Tuesday, March 2, 2010

நரமாமிசம் சாப்பிடுபவரின் ஞாயிறு மெனு



அவர்கள் அப்பா, அம்மா, பையன் என மூவர்.


நரமாமிசம் சாப்பிடுபவர்கள்.


ஞாயிற்றுக்கிழமை நான்வெஜ் சாப்பிடுவது அவர்கள் மரபு.


எனவே, சனிக்கிழமை மாலை இரை தேடி அப்பா, பையன் ரெண்டு பேரும் வேட்டைக்குக் கிளம்பினார்கள்.


பொதுவாய் வேலை விட்டு குறுக்கு வழியாய் அவசரமாய் போக இந்த காட்டுப் பக்கம் வருபவர்கள் இவர்களிடம் மாட்டுவார்கள்.

இருவரும் மறைந்து ரொம்ப நேரம் காத்திருந்த பின் மிக ஒல்லியாய் ஒருவன் காட்டைக் கிராஸ் செய்தான்.

பையன் கேட்டான்.

"என்னப்பா... இவன் ஓகேவா..?"

அப்பா சொன்னார்.

"இவன் வேண்டாம்... நம்ம மூணு பேருக்கு இவன் பத்தமாட்டான். இரு வெயிட் பண்ணலாம்..."

கொஞ்ச நேரம் கழித்து ரொம்ம்ப குண்டாய் இன்னொருத்தன் கிராஸ் செய்ய பையன், "என்னப்பா... இவனப் போட்றலாமா..?" என்றான்.

"இவன் வேண்டாம்... இவனுக்கு கொழுப்பு ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம உடம்புக்கு ஆகாது. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..."

இன்னும் சற்று கழித்து, மிக அழகாய்ச் சிக்கென்று ஒரு பெண்ணைப் பார்த்தார்கள்.

பையன், " என்னப்பா... இந்தப் பொண்ணுகிட்ட குறையொன்றுமில்லை... இவளத் தூக்கிடலாமா...?"

அப்பா சற்றே யோசித்தவாறு கூறினார்.

"இவளும் வேண்டாம்... ஆனா, இவளத் தூக்கிட்டு... நாளை லஞ்சுக்கு உங்க அம்மாவப் போட்றலாம்...!"

No comments:

Post a Comment