத்தின் தலைவர் அவரிடம் கேட்டார்.
"அய்யா... நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்...?"
"அவர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்...!".
அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைவர்.
"அப்படியா? அதுசரி... அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்...?"
அந்த வயோதிகத் துறவி அமைதியாக பதில் சொன்னார்.
"நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன்...!".
.
.
.
Wednesday, September 8, 2010
இளையராஜாவின் காதல்
மகதநாட்டு இளவரசன் மகேந்திரவர்மன் அம்புலிமாமாவில் வருவதுபோல் அப்படியொன்றும் அழகானவன் அல்ல.
லேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.
உங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.
அழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.
ஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.
ஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.
இளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.
சுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.
வயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.
ஆனால், பலனென்னவோ பூஜ்யம்தான்.
ஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.
'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.
மனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.
கொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.
பார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.
வாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.
ஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..?
அவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.
காரணம்...
முதல்நாள், கலர் கருப்பு என்றாள்.
மறுநாள், உடல் ஒல்லி என்றாள்.
அடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.
காதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.
நேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.
"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...!".
தன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.
"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...!".
.
.
லேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.
உங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.
அழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.
ஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.
ஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.
இளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.
சுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.
வயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.
ஆனால், பலனென்னவோ பூஜ்யம்தான்.
ஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.
'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.
மனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.
கொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.
பார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.
வாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.
ஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..?
அவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.
காரணம்...
முதல்நாள், கலர் கருப்பு என்றாள்.
மறுநாள், உடல் ஒல்லி என்றாள்.
அடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.
காதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.
நேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.
"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...!".
தன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.
"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...!".
.
.
Labels:
அல்லு அர்ஜுன்,
ஆர்யா,
இளவரசன்,
கிரீடம்,
கொற்றவை,
தமிழ் மேட்ரிமோனி,
ராஜ்ஜியம்
2
comments
Monday, September 6, 2010
நொந்தகுமாரன்
நந்தகுமாரன் ஒரு காலத்தில் பயங்கர ஃபைனான்சியர்.
இப்போ எல்லாம் போச்சு.
வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.
செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.
குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.
என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.
பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.
எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.
'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.
கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.
மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.
காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.
பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.
மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.
உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.
தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.
"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.
இப்போ எல்லாம் போச்சு.
வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.
செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.
குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.
என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.
பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.
எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.
'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.
கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.
மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.
காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.
பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.
மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.
உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.
தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.
"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.
Labels:
காசு,
கோவில்,
செல்வம்,
திருவுள்ளம்பகவான்,
நோட்டு,
பகவான்,
பணம்,
பிச்சை
8
comments
Thursday, September 2, 2010
கடவுளின் படம்
அது பள்ளியின் ட்ராயிங் வகுப்பு.
குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை.
குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்தச் சிறுவன் வரைவதைப் பார்த்ததும் நின்றார்.
டேனி தன்னருகில் ஆசிரியை நிற்பதும் தெரியாமல் அக்கறையாய் வரைந்து கொண்டிருந்தான்.
அவன் கவனம் எல்லாம் படத்தின் மேலேயே இருந்தது.
டீச்சர் கேட்டார்.
"டேனி என்ன படம் வரைஞ்சுட்டு இருக்க...?".
டேனி கண்களை உயர்த்தாமல் பதில் சொன்னான்.
"கடவுளோட படம் டீச்சர்...!'.
டீச்சர் அவன் ஆர்வத்தைக் கவனித்தபடியே கேட்டார்.
"ஆனா, கடவுள் எப்படி இருப்பாருன்னு யாருக்கும் தெரியாதே...!".
டேனி மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னான்.
"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'.
.
.
.
குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை.
குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்தச் சிறுவன் வரைவதைப் பார்த்ததும் நின்றார்.
டேனி தன்னருகில் ஆசிரியை நிற்பதும் தெரியாமல் அக்கறையாய் வரைந்து கொண்டிருந்தான்.
அவன் கவனம் எல்லாம் படத்தின் மேலேயே இருந்தது.
டீச்சர் கேட்டார்.
"டேனி என்ன படம் வரைஞ்சுட்டு இருக்க...?".
டேனி கண்களை உயர்த்தாமல் பதில் சொன்னான்.
"கடவுளோட படம் டீச்சர்...!'.
