Showing posts with label மதிய உணவு. Show all posts
Showing posts with label மதிய உணவு. Show all posts

Saturday, December 4, 2010

மிட்டாய்க் கடவுள்

கோவில் ஒன்றில் சிறுவர்களுக்காக ஏற்பாடாகியிருந்த, அந்த ஒருநாள் நிகழ்ச்சியின் மதிய உணவு நேரம்.


தனக்குத் தானே பறிமாறிக் கொள்ளும் முறையில் அமைந்திருந்தது அந்த உணவு வேளை.

குழந்தைகளுக்கு சாப்பாடு முடிந்து வரிசையாய் வெளியேறும் இடத்தில், இரண்டு பெரிய தட்டுகளில் முதல் தட்டில் நிறைய பிஸ்கெட்டுகள் இருந்தன.

குழந்தைகள் அதை நெருங்கும்போது, ஒரு பகதர் தட்டின் அருகே இவ்வாறு எழுதி வைத்திருப்பதைக் கவனித்தார்கள்.

"கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்..!".

அந்த வரிசை இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் அடுத்த தட்டில் நிறைய சாக்லேட்டுகள் இருப்பது தெரிந்தது.

முன்னால் இருந்த ஒரு சிறுவன், 'சாக்லெட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா... இல்லை இரண்டை எடுக்கலாமா...?' என்று குழப்பத்துடன் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த டேனி சொன்னான்.

"டேய் ரமேஷ்... எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. கடவுள் பிஸ்கெட்டைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு..!".
.
.
.