Tuesday, October 5, 2010

வாய் கொஞ்சம் நீளம்

ஒரு காகமும் தவளையும் பேசிக் கொண்டிருந்தன.

காகம் தவளையிடம் சொன்னது.

"தவளையே... உனக்குத் தெரியுமா? சொர்க்கத்தில் ஒரு மிகப் பெரிய விருந்து நடக்கப் போகிறது...!".

தவளை உடனே தன் வாயைப் பிளந்தது.

"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".

காகம் தொடர்ந்தது.

"அங்கே, நீ இப்பூவுலகில் பார்த்த எல்லாவற்றையும்விட மிகச் சுவையான உணவுகளும் அமிர்த பானங்களும் பரிமாறப்படப் போகிறது..!".

தவளை மறுபடியும் தன் வாயைப் பிளந்தது.

"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".

காகம் தொடர்ந்தது.

"நாம் விளையாட உலகின் மிக அழகிய ஜோடியும் சின்ன சொர்க்கம் போன்ற வீடும் அங்கே கொடுப்பார்கள்..!"

தவளை தன் வாயை மேலும் அதிகமாகப் பிளந்தது.

"ஹை... அ அங்ங்ங்கேகேகேயாயாயா..?".

காகம் தொடர்ந்து சொன்னது.

"ஆனால் ஒரு பிரச்சினை. அங்கே பெரிய வாயுடைய யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்களாம்...!"

தவளை உடனே தனது வாயை இறுக மூடிக்கொண்டு முணுமுணுத்தது.

"பாவம் முதலை... ஏமாந்துவிடும்..!".
.
.
.

4 comments:

Anonymous said...

thanakku oru kan ponalum parava illai...

nice narration...

Unknown said...

மிக நல்ல கதை...!

செல்வா said...

அட அட ., செம கதையா இருக்கு ..!!

VELU.G said...

நல்ல கதை

Post a Comment