Showing posts with label வெட்கம். Show all posts
Showing posts with label வெட்கம். Show all posts

Friday, December 3, 2010

தண்டச்சோறு தில்லுதுர

பொருளாதார வீழ்ச்சி தில்லுதுரயையும் பாதித்திருந்த காலம் அது.

தில்லுதுர தன் பிசினஸையும் கவனிக்காமல், வேலைக்கும் போகாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.

மனைவியின் குடும்பம் மொத்தமுமே, தில்லுதுரயின் குடும்பத்தை சப்போர்ட் செய்து கொண்டிருந்தது.

யார் யாரோ எவ்வளவோ சொல்லியும், தில்லுதுர அசைவதாய் இல்லை.

வீட்டுச் செலவைச் சமாளிக்க, பொருளாதாரத் தேவைகளைச் சாமாளிக்க பணமும் இன்னபிறவும் தில்லுதுரயின் மாமியார் வீட்டிலிருந்தே வந்து கொண்டிருந்தது.

அன்றும் அப்படித்தான், அந்த மாதச் செலவுக்காக அப்பா அனுப்பிய பணத்தைப் பெற்றுக் கொண்ட மனைவி, தில்லுதுரயிடம் வருத்தத்துடன் சொன்னாள்.

"எனக்கே கேவலமாய் இருக்கு. என் அப்பா சாப்பாட்டுக்குப் பணம் அனுப்பறாரு. அண்ணன் துணிமணிகள் எடுத்துக் கொடுத்துடறான். தம்பி காய்கறி பூராவும் அனுப்பிடறான். இதெல்லாம் போக, என்னோட ஒரு மாமாவும் மளிகைச் சாமானுக்காக பணம் அனுப்பறாரு. இதெல்லாம் வெளியே சொல்லக் கூட எனக்கு வெட்கமாய் இருக்கு...!"

கேட்டுக் கொண்டிருந்த தில்லுதுர அதைவிட வருத்தத்துடன் சொன்னார்.

"ஆமாம், எனக்கும் வெட்கமாத்தான் இருக்கு. உன்னுடைய ஒரு மாமாதான் பணம் அனுப்ப்றாரு... இன்னொரு மாமா எதுவுமே செய்யறதில்லியே...!".
.
.
.