Showing posts with label ஏனோதானோ. Show all posts
Showing posts with label ஏனோதானோ. Show all posts

Saturday, August 28, 2010

கடவுள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது

துறவியைச் சந்திக்க வந்திருந்தார் ஒருவர்.


துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார்.

"என்ன வேண்டும்...?"

"அய்யா... நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தின் தலைவர். எங்கள் மடம் எப்போதும் இளைஞர்களாலும் இறை வழிபாட்டாலும் நிறைந்திருக்கும். ஆனால், இப்போதோ அவ்வாறு யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் சிரத்தையின்றி ஏனோதானோவென்று இருகிறார்கள். ஏன் இது ஏற்பட்டது...?".

துறவி அமைதியாய்ச் சொன்னார்.

"உங்கள் அறியாமைதான் காரணம். உஙகள் கூட்டதில் உங்கள் நடுவே ஒரு இறைத்தூதர் இருக்கிறார். அவர் யாரென அறிந்து கொண்டால் போதும். இக்குறைகள் எல்லாம் நீங்கிவிடும்...!".

சொல்லிவிட்டு துறவி கண்களை மூடிகொள்ள, மடாலயத்தின் தலைவர் குழப்பத்துடன் ஊர் திரும்பினார்.

அவர் சொன்னதைக் கேட்ட மடத்தின் மற்றவர்களுக்கும் ஆச்சர்யமாயிருந்தது.

இவராயிருக்குமோ..?

அவராயிருக்குமோ...?

யார் இறைத்தூதர்...?

-என்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாய் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் மற்றவரை இறைத்தூதராக எண்ணி பணிவுடனும் மதிப்புடனும் நடத்தினர்.

கொஞ்சநாளில் மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.

இது வெளியே பரவ, மேலும் பலர் மடத்தைத் தேடிவர...

எண்ணற்றவர் இறைப்பணி புரிய...

அங்கே ஆன்மீகமும் புகழும் போடியிட்டு வளர ஆரம்பித்தது.

மடாலயத் தலைவருக்கு இறைத்தூதர் வேறெங்கும் இல்லை... நம்முல்லேயே ஒளிந்திருக்கிறார் என்பது அப்புறம்தான் புரிந்தது.
.
.
.