பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள்.
'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.
அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.
அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.
போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.
'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.
"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"
அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.
99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.
பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.
அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.
அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.
"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".
நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.
"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.
Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts
Saturday, October 23, 2010
99 நாட் அவுட்...
Labels:
செலவு,
பிறந்தநாள்,
பொக்கை,
மகன்,
வயசு,
வயதானவர்,
விசேஷம்,
ஸ்டுடியோ
5
comments
Wednesday, July 21, 2010
கடவுளின் பிறந்தநாள்
துறவி ஒருவருக்கு இறை வழிபாட்டில் மிகுந்த பிரியம்.
ஆனால், அவருக்கு எந்த மார்க்கத்தில் கும்பிட்டால் இறைவனை அடையலாம் என்று குழப்பம்.
ஒருநாள் இரவு... இதே எண்ணத்துடன் தூங்கும்போது அவர் ஒரு கனவு கண்டார்.
கனவில் அவர் தேவலோகத்தில் இருக்கிறார்.
அங்கே வண்ண விளக்குகளும் வான வேடிக்கைகளுமாய் ஒரே குதூகலமாய் இருக்கிறது தேவலோகம்.
துறவி கேட்டார்,"என்ன விசேஷம்...?"
அருகிலிருந்தவர் சந்தோசமாய் சொன்னார்,"தெரியாதா... இன்று கடவுளின் பிறந்தநாள்...!இன்னும் சற்று நேரத்தில் அவர் ஊர்வலம் வர இருக்கிறார்...!".
துறவிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"கடவுளுக்கே பிறந்தநாளா...? சரி பார்ப்போம்...!".
நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாத்தியங்கள் ஒலிக்க, ஜெயகோஷங்கள் முழங்க ஒரு ஊர்வலம் வந்தது.
கூட்டம் மிகப் பெரிதாயிருக்க கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒருவர் மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார்.
"இவர்தான் கடவுளா...?" துறவி கேட்டார்.
"இல்லை.."என்ற அருகிலிருந்தவர் ஒரு பெரிய மதத்தின் பெயரைச் சொல்லி 'அதன் தலைவர் இவர்... உடன் வருபவர்கள் அவரைப் பின்பற்றுபவர்கள்...!" என்றார்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊர்வலம் வந்தது.
இப்போது ஒருவர் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு குதிரை மீது அமர்ந்து வந்தார்.
நீண்ட சடாமுடியும் பெரிய தாடியுமாயிருந்த அவரை வேறொரு மதத்தின் தலைவர் என்று துறவியிடம் சொன்னார் அருகிலிருந்தவர்.
அடுத்தடுத்து ஏராளமான ஊர்வலங்கள்.
சிலவற்றில் பத்திருபது பேர்கூட இல்லை.
சிலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் கூட்டம்.
நாள் முழுவதும் இது நடந்துகொண்டே இருந்தது.
எல்லாம் முடிந்து கடைசியில் ஊர்வலமில்லாமல் ஒரேயொரு குதிரை தள்ளாடியபடி மெல்ல நடந்து வந்தது.
அதன் மீது ஒரு வயதான நபர் அமர்ந்து இருந்தார். அவர் தோற்றமே பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
துறவி கேட்டார்,"இவர் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்..?".
"என்னது..?" அருகிலிருந்தவர் குரல் ஆச்சர்யத்துடன் கீச்சிட்டது.
"இவரைத் தெரியவில்லையா...இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள்.!".
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் துறவி. கனவு கலைந்தது.
அன்றோடு மார்க்கங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு கடமைகளை அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தார் துறவி.
ஆனால், அவருக்கு எந்த மார்க்கத்தில் கும்பிட்டால் இறைவனை அடையலாம் என்று குழப்பம்.
ஒருநாள் இரவு... இதே எண்ணத்துடன் தூங்கும்போது அவர் ஒரு கனவு கண்டார்.
கனவில் அவர் தேவலோகத்தில் இருக்கிறார்.
அங்கே வண்ண விளக்குகளும் வான வேடிக்கைகளுமாய் ஒரே குதூகலமாய் இருக்கிறது தேவலோகம்.
துறவி கேட்டார்,"என்ன விசேஷம்...?"
அருகிலிருந்தவர் சந்தோசமாய் சொன்னார்,"தெரியாதா... இன்று கடவுளின் பிறந்தநாள்...!இன்னும் சற்று நேரத்தில் அவர் ஊர்வலம் வர இருக்கிறார்...!".
துறவிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"கடவுளுக்கே பிறந்தநாளா...? சரி பார்ப்போம்...!".
நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாத்தியங்கள் ஒலிக்க, ஜெயகோஷங்கள் முழங்க ஒரு ஊர்வலம் வந்தது.
கூட்டம் மிகப் பெரிதாயிருக்க கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒருவர் மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார்.
"இவர்தான் கடவுளா...?" துறவி கேட்டார்.
"இல்லை.."என்ற அருகிலிருந்தவர் ஒரு பெரிய மதத்தின் பெயரைச் சொல்லி 'அதன் தலைவர் இவர்... உடன் வருபவர்கள் அவரைப் பின்பற்றுபவர்கள்...!" என்றார்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊர்வலம் வந்தது.
இப்போது ஒருவர் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு குதிரை மீது அமர்ந்து வந்தார்.
நீண்ட சடாமுடியும் பெரிய தாடியுமாயிருந்த அவரை வேறொரு மதத்தின் தலைவர் என்று துறவியிடம் சொன்னார் அருகிலிருந்தவர்.
அடுத்தடுத்து ஏராளமான ஊர்வலங்கள்.
சிலவற்றில் பத்திருபது பேர்கூட இல்லை.
சிலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் கூட்டம்.
நாள் முழுவதும் இது நடந்துகொண்டே இருந்தது.
எல்லாம் முடிந்து கடைசியில் ஊர்வலமில்லாமல் ஒரேயொரு குதிரை தள்ளாடியபடி மெல்ல நடந்து வந்தது.
அதன் மீது ஒரு வயதான நபர் அமர்ந்து இருந்தார். அவர் தோற்றமே பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
துறவி கேட்டார்,"இவர் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்..?".
"என்னது..?" அருகிலிருந்தவர் குரல் ஆச்சர்யத்துடன் கீச்சிட்டது.
"இவரைத் தெரியவில்லையா...இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள்.!".
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் துறவி. கனவு கலைந்தது.
அன்றோடு மார்க்கங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு கடமைகளை அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தார் துறவி.
Labels:
இறை,
ஊர்வலம்,
குதிரை,
குதூகலம்,
தலைவர்,
பிறந்தநாள்,
ஜெயகோஷம்
3
comments
Subscribe to:
Posts (Atom)