பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள்.
'மரம்புடுங்கிக் கவுண்டனூர்'.
அந்த ஊரில் ஒரு வயதானவரை ஃபோட்டோ எடுக்க என்னை வரச் சொல்லி இருந்தார்கள்.
அவருடைய வயது காரணமாக, அவரை பொள்ளாச்சியில் உள்ள எனது ஸ்டுடியோவுக்கு அழைத்துவர முடியவில்லை என்றும் வந்து போவதற்கான செலவையும் தந்துவிடுவதாக அவருடைய மகன்கள் சொன்னதால் நான் ஒப்புக்கொண்டேன்.
போய்ப் பார்த்தால், அவர் அவருடைய மகன்கள் சொன்னதைவிட உண்மையிலேயே அதிக வயதானவர்தான்.
'என்ன வயது?' என்று விசாரித்தபோது அவருடைய ஒரு மகன் சொன்னார்.
"இன்னிக்கு எங்க அப்பாவோட 99வது பொறந்த நாளுங்க. இன்னிக்கு இங்க விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோமுங்க. அதுக்காகத்தான் உங்களை ஃபோட்டோ எடுக்க உங்களை வரச் சொன்னது பாத்துக்கங்க...!"
அவர் சொல்லிவிட்டுப் போனதும் அந்தப் பெர்யவரைப் பார்த்து எனக்கு மிக ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.
99 வயது என்றாலும் நல்ல ஆரோக்கியமாய்த்தான் இருந்தார்.
பிறந்தநாள் விசேஷம் தடபுடலாய் இருந்தாலும், மகன்கள் தான் உற்சாகமாய் இருந்தார்களேயொழிய மருமகள்களுக்கு ஒன்றும் அதில் அவ்வளவு ஈடுபாட்டைக் காணோம்.
அவர்கள் எல்லோரும்,"இந்த வயசுல இதுக்குப் பொறந்த நாளு ஒரு கேடு.. போகமாட்டேங்குதே..!" என்றெல்லாம் காதுபடப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் வருத்தம்கூடத்தான்.
அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், ஃபோட்டோவுக்காக அவரை மேக்கப் பண்ணி உட்கார வைக்கும் போது, அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும் விதமாய்ச் சொன்னேன்.
"அய்யா.. உங்களோட நூறாவது பிறந்தநாள் அன்னிக்கும் நானே ஃபோட்டோ எடுப்பேன்னு நம்பறேன்..!".
நான் அப்படிச் சொன்னதும் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அந்தப் பெரியவர் சொன்னார்.
"ஏன்... உனக்கு என்ன நல்லாத்தான இருக்க..? அடுத்த வருசத்துக்குள்ள நீ ஒண்ணும் செத்துப் போயிற மாட்ட.. வா வா, வந்து நல்லா ஃபோட்டோ எடு...!"என்றார்.
.
.
.
Showing posts with label செலவு. Show all posts
Showing posts with label செலவு. Show all posts
Saturday, October 23, 2010
99 நாட் அவுட்...
Labels:
செலவு,
பிறந்தநாள்,
பொக்கை,
மகன்,
வயசு,
வயதானவர்,
விசேஷம்,
ஸ்டுடியோ
5
comments
Wednesday, April 7, 2010
தீபாவளி சரவெடி

கண்ணாயிரம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் கணேஷை போனில் அழைத்துச் சொன்னார்.
"கணேஷா... நான் இதைச் சொல்லறதுக்கு ரொம்ப வருத்தப்படறேன். ஆனா... சொல்லாம இருக்க முடியாது. நானும் உன் அம்மாவும் டைவர்ஸ் பண்ணிக்கப் போறோம். நாப்பத்தஞ்சு வருசத் துக்கம் முடியப்போகுது...!".
கணேஷ் ஒரு கணம் அரண்டு போனான்.
"என்னது டைவர்ஸா... என்ன பேசறீங்க...? நாளைக்கு நாங்க யாரும் வெளிய தலைகாட்ட வேண்டாமா..?".
அப்பா நிதானமாய் பதிலளித்தார்.
"எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரல. அவளப் பாத்தாலே எரிச்சலா இருக்கு... இதப் பத்திப் பேசக்கூட எரிச்சலாத்தான் இருக்கு. என்ன பண்ணறது..? லண்டன்ல இருக்கற உன் தங்கச்சிக்கிட்டயும் சொல்லிடு. அவளும் தெரிஞ்சுக்கட்டும். வச்சிடட்டா..?"என்று போனை வைத்தார்.
மகன் கணேஷ் உடனே தங்கை துளசிக்குப் போன் செய்து விஷயத்தை சொல்ல அவள் போன் தன் அப்பாவிடம் அலறினாள்.
"அப்பா... நீ எந்தக் காரணம் அம்மாவை டைவர்ஸ் செய்யக் கூடாது. எதுவும் அம்மாகிட்ட பேசக்கூடக் கூடாது. நான் கணேஷை அமெரிக்காவிலிருந்து உடனே கிளம்பிவரச் சொல்றேன். எங்க வீட்லருந்து அவர் வந்ததும் சொல்லி நானும் அவரும் கிளம்பி வர்றோம்... புரிஞ்சுதா..?" என்று சொல்லி போனை வைத்தாள்.
கண்ணாயிரமும் போனை வைத்துவிட்டு உள்ளே திரும்பி,"அடியே இவளே...!" என்று அழைத்தவர் சொன்னார்.
" வருஷா வருஷம் தனியாவே தீபாவளி கொண்டாட வேண்டியிருக்குனு புலம்பிக்கிடே இருப்பியே... இந்த வருஷம் தீபாவளிக்கு உன் மகனும் மகளும் நம்ம வீட்டுக்கு குடும்பத்தோட வர்றாங்க.அதுவும் அவங்க செலவுலயே...!".
.
.
.
Labels:
கண்ணாயிரம்,
சரவெடி,
செலவு,
டைவர்ஸ்,
தீபாவளி,
லண்டன்
1 comments
Subscribe to:
Posts (Atom)