Monday, March 8, 2010

கடவுளின் விளையாட்டு



கதிர் ஒரு வைல்ட் போட்டோகிராபர்.

காட்டு மிருகங்களைப் போட்டோ எடுப்பது அவனது பொழுதுபோக்கு.

அவன் கடைசியாய் காட்டுக்கு போன போது ஒரு புலிக்குப் பக்கத்தில் போய்விட்டான்.

அது அவன் போன அந்த வேளையில் பயங்கர பசியில் உறுமிக்கொண்டிருந்தது.

கதிர் பயத்தில் மூச்சைப் பிடித்தபடி மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டான், "கடவுளே... நல்லா மாட்டிக்கிடேன்...!".

டக்கென்று வானிலிருந்து ஒரு வெளிச்சக் கீற்று அவன் மேல் அடித்தது. பிறகு மேலிருந்து கடவுளின் குரல் கேட்டது.

"இல்லை... நீ இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை. பார்... புலி அந்தப் பக்கமாய்த் திரும்பி நிற்கிறது. இப்போது நான் சொன்னதைச் செய்..!".

கதிர் மிக மெல்லிய குரலில் கேட்டான்.

"என்ன செய்யணும்..?".

அந்தக் குரல் பதில் சொன்னது.

"உன் காலடியில் இருக்கும் கல்லை எடு...!".

எடுத்தான்.

"அந்தப் புலியின் தலையைக் குறி பார்த்து அடி... யோசிக்காதே... சீக்கிரம்...!"

கதிர் யோசிக்கவே இல்லை. கடவுளின் ஆணை.

கல்லைப் புலியின் தலையில் மிகச் சரியாய் எறிந்தான்.

ஏற்கனவே கடும் பசியில் இருந்த புலி, இப்போது கடும் கோபத்துடன் கதிரைப் பார்த்துத் திரும்பி உறுமியபடி அவன் மேல் பாய்ந்தது.

மேலிருந்து மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.

"இப்பத்தான் நீ மாட்டிக்கிடே...!"
.
.
.

3 comments:

maithriim said...

குருட்டு நம்பிக்கை கூடாது, யோசிக்கனம்னு சொல்றீங்க :)
amas32

Unknown said...

:-)))

Anonymous said...

:-)

Post a Comment