Monday, March 1, 2010

பேய் பங்களா...


முத்து அந்தப் பெரிய பங்களாவை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினான்.

உண்மையில் அது பேய் பங்களா என்பதாலேயே அவ்வளவு குறைந்த விலைக்கு வந்தது.

அவன் முதன் முதலாய் அந்தப் பங்களாவினுள் நுழைந்ததோ இரவு பதினோரு மணி.

புது பங்களா வாங்கியதற்கு கொடுத்த பார்ட்டியில் குடித்த பியர் வேறு வயிற்றில் உருண்டு கொண்டிருந்தது.

அப்போதுதான் அந்தப் பேய் அவன் எதிரே வந்து நின்றது.

அது சந்திரமுகி போல் பயங்கரமாய் சிரித்து, "டாய்... நான் யார் தெரியுமா? நான் தான் இந்த பங்களாவில் முன்னூறு வருடமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..!"

முத்து மிகுந்த அசிரத்தையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டான்.

"அப்படின்னா... டாய்லெட் எங்க இருக்கு...? அத முதல்ல சொல்லு..!"


1 comment:

Post a Comment