டீச்சர் அவன் ஆர்வத்தைக் கவனித்தபடியே கேட்டார்.
"ஆனா, கடவுள் எப்படி இருப்பாருன்னு யாருக்கும் தெரியாதே...!".
டேனி மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னான்.
"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'.
.
.
.
Wednesday, September 1, 2010
டேய் பட்டாபி
பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான்.
சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார்.
"அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?".
பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான்.
"எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!".
சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?"
பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான்.
"ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!".
சித்திரகுப்தன் தொடர்ந்தார்.
"நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?".
பட்டாபி எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.
"இல்லை... ஏனக்கு காதல்னாலே அறவே பிடிக்காது..!" .
சித்திரகுப்தன் பேரேடை புரட்டியபடியே அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மிகப் பிடித்த நண்பர்கள் பெயரைச் சொல்லு...!"
"எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது..!".
சித்திரகுப்தன் வியப்புடன் பட்டாபியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"வீட்டுல நாய், பூனைனு ஏதாவது வளர்த்திருக்கியா..?"
பட்டாபி அதற்கும் அதேபோல் ஒரு அலட்சிய பாவத்துடனேயே பதில் சொன்னான்.
"எனக்கு மிருகங்கள்னாலே அலர்ஜி... அதனால அப்படி எதுவும் வளர்க்கல..!"
பட்டாபி பதில் சொன்னதும் நெற்றியைச் சுருக்கியவாறே யோசித்த சித்திரகுப்தன் மெல்லச் கேட்டார்.
"தம்பி... நீ இறந்து ரொம்ப நாளாயிருக்கும் போலருக்கே. ஆனா, ரொம்ப லேட்டா வந்திருக்க...?".
.
.
.
சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார்.
"அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?".
பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான்.
"எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!".
சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?"
பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான்.
"ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!".
சித்திரகுப்தன் தொடர்ந்தார்.
"நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?".
பட்டாபி எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.
"இல்லை... ஏனக்கு காதல்னாலே அறவே பிடிக்காது..!" .
சித்திரகுப்தன் பேரேடை புரட்டியபடியே அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மிகப் பிடித்த நண்பர்கள் பெயரைச் சொல்லு...!"
"எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது..!".
சித்திரகுப்தன் வியப்புடன் பட்டாபியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"வீட்டுல நாய், பூனைனு ஏதாவது வளர்த்திருக்கியா..?"
பட்டாபி அதற்கும் அதேபோல் ஒரு அலட்சிய பாவத்துடனேயே பதில் சொன்னான்.
"எனக்கு மிருகங்கள்னாலே அலர்ஜி... அதனால அப்படி எதுவும் வளர்க்கல..!"
பட்டாபி பதில் சொன்னதும் நெற்றியைச் சுருக்கியவாறே யோசித்த சித்திரகுப்தன் மெல்லச் கேட்டார்.
"தம்பி... நீ இறந்து ரொம்ப நாளாயிருக்கும் போலருக்கே. ஆனா, ரொம்ப லேட்டா வந்திருக்க...?".
.
.
.
Tuesday, August 31, 2010
மாட்டுப் பெண்
(இது என் கணவர் சொன்ன கதை - அவருடைய வார்த்தைகளில்.)
என் நண்பன் சின்னச்சாமி ஒரு பெரிய பால்பண்ணை வைத்திருக்கிறான்.
ஒரு சமயம் அவன் பசு மாடு ஒன்றின் பிரச்சினை சம்பந்தமாக அருகிலிருந்த வெட்ரினரி டாக்டர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
டாக்டரைப் பார்க்கவோ அங்கே கூட்டமான கூட்டம்.
ஊரிலேயே அவர்தான் கைராசியான டாக்டர் என்று பேச்சு.
அவரிடம் கால்நடை சென்றால், எப்படிப்பட்ட வியாதி என்றாலும் உடனே சொஸ்தமாகிவிடும் என்பது பரவலான நம்பிக்கையாம்.
என் வீட்டில் நாயோ பூனையோ இல்லாததால் எனக்கு இதுபற்ற்யெல்லாம் தெரியாமல்தான் கூடச்சென்றேன்.
டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த நேரத்தில், அவன் சொன்ன டாக்டர் புராணம்தான் இத்தனையும்.
