Showing posts with label டாக்டர். Show all posts
Showing posts with label டாக்டர். Show all posts

Saturday, August 10, 2013

டயட்டு

கணவர் காலில் அடிபட்டு படுத்திருக்கும் சமயம்.

ரெண்டு மூணு மாசம் படுத்திருக்க வேண்டியிருப்பதால் வெய்ட் ஏறாமல் இருக்க கண்டிப்பாக டயட் மெய்ண்டெய்ன் பண்ண டாக்டர் அட்வைஸ் செய்திருந்தார்கள்.

எனவே கலோரி கம்மியான, மசாலா குறைத்து, ஆயில் ஃப்ரைகள் எல்லாம் தவிர்த்து அவருக்கு செய்து வைத்துவிட்டு, நானும் டேனியும் வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த ஞாயிறு அன்று மதியம் அப்படித்தான்.

டேனி காளான் ஃப்ரையும், காலி ஃப்ளவர் க்ரேவியும் கேட்க... அவனுக்கு அதை செய்துவிட்டு, அவருக்கு எப்பவும் போல் கோதுமை அரிசி சாதமும் வெண்டைக்காய் சாம்பாரும் பரிமாற ஆரம்பித்தேன்.

பாதி சாப்பிட்டிருப்பார்.

அதன் பிறகு நானும் டேனியும் சாப்பிட அமர்ந்தோம்.

சாப்பிடுக் கொண்டே திரும்பியவர், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு பரிதாபமாகக் கேட்டார்.

“டயட்லயே மிகக் கொடுமையான பார்ட் என்னனு தெரியுமா.?”

சாப்பிட்டுக் கொண்டே நிமிர்ந்து அவரை எதுவும் புரியாமல், “என்னது.?” என்று கேட்டபடி  நான் பார்க்க, அவர் தொடர்ந்து சொன்னார்.

“டயட்லயே கொடுமையான பகுதி... சாப்பிட என் தட்டுல என்ன இருக்குனு பாக்கறத விட, பக்கத்துல இருக்கறவங்க தட்டுல என்ன இருக்குனு பாத்துட்டு சும்மா இருக்கறதுதான்.!”.
.
.
.

Monday, March 19, 2012

டாக்டர் தண்டபாணி

டாக்டர் தண்டபாணி அந்த நகரத்திலேயே ஒரு புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்.

அவரை அன்று லையன்ஸ் க்ளாப் சார்பாக, ஒரு சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேச சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தார்கள்.

தண்டபாணியும் அந்த புத்தகம் இந்தப் புத்தகம் என்று எல்லாப் புத்தகமும் பார்த்து, அற்புதமாய் ஒரு ஆறு பக்க ஆங்கில உரையை ரெடி செய்து, அதை தன் கைப்பட எழுதி எடுத்து சென்றிருந்தார்.

கூட்டம் ஆரம்பித்து, எல்லோரும் சர்க்கரை நோய் குறித்து கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என எல்லாப் பக்கமும் அலசி ஆராய்ந்து உரையாற்றிவிட்டு அமர்ந்தார்கள்.

ஒரு அரை மணி இருக்கும்

நிகழ்ச்சி அமைப்பாளர், இப்போது டாக்டர் தண்டபாணியை பேச அழைத்தார்கள்.

தண்டபாணி புன்னகையுடன் எழுந்து சென்று, மைக்கைத் தட்டிப் பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பேசுவதற்காக உரையைப் பிரித்தார்.

கடவுளே... என்னவொரு சோதனை...?

தண்டபாணிக்கு தான் எழுதியதில் ஒரு எழுத்துகூட தனக்கே புரியவில்லை.

தொண்டையைக் கனைத்தபடி, மைக்கைத் தட்டியபடி ஒவ்வொரு பக்கமாக புரட்டுகிறார்.

ம்ஹூம்... ஒரு எழுத்து என்றால் ஒரு எழுத்து கூடப் புரியவில்லை.

வந்தவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லியபடியே, தான் எழுதியது யாருக்குப் புரியும் என்று யோசித்தவாறு பேசிய டாக்டர் தண்டபாணி... அடுத்துக் கேட்டார்.

"இந்தக் கூட்டத்துல யாராவது மெடிக்கல் ஷாப் வச்சிருக்கவங்க இருக்கீங்களா.?"
.
.
.

Tuesday, November 23, 2010

மாணவன் குறும்பு

அப்போது நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.

ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.

ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.

எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.

"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."

நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.

"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.

Tuesday, November 2, 2010

சகிக்கமுடியாத மனைவி

தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் டாக்டரைப் பார்க்க அழைத்துப் போனார் தில்லுதுர.

சற்று கவனிக்க வேண்டிய நிலையில் தில்லுதுரயின் மனைவி இருந்ததால், டாக்டர் சிலபல செக்கப்களை செய்யச் சொன்னார்.

எல்லாவற்றையும் முடித்து வந்ததும் ரிப்போர்ட்களைப் பார்த்த டாக்டர், தில்லுதுரயிடம் அவர் மனைவியின் நிலை குறித்துக் கேட்டார்.

"என்ன உங்க வொய்ஃப் இப்படி இருக்காங்க..? பார்க்கவே சகிக்கலை...!".

டாக்டர் கேட்டதும், தில்லுதுர தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னார்.

"ஆமா டாக்டர். என்னாலயும்தான் சகிச்சுக்க முடியல. என்ன பண்ணறது..?  ஆனா, நல்லா சமைப்பா டாக்டர். அதுவுமில்லாம என் குழந்தைகளுக்கும் அவள்னா உயிரு...!" என்றார்.
.
.
.

Wednesday, February 3, 2010

ஒரு டாக்டர் ஒரு மெக்கானிக்


டாக்டர் ஒருவர் தனது கார் ரிப்பேர் ஆனதால் மெக்கானிக் ஷெட்டுக்குப் போகிறார்.
காரின் எஞ்ஜினை பிரித்து பழுது நீக்கி திரும்ப மாட்டி ஓடவிட்டு பில் கொடுக்கும்போது மெக்கானிக் டாக்டரிடம் கேட்கிறான். "அய்யா, பாருங்கள்... நானும் உங்களைப் போல்தான் காரின் இதயம் போன்ற எஞ்ஜினைப் பிரித்தேன். வால்வுகளை கழற்றினேன். சரி செய்து திரும்ப மாட்டி மறுபடி ஓட விட்டேன். ஆனால், உங்களுக்கு சம்பளம் அதிகம், எனக்கு எவ்வளவு குறைச்சல் பார்த்தீர்களா..ஏன் இப்படி...?.
டாக்டர் மெல்ல அவன் காதருகில் வந்து சொன்னார்,"நீ செய்ததை எஞ்ஜின் ஓடிக்கொண்டிருக்கும் போது செய். அதிகம் கிடைக்கும்...!"