Wednesday, March 31, 2010

கடின உழைப்புக்கு


தின டமாரம் பத்திரிக்கை நிருபர் அந்தப் பெரிய வயதான பணக்காரரைப் பேட்டி எடுக்க வந்திருந்தார்.

"ஆச்சர்யம்... எப்படி இவ்வளவு பெரிய பணக்காரராய் மாற முடிந்தது உங்களால்...?"

அந்த பணக்காரர் மெல்லிய குரலில் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"அது என் திருமணம் முடிந்த நேரம்.
எங்களுடையது காதல் திருமணம்.
அதனால் இரண்டு வீட்டிலும் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது.
எனக்கோ வேலை வேறு இல்லை.
என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
என் மனைவிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள்.
அவளிடம் ஒரு நூறு ரூபாய் இருந்தது.
அதை வைத்து ஒரு ஜோடி ஷூ வாங்கினேன்.
கூடவே ஒரு பாலிஷும் பிரஷும்.
காலையில் இருந்து சாயங்காலம் வரையில் அந்த ஜோடி ஷூவை பாலிஷ் செய்து கொண்டே இருந்தேன்.
சாயங்காலம் அதை இருநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டேன்.
மறுநாள் அதை வைத்து ரெண்டு ஜோடி ஷூ வாங்கினேன்.
அதையும் அதேபோல் மாலை வரை பாலிஷ் செய்தேன்.
அன்று மாலை அந்த இரண்டு ஜோடி ஷூவையும் இருநூறு இருநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டேன்.
மறுநாள் அதை வைத்து நான்கு ஜோடி ஷூ வாங்கினேன்.
மறுபடி அதை விற்றேன்.
இப்படியே கிட்டத்தட்ட பத்து நாளில் இருபத்தைந்து ஆயிரம் வரை சம்பாதித்து விட்டேன்...".

அந்த நிருபர் மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான்...

"அப்புறம்..?".

அவர் தொடர்ந்தார்.

"அப்புறம்... ஒரு நாள் மாலை என் மனைவியின் தந்தை இரண்டு கோடி சொத்தை வைத்துவிட்டு இறந்துவிட்டார். அது எனக்கு வந்து சேர்ந்தது. நான் பணக்காரனாகிவிட்டேன்...!".
.
.
.

No comments:

Post a Comment