கொஞ்ச நேரத்தில், எங்கள் டோக்கன் எண்ணைச் சொல்ல நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம்.
டாக்டர் சின்னச்சாமியிடம் கேட்டார்.
"என்ன பிரச்சினை..?".
சின்னச்சாமி சொன்னான்.
"சார்... என்னோட பண்ணைல இருக்கற ஒரு பசுமாட்டுகிட்ட ஒரு பிரச்சினை. அது சம்பந்தமா உங்ககிட்ட ஒரு தகவல் கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்...!".
டாக்டர் கேட்டார்.
"பசுவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்களா...?".
"இல்லை சார்..."
"உங்க பண்ணைல எத்தனை பசு இருக்கு...?"
சின்னச்சாமி பதில் சொன்னான்.
டாக்டர் கேட்டார்.
"மத்த பசுக்கள்கிட்ட நீங்க சொன்ன பிரச்சினை இருக்கா..?".
"இல்லை சார்... இந்த ஒரு பசுகிட்ட மட்டும்தான்...!".
டாக்டர் சற்று ஆசுவாசமாய் உட்கார்ந்து என் நண்பனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.
"இப்பச் சொல்லுங்க... அந்தப் பசுகிட்ட என்ன பிரச்சினை...?".
நண்பன் சொல்ல ஆரம்பித்தான்.
"சார்... வாங்கிட்டு வந்த நாளிலிருந்தே இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. வைக்கோல் வச்சா வைக்கோலச் சாப்பிடாது, அத்துக்கிட்டுப் போய் பேப்பரைச் சாப்பிடும். களணித் தண்ணிய வச்சா அதக் குடிக்காம கால்வாய்த் தண்ணியக் குடிக்கப் போயிடும். இப்பக் குட்டி போட்டிருச்சு. ஆனா,கன்னுக்குட்டிக்கு பால் தர்றதில்ல. கறக்கப் போறவங்களை எட்டி ஒதைக்குது... முட்ட வருது..! மொத்தத்துல கண்ட்ரோலே பண்ண முடியலை. அதான் இதுக்கு என்ன பண்ணலாம்னு உங்ககிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்...!".
நண்பன் சொல்லி முடித்ததும் டாக்டர் கொஞ்ச நேரம் யோசித்தவர், என் நண்பனைப் பார்த்துக் கேட்டார்.
"நீங்க அந்த மாட்டை மசக்காளிபுரத்துலருந்தா வாங்கினீங்க..?".
நண்பன் ஒரு கணம் என்னைத் திகைப்புடன் பார்த்துவிட்டு, டாக்டரைப் பார்த்து ஆச்சர்யமாய்க் கேட்டான்.
"ஆமா டாக்டர்... உங்களுக்கு எப்படித் தெரியும்..? நீங்க எப்படிக் கண்டுபிடிச்சீங்க...?".
நண்பன் கேட்டதும் டாக்டர் அலுப்புடன் சொன்னார்.
"ஏன்னா... நானும் அந்த ஊர்லதான் பொண்ணெடுத்தேன்...!".
.
.
.
என் நண்பன் சின்னச்சாமி ஒரு பெரிய பால்பண்ணை வைத்திருக்கிறான்.
ஒரு சமயம் அவன் பசு மாடு ஒன்றின் பிரச்சினை சம்பந்தமாக அருகிலிருந்த வெட்ரினரி டாக்டர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
டாக்டரைப் பார்க்கவோ அங்கே கூட்டமான கூட்டம்.
ஊரிலேயே அவர்தான் கைராசியான டாக்டர் என்று பேச்சு.
அவரிடம் கால்நடை சென்றால், எப்படிப்பட்ட வியாதி என்றாலும் உடனே சொஸ்தமாகிவிடும் என்பது பரவலான நம்பிக்கையாம்.
என் வீட்டில் நாயோ பூனையோ இல்லாததால் எனக்கு இதுபற்ற்யெல்லாம் தெரியாமல்தான் கூடச்சென்றேன்.
டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த நேரத்தில், அவன் சொன்ன டாக்டர் புராணம்தான் இத்தனையும்.
கொஞ்ச நேரத்தில், எங்கள் டோக்கன் எண்ணைச் சொல்ல நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம்.
டாக்டர் சின்னச்சாமியிடம் கேட்டார்.
