கோவையிலிருந்து சென்னை செல்ல அவசர அவசரமாக ஒரு ஆம்னி பஸ்சைப் பிடித்து ஏறின சமயம் நடந்தது அது.
கிளம்பிய பஸ், பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி, தடதடவென ஆடி, மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து அமைதியாய் நின்றது.
என்ன பிரச்சினை, எதுவென்று தெரியாமல் ஒரு கால்மணி நின்ற பிறகு, பஸ் எப்போதும் போல் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தது.
விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன், டிக்கெட் செக் செய்ய வந்தவரிடம் பக்கத்து சீட்டிலிருந்தவர் கேட்டார்.
"என்ன சார் பிராப்ளம்..?".
அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.
"வண்டியிலிருந்து வந்த சத்தம் சரியில்லாததால.., டிரைவர் வண்டியை எடுக்கப் பயந்து நிறுத்திட்டாரு..!".
அப்படியும் எதுவும் சரி செய்ததுபோல் தெரியாததால், அவர் மறுபடியும் கேட்டார்.
"அதுக்குள்ள சரி பண்ணிட்டிங்களா என்ன..?'
டிக்கெட் செக்கர் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் சொன்னார்.
"பண்ணியாச்சு சார்..!".
கேட்டவர் கொஞ்சம் குசும்புக்காரர் போல.. தொடர்ந்து கேட்டார்.
"அதுக்குள்ள என்ன இஞ்ஜினையா மாத்திட்டிங்க..?".
செக்கர் இப்போதும் அதேபோல் பாவமற்ற முகத்துடன் சொன்னார்.
"இல்ல சார்... டிரைவரை மாத்திட்டோம்..!".
.
.
.
Showing posts with label டிரைவர். Show all posts
Showing posts with label டிரைவர். Show all posts
Tuesday, December 21, 2010
Saturday, March 20, 2010
கார்த்தசாரதி

தினேஷ் சாப்ட்வேரில் பெரிய ஆள்.
நல்ல சம்பளம்.
எனவே, லோன் மற்றும் இன்னபிற சங்கதிகளுக்காக அப்பாவின் காரை மாற்றி ஒரு புதிய, பெரிய கார் வாங்கி அதில் ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் போவதாய் முடிவும் ஆகியாயிற்று.
அன்று அதிகாலையிலேயே எல்லோரும் காரில் அவரவருக்கு பிடித்த சீட்டில் உட்கார்ந்து கொள்ள அப்பா மட்டும் தினேஷின் ட்ரைவர் சீட்டுக்குப் பின் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்.
தினேஷ் அம்மாவிடம் சொன்னான்.
"அம்மா பார்த்தியா... சீன் மாறிப்போச்சு. அப்பா, இப்ப பின் சீட்டில் உட்கார்ந்துகிட்டு எனக்கு எப்படி டிரைவ் செய்யணும்னு சொல்லிக் கொடுக்கப்போறாரு... இல்லியா?"
"இல்லை...!" அப்பா தலையாட்டிவிட்டு சொன்னார்.
"இத்தனை நாள் நீ எப்படிப் செய்தாயோ... அதே மாதிரி பின் சீட்டில் உட்கார்ந்து ட்ரைவர் சீட்டை உதைத்துக் கொண்டே வரப்போறேன்...!" என்றார்.
.
.
.
Subscribe to:
Posts (Atom)