Showing posts with label லட்சம். Show all posts
Showing posts with label லட்சம். Show all posts

Tuesday, December 14, 2010

லட்சம் கோடி

தேசமே திரும்பிப் பார்த்த, அந்த மாபெரும் ஊழலின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

மந்திரியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த அரசு தரப்பு வக்கீல் காட்டமாய் அவரிடம் கேட்டார்.

"இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய, நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா இல்லையா..?".

வக்கீல் கேட்டதும் எல்லோரும் மந்திரியைத் திரும்பிப் பார்க்க, அவரோ வக்கீல் கேட்டதே காதில் விழாததுபோல் நீதிமன்ற ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வக்கீல் மறுபடி கேட்டார்.

"சொல்லுங்கள்... இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா, இல்லையா..?".

மந்திரி இப்போதும் எந்தச் சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஒருமுறை வக்கீல் கேட்க, மந்திரி வக்கீலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிற்பதைப் பார்த்த நீதிபதி, கோபத்துடன் சுத்தியலை டேபிள் மீது நாலு தட்டுத் தட்டி மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.

"மிஸ்டர் மந்திரி... வக்கீல் கேட்கிறர் அல்லவா..? பதில் சொல்லுங்கள் ..!".

"ஓ..!" நீதிபதி சொன்னதும் திரும்பிய மந்திரி சொன்னார்.

"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே..! இவ்வளவு நேரமும் வக்கீல் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!".
.
.
.

Tuesday, February 9, 2010

கவலைப்படாதே சகோதரா....


கம்பெனியின் முதலாளி மற்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. எல்லாப் பக்கமும் லாஸ். பணம் புரட்டவே முடியல. நெனச்சு நெனச்சு பிரஷர் அதிகமாகிட்டே போகுது. டாக்டர்கிட்ட போனா கவலைப்பட்டா இன்னும் உடம்பு மோசமாகிடும்னு சொல்றார்...".
கேட்டுக் கொண்டிருந்த அடுத்தவர் கேட்டார். "அதுக்கு என்ன பண்ணினே...?".
"புதுசா ஒருத்தன வேலைக்குச் சேர்த்திருக்கேன். எனக்கு பதிலா கவலைப்படறதுதான் அவன் வேலை. மாசம் ஒரு லட்சம் சம்பளம். அவன் வேலைக்குச் சேர்ந்து நாளையோட ஒரு மாசம் முடியுது..."
"ஏற்கனவே லாஸ்னு சொல்றே... இப்போ அவனுக்கு எப்படி ஒரு லட்சம் சம்பளம் கொடுப்ப...?" என்று அவர் நண்பர் கேட்டார்.
அதற்கு அந்த முதலாளி, "அதைப் பத்திதான் நான் கவலைப்பட வேண்டியதில்லையே...!".