"என்ன பிரச்சினை..?".
சின்னச்சாமி சொன்னான்.
"சார்... என்னோட பண்ணைல இருக்கற ஒரு பசுமாட்டுகிட்ட ஒரு பிரச்சினை. அது சம்பந்தமா உங்ககிட்ட ஒரு தகவல் கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்...!".
டாக்டர் கேட்டார்.
"பசுவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்களா...?".
"இல்லை சார்..."
"உங்க பண்ணைல எத்தனை பசு இருக்கு...?"
சின்னச்சாமி பதில் சொன்னான்.
டாக்டர் கேட்டார்.
"மத்த பசுக்கள்கிட்ட நீங்க சொன்ன பிரச்சினை இருக்கா..?".
"இல்லை சார்... இந்த ஒரு பசுகிட்ட மட்டும்தான்...!".
டாக்டர் சற்று ஆசுவாசமாய் உட்கார்ந்து என் நண்பனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.
"இப்பச் சொல்லுங்க... அந்தப் பசுகிட்ட என்ன பிரச்சினை...?".
நண்பன் சொல்ல ஆரம்பித்தான்.
"சார்... வாங்கிட்டு வந்த நாளிலிருந்தே இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. வைக்கோல் வச்சா வைக்கோலச் சாப்பிடாது, அத்துக்கிட்டுப் போய் பேப்பரைச் சாப்பிடும். களணித் தண்ணிய வச்சா அதக் குடிக்காம கால்வாய்த் தண்ணியக் குடிக்கப் போயிடும். இப்பக் குட்டி போட்டிருச்சு. ஆனா,கன்னுக்குட்டிக்கு பால் தர்றதில்ல. கறக்கப் போறவங்களை எட்டி ஒதைக்குது... முட்ட வருது..! மொத்தத்துல கண்ட்ரோலே பண்ண முடியலை. அதான் இதுக்கு என்ன பண்ணலாம்னு உங்ககிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்...!".
நண்பன் சொல்லி முடித்ததும் டாக்டர் கொஞ்ச நேரம் யோசித்தவர், என் நண்பனைப் பார்த்துக் கேட்டார்.
"நீங்க அந்த மாட்டை மசக்காளிபுரத்துலருந்தா வாங்கினீங்க..?".
நண்பன் ஒரு கணம் என்னைத் திகைப்புடன் பார்த்துவிட்டு, டாக்டரைப் பார்த்து ஆச்சர்யமாய்க் கேட்டான்.
"ஆமா டாக்டர்... உங்களுக்கு எப்படித் தெரியும்..? நீங்க எப்படிக் கண்டுபிடிச்சீங்க...?".
நண்பன் கேட்டதும் டாக்டர் அலுப்புடன் சொன்னார்.
"ஏன்னா... நானும் அந்த ஊர்லதான் பொண்ணெடுத்தேன்...!".
.
.
.
Saturday, August 28, 2010
கடவுள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது
துறவியைச் சந்திக்க வந்திருந்தார் ஒருவர்.
துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார்.
"என்ன வேண்டும்...?"
"அய்யா... நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தின் தலைவர். எங்கள் மடம் எப்போதும் இளைஞர்களாலும் இறை வழிபாட்டாலும் நிறைந்திருக்கும். ஆனால், இப்போதோ அவ்வாறு யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் சிரத்தையின்றி ஏனோதானோவென்று இருகிறார்கள். ஏன் இது ஏற்பட்டது...?".
துறவி அமைதியாய்ச் சொன்னார்.
"உங்கள் அறியாமைதான் காரணம். உஙகள் கூட்டதில் உங்கள் நடுவே ஒரு இறைத்தூதர் இருக்கிறார். அவர் யாரென அறிந்து கொண்டால் போதும். இக்குறைகள் எல்லாம் நீங்கிவிடும்...!".
சொல்லிவிட்டு துறவி கண்களை மூடிகொள்ள, மடாலயத்தின் தலைவர் குழப்பத்துடன் ஊர் திரும்பினார்.
அவர் சொன்னதைக் கேட்ட மடத்தின் மற்றவர்களுக்கும் ஆச்சர்யமாயிருந்தது.
இவராயிருக்குமோ..?
அவராயிருக்குமோ...?
யார் இறைத்தூதர்...?
-என்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாய் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.
