Saturday, March 20, 2010

கார்த்தசாரதி


தினேஷ் சாப்ட்வேரில் பெரிய ஆள்.

நல்ல சம்பளம்.

எனவே, லோன் மற்றும் இன்னபிற சங்கதிகளுக்காக அப்பாவின் காரை மாற்றி ஒரு புதிய, பெரிய கார் வாங்கி அதில் ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் போவதாய் முடிவும் ஆகியாயிற்று.

அன்று அதிகாலையிலேயே எல்லோரும் காரில் அவரவருக்கு பிடித்த சீட்டில் உட்கார்ந்து கொள்ள அப்பா மட்டும் தினேஷின் ட்ரைவர் சீட்டுக்குப் பின் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்.

தினேஷ் அம்மாவிடம் சொன்னான்.

"அம்மா பார்த்தியா... சீன் மாறிப்போச்சு. அப்பா, இப்ப பின் சீட்டில் உட்கார்ந்துகிட்டு எனக்கு எப்படி டிரைவ் செய்யணும்னு சொல்லிக் கொடுக்கப்போறாரு... இல்லியா?"

"இல்லை...!" அப்பா தலையாட்டிவிட்டு சொன்னார்.

"இத்தனை நாள் நீ எப்படிப் செய்தாயோ... அதே மாதிரி பின் சீட்டில் உட்கார்ந்து ட்ரைவர் சீட்டை உதைத்துக் கொண்டே வரப்போறேன்...!" என்றார்.
.
.
.

No comments:

Post a Comment