Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Tuesday, December 7, 2010

நம்ம சிங்

ரயில்வே ஸ்டேஷனில் யாருக்காகவோ காத்திருந்தார் கிட்டத்தட்ட எழுபது வயதுக்கும் மேலான, மிகவும் கிராமத்து விவசாயியான நம்ம சிங்.

பக்கத்தில் இருந்தவர் நம்ம சிங்கின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டார்.

"யாருக்காகவோ வெயிட் பண்ணறீங்க போலிருக்கே..?"

நம்ம சிங் முகத்தில் ஆர்வம் சற்றும் குறையாமல் சொன்னார்.

"ஆமா சார்.. சரியா சொன்னீங்க. இந்தியா சுதந்திரத்தப்ப ரெண்டாப் பிரிஞ்சு பாகிஸ்தான் ஆனது. அப்ப, அந்த நாட்டோட தங்கிட்ட என் பெரியப்பா பையன் இன்னிக்கு இந்தியாவுக்கு ட்ரெயின்ல வர்றான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...!".

பக்கத்தில் இருந்தவர் இப்போது கேட்டார்.

"இங்கிருந்து போனப்ப அவருக்கு என்ன வயசு இருக்கும்..?".

நம்ம சிங் சொன்னார்.

"ஒரு நாலு இல்லாட்டி அஞ்சு வயசு இருக்கும் சார்..!".

"அதுக்கப்புறம் எப்போதாவது அவரப் பாத்து இருக்கீங்களா..?".

நம்ம சிங் சோகமாய்ச் சொன்னார்.

"எங்கே.. யாரு விட்டா.? எழுதப்படிக்கத் தெரியதனால இதுவரைக்கும் ஒரு லெட்டர் போக்குவரத்துகூடக் கிடையாது. ஒரு ஃபோட்டோ கீட்டோ பார்த்தது கிடையாது. ஏதோ இப்ப ரெண்டு நாட்டுக்கு இடையில ரயில் ஓடறதால இப்பவாவது பாக்க முடிஞ்சது..."

கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகும் சகோதரர்கள்... நெகிழ்ச்சியுடன் பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.

"உங்களால இப்ப அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா..?".

நம்ம சிங் பரிதாபமாய்ச் சொன்னார்.

"அதெப்படிங்க முடியும்.? அவனை நான் கடைசியா அறுபது எழுவது வருஷத்துக்கு முன்னால சின்னப்பையனா இருந்தப்ப பார்த்தது..! இப்ப என்ன வயசாச்சோ.. எவ்வளோ பெருசா இருக்கானோ..!".

அதே சோகத்துடன் பக்கத்திலிருந்தவர் கேட்டார்.

"அப்ப.. அவராவது உங்களை கண்டுபுடிச்சுடுவாரா..?".

பக்கத்தில் இருந்தவர் கேட்டதும் நம்ம சிங் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"கண்டிப்பா அவன் என்னைக் கண்டுபுடிச்சுடுவான் சார். ஏன்னா, நான் எங்கேயும் போகலியே... இங்கேயேதான இருக்கேன்..!".
.
.
.