ஒவ்வொருவரும் மற்றவரை இறைத்தூதராக எண்ணி பணிவுடனும் மதிப்புடனும் நடத்தினர்.
கொஞ்சநாளில் மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.
இது வெளியே பரவ, மேலும் பலர் மடத்தைத் தேடிவர...
எண்ணற்றவர் இறைப்பணி புரிய...
அங்கே ஆன்மீகமும் புகழும் போடியிட்டு வளர ஆரம்பித்தது.
மடாலயத் தலைவருக்கு இறைத்தூதர் வேறெங்கும் இல்லை... நம்முல்லேயே ஒளிந்திருக்கிறார் என்பது அப்புறம்தான் புரிந்தது.
.
.
.
துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார்.
"என்ன வேண்டும்...?"
"அய்யா... நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தின் தலைவர். எங்கள் மடம் எப்போதும் இளைஞர்களாலும் இறை வழிபாட்டாலும் நிறைந்திருக்கும். ஆனால், இப்போதோ அவ்வாறு யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் சிரத்தையின்றி ஏனோதானோவென்று இருகிறார்கள். ஏன் இது ஏற்பட்டது...?".
துறவி அமைதியாய்ச் சொன்னார்.
"உங்கள் அறியாமைதான் காரணம். உஙகள் கூட்டதில் உங்கள் நடுவே ஒரு இறைத்தூதர் இருக்கிறார். அவர் யாரென அறிந்து கொண்டால் போதும். இக்குறைகள் எல்லாம் நீங்கிவிடும்...!".
சொல்லிவிட்டு துறவி கண்களை மூடிகொள்ள, மடாலயத்தின் தலைவர் குழப்பத்துடன் ஊர் திரும்பினார்.
அவர் சொன்னதைக் கேட்ட மடத்தின் மற்றவர்களுக்கும் ஆச்சர்யமாயிருந்தது.
இவராயிருக்குமோ..?
அவராயிருக்குமோ...?
யார் இறைத்தூதர்...?
-என்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாய் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.
ஒவ்வொருவரும் மற்றவரை இறைத்தூதராக எண்ணி பணிவுடனும் மதிப்புடனும் நடத்தினர்.
கொஞ்சநாளில் மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.
இது வெளியே பரவ, மேலும் பலர் மடத்தைத் தேடிவர...
எண்ணற்றவர் இறைப்பணி புரிய...
அங்கே ஆன்மீகமும் புகழும் போடியிட்டு வளர ஆரம்பித்தது.
மடாலயத் தலைவருக்கு இறைத்தூதர் வேறெங்கும் இல்லை... நம்முல்லேயே ஒளிந்திருக்கிறார் என்பது அப்புறம்தான் புரிந்தது.
.
.
.
Labels:
அறியாமை,
இறைத்தூதர்,
இறைப்பணி,
ஏனோதானோ,
சிரத்தை,
மடாலயம்
3
comments
Friday, August 27, 2010
புரட்சிக்காரன் தில்லுதுர
பெட்ரோல் விலையை மறுபடியும் உயர்த்தியாகிவிட்டது.
லிட்டர் இப்போது எண்பது ரூபாய்.
நாட்டின் தலைவர்கள் எப்போதும்போல் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்கிறார்கள்.
பக்கத்து நாட்டைவிட விலை கம்மி என்கிறார்கள்.
இதன் மூலமாக விலைவாசி மறைமுகமாக ஏறுவதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.
மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
ஆளும்கட்சி இதைச் சப்பைக்கட்டு கட்டுகிறது.
எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் பண்ணுகிறது.
மக்கள் தலைவன் ஒருவன் ஒருநாள் பந்த்துக்கு அறைகூவல் விடுத்தான்.
ஏமாந்த மக்கள் அவன் பின்னால் ஒன்று திரண்டனர்.
அவன் சொன்னான்.
"மக்களே... நாம் யாரென இந்த அரசுக்குப் புரிய வைப்போம். நமது எதிர்ப்பை மௌனமாய்ப் புரிய வைப்போம். நாளை ஒரு நாள் நமது அடையாள எதிர்ப்பைக் காண்பிப்போம். நாளை யாரும் சொந்த வாகனங்களை ஓட்டக்கூடாது. பிற வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்கக் கூடாது. இது எதிர்ப்பு மட்டுமல்ல. ஒருநாள் நமது உலகம் மாசற்று இருக்கட்டும்...!"
