Monday, March 1, 2010

ராஜ வாழ்க்கை


ஜெயிலுக்குள் நுழைந்த கபாலி அறையில் ஏற்கனவே இருந்தவனைப் பார்த்துத் திகைத்து நின்றான்.

ரொம்ப காலம் ஜெயிலில் இருந்திருப்பான் போல.

கபாலி கேட்டான்.

"இன்னா தல... இன்னா செஞ்சுட்டு உள்ளுக்குள்ள வந்த..?"

அவன் பதில் சொன்னான்.

"என்னைப் பாத்தியா... எவ்வளவு மோசமா இருக்கேன். ஒரு காலத்தில நான் ராஜா மாதிரி வாழ்ந்தேன்னா நம்புவியா நீ...?"

கபாலி ஆச்சர்யப்பட்டுப் போய்க் கேட்டான், "எப்புடி... எப்புடிஎப்புடி..?"

"காலை ஜப்பான்ல காஃபி.. மாலை நியூயார்க்ல காபரே... இரவில் தாய்லாந்தில் ஜாலி... சொந்தமா கப்பல்... அழகான பொண்ணுக... அப்படி வாழ்ந்தவன் நான்...!"

கபாலிக்கு ஆச்சர்யம் இன்னும் அதிகமாகியது.

"அப்புறம்... அப்புறம் என்ன ஆச்சு...?"

அதற்கு அவன் சொன்னான்.

"கடைசில... அந்த ராஜாப்பய தன்னோட கிரெடிட் கார்ட் மிஸ்ஸாயிடுச்சுன்னு போலிஸ்ல புகார் கொடுத்திட்டான்...!"


No comments:

Post a Comment