Friday, March 19, 2010

சின்னத் துண்டு... பெரிய துண்டு....


சின்ன வயதில் எனக்கும் என் தம்பிக்கும் எல்லா விஷயங்களிலும் போட்டி இருந்துகொண்டே இருக்கும்.

வீட்டில் அன்று நான் வெஜ்.

மீன் வறுவல் எங்க அம்மாவின் வெரி ஸ்பெஷல்.

அம்மா பொரித்துப் போட்டுக் கொண்டே இருக்க, நாங்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில்தான் பிரச்னை வந்தது.

அம்மா கொண்டுவைத்த இரண்டு துண்டுகளில் ஒன்று நல்ல பெரிய நடுத்துண்டு... இன்னொன்று மிகச் சிறிய வால் துண்டு.

இதையெல்லாம் பார்த்து நான் கவனிக்கும் முன் அம்மா வைத்ததில் பெரிய நடுத் துண்டை தம்பி பாய்ந்து எடுத்துவிட்டான்.

ஏமாந்த கடுப்பில் இருந்த நான்... அவனுக்கு 'டேபிள் மேனர்ஸ்' கற்றுக் கொடுப்பதாய் நினைத்து, "தம்பி...சில நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் நீ... சாப்பிடும்போது இந்த மாதிரி நடந்து கொள்ளக் கூடாது. இதே நிலைமையில் நான் இருந்தால் பெரிய துண்டை எடுத்திருக்க மாட்டேன்... சின்னத் துண்டைத்தான் எடுத்திருப்பேன்..." என்றேன்.

தம்பியோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், "அதுதான் அங்கே இருக்கே...!" என்றான்.
.
.
.

No comments:

Post a Comment