மக்கள் ஒப்புக்கொண்டார்கள்.
காலையிலிருந்து யாரும் வாகனங்களை எடுக்காமலும் மற்ற வாகனங்களை ஓட விடாமலும் பார்த்துக் கொண்டாரகள்.
மறுநாள், சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி சப்தமில்லாமல் இருக்கும் போது தில்லுதுர தனது ஓட்டை பைக்கை டபடப என்று ஒரு முக்கிய சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தான்.
சாலையில் கவனித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அவனது வண்டியைச் சூழ்ந்து கொண்டனர்.
"இன்னிக்கு யாரும் வண்டியை ஓட்டக் கூடாது எனச் சொல்லியிருக்கே... தெரியாதா..?".
தில்லுதுர கேட்டான்,"எதுக்கு...?".
கூட்டத்தில் ஒருவன் கோபமாய்ப் பதில் சொன்னான்.
"பெட்ரோல் விலை ஏற்றம் எல்லோரையும் பாதிக்குதே... அதை எதிர்த்துத்தான்...!".
தில்லுதுர கொஞ்சமும் கோபமின்றி அவர்களிடம் பதில் சொன்னான்.
"ஓகே, பெட்ரோல் விலையேற்றம் உங்களை பாதிக்குது... நீங்க ஸ்ட்ரைக் பண்ணறீங்க. என்னை அது பாதிக்கலியே... நான் ஏன் இதுல கலந்துக்கணும்...?".
வண்டியை மறித்தவர்கள் மிரண்டு போனார்கள்.
"என்னய்யா சொல்லுற... பெட்ரோல் விலையேற்றத்தால நாடே கதிகலங்கிக் கிடக்குது. இருபது ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இப்ப எண்பது ரூபாய்க்கு விக்குது. உன்னைப் பாதிக்கலைனு அலட்டிக்காமச் சொல்லுற.,எப்படி...?".
அவர்கள் கேட்டு முடித்ததும் தில்லுதுர அவர்களிடம் சொன்னான்.
"பெட்ரோல், அப்ப இருபது ரூபாய்க்கு விற்ற போதும் சரி... இப்ப எண்பது ரூபாய்க்கு விற்கும் போதும் சரி... நான் ஐம்பது ரூபாய்க்குத்தான பெட்ரோல் போடுவேன். அப்புறம் எப்படி என்னை விலையேற்றம் பாதிக்கும்...?".
.
.
.
லிட்டர் இப்போது எண்பது ரூபாய்.
நாட்டின் தலைவர்கள் எப்போதும்போல் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்கிறார்கள்.
பக்கத்து நாட்டைவிட விலை கம்மி என்கிறார்கள்.
இதன் மூலமாக விலைவாசி மறைமுகமாக ஏறுவதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.
மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
ஆளும்கட்சி இதைச் சப்பைக்கட்டு கட்டுகிறது.
எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் பண்ணுகிறது.
மக்கள் தலைவன் ஒருவன் ஒருநாள் பந்த்துக்கு அறைகூவல் விடுத்தான்.
ஏமாந்த மக்கள் அவன் பின்னால் ஒன்று திரண்டனர்.
அவன் சொன்னான்.
"மக்களே... நாம் யாரென இந்த அரசுக்குப் புரிய வைப்போம். நமது எதிர்ப்பை மௌனமாய்ப் புரிய வைப்போம். நாளை ஒரு நாள் நமது அடையாள எதிர்ப்பைக் காண்பிப்போம். நாளை யாரும் சொந்த வாகனங்களை ஓட்டக்கூடாது. பிற வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்கக் கூடாது. இது எதிர்ப்பு மட்டுமல்ல. ஒருநாள் நமது உலகம் மாசற்று இருக்கட்டும்...!"
மக்கள் ஒப்புக்கொண்டார்கள்.
காலையிலிருந்து யாரும் வாகனங்களை எடுக்காமலும் மற்ற வாகனங்களை ஓட விடாமலும் பார்த்துக் கொண்டாரகள்.
மறுநாள், சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி சப்தமில்லாமல் இருக்கும் போது தில்லுதுர தனது ஓட்டை பைக்கை டபடப என்று ஒரு முக்கிய சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தான்.
சாலையில் கவனித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அவனது வண்டியைச் சூழ்ந்து கொண்டனர்.
