Wednesday, December 1, 2010

அவ்வளவுக்கவ்வளவு

துறவியிடம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "

துறவி சொன்னார்.

"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".

அவன் தொடர்ந்து கேட்டான்.

"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"

"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".

அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.

"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".

துறவி சிரித்தபடி சொன்னார்.

"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".

அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.

"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".

துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.

"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.

No comments:

Post a Comment