தில்லுதுரயின் அலுவலகத்தில் அப்போதுதான் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
தில்லுதுர அந்த இளைஞனை கையைக் குலுக்கி வரவேற்று, பெயர் என்ன என்று கேட்டுவிட்டு, அவன் கையில் ஒரு துடைப்பத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.
"தம்பி... உன்னோட முதல் வேலை, இந்த ஆஃபீஸை நல்லா, சுத்தமா, குப்பை இல்லாமப் பெருக்கறது தான். எங்கே செய்யுங்க பார்ப்போம்..?".
அதைக் கேட்டதும், அந்த இளைஞன் கோபத்துடன் திரும்பி தில்லுதுரயிடம் சொன்னான்.
"சார்... ஒரு போஸ்ட் கிராஜுவேட். என்னைப் போயி..!".
அவன் சொன்னதும் தில்லுதுர வருத்தத்துடன் சொன்னார்.
"ஓஹ்... ஐ ஆம் வெரி வெரி சாரி தம்பி...! எனக்கு அது தெரியாமப் போச்சே. மொதல்ல அந்தத் துடைப்பத்தைக் கொடுங்க...!" என்று துடைப்பத்தைக் கையில் வாங்கியவர் தொடர்ந்து சொன்னார்.
"இப்ப, எப்படிக் பெருக்கறதுன்னு உங்களுக்கு நான் சொல்லித் தர்றேன்...!" என்றார்.
.
.
.