"இன்னிக்கு யாரும் வண்டியை ஓட்டக் கூடாது எனச் சொல்லியிருக்கே... தெரியாதா..?".
தில்லுதுர கேட்டான்,"எதுக்கு...?".
கூட்டத்தில் ஒருவன் கோபமாய்ப் பதில் சொன்னான்.
"பெட்ரோல் விலை ஏற்றம் எல்லோரையும் பாதிக்குதே... அதை எதிர்த்துத்தான்...!".
தில்லுதுர கொஞ்சமும் கோபமின்றி அவர்களிடம் பதில் சொன்னான்.
"ஓகே, பெட்ரோல் விலையேற்றம் உங்களை பாதிக்குது... நீங்க ஸ்ட்ரைக் பண்ணறீங்க. என்னை அது பாதிக்கலியே... நான் ஏன் இதுல கலந்துக்கணும்...?".
வண்டியை மறித்தவர்கள் மிரண்டு போனார்கள்.
"என்னய்யா சொல்லுற... பெட்ரோல் விலையேற்றத்தால நாடே கதிகலங்கிக் கிடக்குது. இருபது ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இப்ப எண்பது ரூபாய்க்கு விக்குது. உன்னைப் பாதிக்கலைனு அலட்டிக்காமச் சொல்லுற.,எப்படி...?".
அவர்கள் கேட்டு முடித்ததும் தில்லுதுர அவர்களிடம் சொன்னான்.
"பெட்ரோல், அப்ப இருபது ரூபாய்க்கு விற்ற போதும் சரி... இப்ப எண்பது ரூபாய்க்கு விற்கும் போதும் சரி... நான் ஐம்பது ரூபாய்க்குத்தான பெட்ரோல் போடுவேன். அப்புறம் எப்படி என்னை விலையேற்றம் பாதிக்கும்...?".
.
.
.
Labels:
ஆளும்கட்சி,
எதிர்க்கட்சி,
கச்சா,
தலைவர்கள்,
பெட்ரோல்,
விலைவாசி,
விழி
11
comments
Wednesday, August 25, 2010
திருடர்களைப் பிடிப்பது எப்படி...?
இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.
என் பக்கத்து வீட்டில் ஒரு நள்ளிரவில் திருடு போய்விட்டது.
அதுவும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.
பக்கத்து காம்பவுண்டில் இருந்தது சுமித்ராவின் குடும்பம்.
அன்று வெளியூர் போவதாக என்னிடம் சொல்லிவிட்டுதான் கிளம்பினார்கள்.
அப்போது, இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும்.
ட்ரெயினுக்கு நேரமாச்சு என்று அவசர அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.
இரவு பதினோரு மணிப்போல் பார்த்த போது அவர்கள் வீட்டில் லைட் எரிந்துகொண்டிருந்தது.
டீவியில் படம் ஓடிக் கொண்டிருந்தது.
சரி, ட்ரெயின் மிஸ் ஆகிவிட்டதுபோல... காலையில் விசாரித்துக் கொள்வோம் என்று தூங்கப் போய்விட்டேன்.
காலையில் எழுந்து பார்த்தால் கதவு தாழ்ப்பாளை நெம்பி யாரோ உள்ளே போய்த் திருடி இருப்பதாகத் தெருவே களேபரமாய் இருந்தது.
பிறகு, சுமித்ராவின் கணவருக்குப் போன் செய்து, அவர் வந்து, போலீசுக்குப் புகார் எல்லாம் கொடுத்து ...
அது ரெண்டு மூணு நாட்கள் ஆகிவிட்டது.
ஒருநாள், சுமித்ராவின் வீட்டுக்கு வந்த போலீஸ் என்னையும் விசாரித்தது.
நான் நடந்தவைகளைச் சொல்ல, அதை ஒருமுறை ஸ்டேஷனுக்கு வந்து எழுதித் தர முடியுமா என்று கேட்டார்கள்.
"தாரளமாய்..." என்ற நான் மறுநாள் என் நான்கு மகன் டேனியையும் அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போனேன்.
நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் 'வான்டட் கிரிமினல்'களின் போட்டோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டேனி கிளம்பும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் கேட்டான்.
"அங்கிள்... இந்த போட்டோல இருக்கறவங்க எல்லாம் யாரு...?"
