Saturday, March 13, 2010

எலி சிறுசு... தொல்லை பெருசு...


வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

"வீட்ல எலி பொறி இருக்கா..?"

"இருக்கு..."

"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார்.

"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".
.
.
.

1 comment:

Post a Comment