Showing posts with label அழகி. Show all posts
Showing posts with label அழகி. Show all posts

Tuesday, October 26, 2010

விமலாவும் வேதிகாவும் பின்னெ ஒரு முதலாளியும்

விமலாவும் வேதிகாவும் அந்தக் கம்பெனியில் ஒரே நாளில்தான் இன்டர்வியூவுக்கு வந்தார்கள்.

இருவருமே நல்ல அழகிகள்.

அந்தக் கம்பெனியில் சேர்வதற்கு அழகும் ஒரு முக்கியமான விஷயமாய் இருந்ததால், வந்திருந்த எத்தனையோ பேர்களில் அவர்கள் இருவர் மட்டுமே, அந்தக் கம்பெனியின் இளைய முதலாளியால் அங்கே வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

விமலா கடின உழைப்பாளி. அவள் கடினமாக உழைத்தாள். வேலையில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எந்த வேலையைத் தொட்டாலும் வெற்றிகரமாய் முடித்தாள். வெகு சீக்கிரமாய், அவள் வேலை செய்த பிரிவின் தலைவியாகப் பதவி உயர்வு பெற்றாள்.

ஆனால் வேதிகாவோ... வேலையே செய்யவில்லை. தான் அழகாய் இருப்பதிலேயே கவனம் செலுத்தினாள். பியூட்டி பார்லரே கதி என்று கிடந்தாள். உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்வதும், உடைகளை விலையுயர்ந்ததாய் உடுத்துவதுமே அவள் குறியாய் இருந்தது.

அவள், வெகுவிரைவில் அந்தக் கம்பெனி இளைய முதலாளியை கல்யாணம் செய்து கொண்டு முதலாளியம்மா ஆகிவிட்டாள்.
.
.
.

Saturday, June 5, 2010

டேனியும் நாய்க்குட்டியும்



பூமியின் காவல் தேவதை அன்று அதிசயமாய் பூலோகம் வந்திருந்தாள்.

வந்தவள் மக்களை அழைத்துச் சொன்ன செய்தியோ மகா அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது.

"மானிடர்களே... இப்பூலோகம் இன்னும் சில மணிகளில் அழியப் போகிறது. உங்களில் ஏழு உயிர்களை இப்போது என்னால் காப்பற்ற முடியும். அந்த ஏழு உயிர்களும் தனக்குப் பிடித்த ஒரு பொருளைத் தன்னுடன் எடுத்துவர அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் யார் அந்த எழுவர் என்பதை முடிவு செய்து சற்று நேரத்தில் அனுப்பி வையுங்கள்...!"

அடுத்த முக்கால் மணி நேரத்தில் முதலாய் ஒரு தமிழ்ப் புலவர் வந்தார்.

தேவதை அவனைக் கேட்டாள்.

"யார் நீ...?".

"புலவன்...!".

"உன்னுடன் என்ன கொண்டுவரப் போகிறாய்...?".

"புத்தகங்கள் அடங்கிய ஒரு பை....!".

"சரி வா...!".

தேவதை அவனைத் தனது சிறகுகளில் அவனை ஏற்றிக் கொண்டாள்.

பிறகு... ஒரு அரசியல்வாதி தனது செலவங்கள் அடங்கிய பெட்டியுடன் வந்தான்.

அதன் பின்னால் ஒரு குடிகாரன் தனது மினி பாருடன் வந்தான்.

ஒரு உலக அழகி தனது ஒப்பனை சாதனங்களுடன் வந்தாள்.

ஒரு வியாதிக்காரன் தனது மருந்து பாட்டில்களுடன் வந்தான்.

ஒரு பக்திமான் தனது பிரியமான ஸ்வாமி படத்துடன் வந்தான்.

கடைசியாய் வந்தது ஒரு சிறுவன்.

தேவதை கேட்டாள்.

"யார் நீ...?".

சிறுவன் பதில் சொன்னான்.

"நான் டேனி...!".

"உன்னுடன் என்ன கொண்டு வந்திருக்கிறாய்...?".

"எனது செல்ல நாய்க்குட்டி பப்பி...!".

தேவதை நெற்றியைச் சுருக்கினாள்.

"தம்பி... என்னுடன் ஏழு உயிர்களை அழைத்துச் செல்லவே அனுமதி இருக்கிறது. எனவே, உன்னுடன் எடுத்துச் செல்ல வேறு ஏதாவது உயிரற்ற பொருளை எடுத்து வா...போ...!".

டேனி ஒரு கணம் யோசித்தான்.

"தேவதையே... உன்னால் ஏழு உயிர்களை அழைத்துச் செல்ல முடியுமானால்...இதோ என்னுடைய பப்பியை அழைத்துச் செல். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்...!".

தேவதையின் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்து மறைந்தது.
சற்று நேரம் கழித்து தேவதை கிளம்பும்போது அவள் சிறகில் டேனியும் பப்பியும் மட்டுமே இருந்தார்கள்.
.
.
.