சமீபத்தில் ஏதோ விளையாட்டு விழா முடிவு நாள் நிகழ்ச்சி நடந்திருக்கிறது நம் ஊரில்.
அதற்கு, நமது அண்டை நாட்டு அதிபர் வந்திருக்கிறார்.
நம் மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்ததில் பெயர் போனவர் அந்த அதிபர்.
ஆனால், அவர் வந்ததோ நம் நாட்டுடனான நட்பு ரீதியில்.
அவருக்கு வரவேற்று மரியாதை செலுத்தும் முறையில் நமது 24 பீரங்கிகள் முழங்கின.
அவற்றின் முழக்கம் ஓய்ந்த பிறகு அந்த சுட்டவர்களில் ஒருவரை நெருங்கிக் காரணம் கேட்டிருக்கிறான் நம்ம காத்தமுத்து.
அந்த வீரன், காத்தமுத்துவிடம் 'இன்னார் வந்திருக்கார்.. அதனால சுட்டோம்'னு காரணம் சொன்னார்.
அதுக்கப்புறம் காத்தமுத்து ரொம்ப ஆர்வமாய் அவரிடம் கேட்டான்.
"இப்ப அவர் எங்கே.. பார்க்கமுடியுமா.?"
அதற்கு அந்த வீரர்,"அவர் இப்பத்தானே காரில் ஏறிப் போனார்..!".
வீரர் சொன்ன பதிலைக் கேட்ட காத்தமுத்து வருத்தத்தோட இப்படிச் சொன்னான்.
"இத்தனை தடவை சுட்டும் உங்க குறி தப்பிடுச்சேப்பா...!".
.
.
.
Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
Friday, October 22, 2010
Tuesday, September 28, 2010
கண்ணாமூச்சி
மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
.
.
.
நன்றி: தீபா ஜோஸப்
Labels:
ஒளிந்து,
கண்டுபிடி,
கண்ணாமூச்சி,
விளையாட்டு
1 comments
Saturday, May 22, 2010
நரமாமிசம் சாப்பிடுபவனின் ஃபாஸ்ட் ஃபுட்
காட்டில் வசித்து வரும் நம்ம நரேன் ஒரு நரமாமிசம் சாப்பிடுபவன்.
அவன் மகன் இருந்தார்போலிருந்து ஒரு நாள் தான் சாப்பிட ஃபாஸ்ட் ஃபுட் வேண்டும் என்று கேட்டுவிட்டான்.
தன் ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற காடெல்லாம் அலைந்தான் தந்தை.
யாருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
சரி நகரத்தில் சென்று தேடலாம் என்று நகரத்திற்குள் வந்துவிட்டான்.
அங்கும் எங்கு தேடியும் அவனுக்கு ஃபாஸ்ட் ஃபுட் கிடைக்கவில்லை.
கடைசியாய்... நேரு விளையாட்டு அரங்கைத் தாண்டும் போது அவன் அவனுடைய மகனுக்குத் தேவையான ஃபாஸ்ட் ஃபுட்டைக் கண்டுபிடித்துவிட்டான்.
அவன் ரன்னிங் ரேசில் முதலாவதாய் வந்தவனைக் காட்டிற்கு தூக்கிச் சென்றுவிட்டான்.
.
.
.
Labels:
அரங்கம்,
ஃபாஸ்ட்ஃபுட்,
தந்தை,
நிறைவேற்ற,
நேரு,
ரன்னிங்ரேஸ்,
விளையாட்டு
2
comments
Subscribe to:
Posts (Atom)
