Saturday, December 31, 2011

புத்தாண்டில் தில்லுதுர

புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து இரவு மூன்று மணி.

தில்லுதுர தான் கொண்டு வந்த காரை பார்க்கிங்கிலேயே விட்டுவிட்டு, அடித்த தண்ணியின் மப்பு தீராமல் இடதும்வலதுமாய் தள்ளாடியபடி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

நல்ல போதையில் சாலையின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த போலீஸ் நைட் பேட்ரோல் வண்டி சைரன் அடித்தபடி வந்து தில்லுதுரயின் அருகில் நின்றது.

இறங்கிய இன்ஸ்பெக்டர் கோபத்துடன் தில்லுதுரயிடம் கேட்டார்.

"யோவ்... ராத்திரி மூணு மணிக்கு இங்க எங்கய்யா சுத்திக்கிட்டு இருக்க?".

கேட்ட இன்ஸ்பெக்டரிடம் பாவமாய் தில்லுதுர சொன்னார்.

"நா... நான் இப்ப ஒரு பிரசங்கம் கேக்க போயிட்டிருக்கேன் இன்ஸ்பெக்டர்.!".

கேட்ட இன்ஸ்பெக்டர் கடுப்புடன் கேட்டார்.

"யோவ்... எங்களைப் பாத்தா எப்பிடித் தெரியுது.? இந்த ராத்திரி மூணு மணிக்கு எங்கய்யா பிரசங்கம் நடக்குது? யாரு பிரசங்கம் பண்ணப் போறா.?".

கேட்ட இன்ஸ்பெக்டர் முகத்தைப் பரிதாபமாய் பார்த்தபடியே தில்லுதுர சொன்னார்.

"எங்க வீட்டுல இன்ஸ்பெக்டர்... என் மனைவி..!".
.
.
.