Saturday, March 27, 2010

காக்கும் கடவுள்


ரமேஷ் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது திடீரென அந்தக் குரல் கேட்டது.

"நகராதே...!" .

ரமேஷ் அப்படியே நின்றுவிட்டான்.

அந்த விநாடி, அவன் நிற்கும் இடத்திற்குச் சற்று முன்னால் கட்டிகொண்டிருந்த கட்டிடத்திலிருந்து ஒரு செங்கல் விழுந்து உடைந்தது.

அந்தக் குரல் மட்டும் கேட்காவிட்டால் அவன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான்.

நன்றியை மனதுக்குள் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்போது அந்தச் சாலையின் திருப்பத்தில் மறுபடி அந்தக் குரல் கேட்டது.

"நகராதே...!" .

ரமேஷ் மறுபடி அப்படியே நின்றுவிட்டான்.

அந்த விநாடி சாலையின் திருப்பத்தில் ஒரு கார் அவன் காலை உரசிக் கொண்டு போனது.

நிற்காமல் இருந்தால் அது இந்நேரம் அவனை அடித்துத் தூக்கியிருக்கும்.

ஆச்சர்யத்தில் அவன் கேட்டான்.

"கடவுளே... யார் நீ..?".

அந்தக் குரல் பதில் சொன்னது.

"நான் தான் உனது காக்கும் கடவுள். உனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் நான் குரல் கொடுப்பேன். அதை நீ கேட்டால் தப்பித்துக் கொள்ளலாம்....!".

நீண்ட பெருமூச்சுக்குப் பின்னர் ரமேஷ் கேட்டான். "எல்லாம் சரி... என் கல்யாணத்தப்ப நீ எங்க போயிருந்த...?"
.
.
.

1 comment:

Anonymous said...

ஆழ்ந்த கருத்து!

Post a Comment