Wednesday, March 24, 2010

அகம் ப்ரம்ஹாஸ்மி....


நாயின் நினைப்பு:

இந்த மனிதர்கள் எனக்கு உணவிடுகிறார்கள்.
அன்பு செலுத்துகிறார்கள்.
நான் வாழ அழகிய சிறிய வீட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.
என் மீது மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.
எனக்கென்னவோ.........

இவர்கள் தான் கடவுள் என்று தோன்றுகிறது.


பூனையின் நினைப்பு:
இந்த மனிதர்கள் எனக்கு உணவிடுகிறார்கள்.
அன்பு செலுத்துகிறார்கள்.
நான் வாழ அழகிய சிறிய வீட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.
என் மீது மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.
எனக்கென்னவோ..........

நான் தான் கடவுள் என்று தோன்றுகிறது.
.
.
.

No comments:

Post a Comment