அந்த இன்ஸ்பெக்டர் என் மகனிடம் மிகுந்த கனிவுடன் பதில் சொன்னார்.
"அவனுக எல்லாம் ரொம்பக் கெட்ட பசங்க....!".
டேனி லேசான குழப்பத்துடன் திரும்பி,"எதுக்காக கெட்ட பசங்களோட போட்டோவ இங்க மாட்டி வச்சிருக்கீங்க...?".
இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"அவனுகளைப் பாத்ததும் தேடிப் பிடிக்கறதுக்காகத்தான் அவனுகளோட போட்டோவை இங்கே மாட்டி வச்சிருக்கோம்...!".
இன்ஸ்பெக்டர் சொன்னதும் டேனி தனது சந்தேகம் தீராமல் அவரிடம் மீண்டும் கேட்டான்.
"ஏன் அங்கிள்... அவங்களை இப்பத் தேடிப் பிடிக்கறதவிட இந்த போட்டோவ எடுக்கும் போதே பிடிச்சிருக்கலாமே அங்கிள்...!".
.
.
.
என் பக்கத்து வீட்டில் ஒரு நள்ளிரவில் திருடு போய்விட்டது.
அதுவும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.
பக்கத்து காம்பவுண்டில் இருந்தது சுமித்ராவின் குடும்பம்.
அன்று வெளியூர் போவதாக என்னிடம் சொல்லிவிட்டுதான் கிளம்பினார்கள்.
அப்போது, இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும்.
ட்ரெயினுக்கு நேரமாச்சு என்று அவசர அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.
இரவு பதினோரு மணிப்போல் பார்த்த போது அவர்கள் வீட்டில் லைட் எரிந்துகொண்டிருந்தது.
டீவியில் படம் ஓடிக் கொண்டிருந்தது.
சரி, ட்ரெயின் மிஸ் ஆகிவிட்டதுபோல... காலையில் விசாரித்துக் கொள்வோம் என்று தூங்கப் போய்விட்டேன்.
காலையில் எழுந்து பார்த்தால் கதவு தாழ்ப்பாளை நெம்பி யாரோ உள்ளே போய்த் திருடி இருப்பதாகத் தெருவே களேபரமாய் இருந்தது.
பிறகு, சுமித்ராவின் கணவருக்குப் போன் செய்து, அவர் வந்து, போலீசுக்குப் புகார் எல்லாம் கொடுத்து ...
அது ரெண்டு மூணு நாட்கள் ஆகிவிட்டது.
ஒருநாள், சுமித்ராவின் வீட்டுக்கு வந்த போலீஸ் என்னையும் விசாரித்தது.
நான் நடந்தவைகளைச் சொல்ல, அதை ஒருமுறை ஸ்டேஷனுக்கு வந்து எழுதித் தர முடியுமா என்று கேட்டார்கள்.
"தாரளமாய்..." என்ற நான் மறுநாள் என் நான்கு மகன் டேனியையும் அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போனேன்.
நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் 'வான்டட் கிரிமினல்'களின் போட்டோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டேனி கிளம்பும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் கேட்டான்.
"அங்கிள்... இந்த போட்டோல இருக்கறவங்க எல்லாம் யாரு...?"
அந்த இன்ஸ்பெக்டர் என் மகனிடம் மிகுந்த கனிவுடன் பதில் சொன்னார்.
"அவனுக எல்லாம் ரொம்பக் கெட்ட பசங்க....!".
டேனி லேசான குழப்பத்துடன் திரும்பி,"எதுக்காக கெட்ட பசங்களோட போட்டோவ இங்க மாட்டி வச்சிருக்கீங்க...?".
இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"அவனுகளைப் பாத்ததும் தேடிப் பிடிக்கறதுக்காகத்தான் அவனுகளோட போட்டோவை இங்கே மாட்டி வச்சிருக்கோம்...!".
இன்ஸ்பெக்டர் சொன்னதும் டேனி தனது சந்தேகம் தீராமல் அவரிடம் மீண்டும் கேட்டான்.
"ஏன் அங்கிள்... அவங்களை இப்பத் தேடிப் பிடிக்கறதவிட இந்த போட்டோவ எடுக்கும் போதே பிடிச்சிருக்கலாமே அங்கிள்...!".
.
.
.
Subscribe to:
Posts (Atom)