Monday, October 25, 2010

சாவே போ

முத்துசாமி ஒரு தீவிர கடவுள் பக்தன்.

எல்லாம் கடவுளால் மட்டுமே நடக்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவான் முத்துசாமி.

சின்ன வயதில் ஊருக்கு வந்த ஒரு சாமியாரை சந்தித்த பின்னால்தான், அவனுக்கு அவன் வாழ்வில் மாற்றங்கள் வர ஆரம்பித்தது.

"சிவனைக் கும்பிடு.. சிவனைக் கும்பிடு.. வாழ்க்கை மேல போகும்..!" என்று போகிற போக்கில் அந்த சாமியார் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

முத்துசாமி அதை நம்பினான் என்று சொல்லக்கூடாது.

அப்படியே பைத்தியமாய் சிவனைக் கும்பிட ஆரம்பித்தான்.

வாழ்க்கை மாற ஆரம்பித்தது.

பூஜ்யமாய் இருந்த அவன் வாழ்வில், இன்று இந்தச் சின்ன வயதிலேயே கோடிக் கோடியான பணத்தில் புரள்வதற்குக் காரணம் சிவன் தான் என்பது அவனுக்குத் தெரியும்.

சம்பாதிப்பதில் பாதியை அவன் சிவாலயங்களுக்கும் சிவனடியார்களுக்குமே செலவழித்து வந்தான் அவன்.

பணம் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், அவனுடைய பக்தியும் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தது.

சாமியார், சிவனடியார் என்று சுற்றிக் கொண்டிருந்தவன்.. இப்போது, சித்தர்கள் என சுற்ற ஆரம்பித்தான்.

திருவண்ணாமலை, கொல்லிமலை, சதுரகிரி என அவன் சித்தர்களை பல இடங்களில், மலைகளில், குகைகளில், இன்னும் பல ரகசிய இடங்களில் அவன் சித்தர்களை சந்தித்து பல நம்பமுடியாத சக்திகளைப் பெற்றுவிட்டான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

கடைசியில் முத்துசாமி வந்து நின்ற இடம் சாவே இல்லாத வாழ்க்கை... மரணமற்ற பெரு வாழ்வு.

அவன், தான் கற்றுக் கொண்ட சித்துக்களை வைத்து ஒரு பெருந்தவம் செய்ய ஆரம்பித்தான்.

தவம்னா இப்படி அப்படி சாதாரண தவம் அல்ல... மிரண்டு போய் அந்த சிவனே முத்துசாமியின் முன்னால் வந்து நிற்கும் அளவுக்கு கடுந்தவம்.

முன்னால் வந்து நின்ற சிவன் சொன்னார்.

"பக்தா... உன் கடுந்தவம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்ன வரம் வேண்டும் உனக்கு..? கேள், தருகிறேன்..!".

முத்துசாமி கேட்டான்.

"கடவுளே.. நான் கேட்பது ஒரே ஒரு வரம்தான். அதற்காகத்தான் இவ்வளவு நாள் தவம் இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கையில் சாவே வரக்கூடாது..! அதுமட்டும் போதும்..".

'சாவே வராத வாழ்வு மனிதனுக்கு கொடுக்கக் கூடதே, அது இயற்கைக்கு எதிராயிற்றே..' என்று யோசித்த சிவன், முத்துசாமியின் கடும் தவத்தையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"அப்படியே வரம் தந்தேன் முத்துசாமி. இனி உனக்கு சாவே வராது...!".

வரம் தந்த சிவன் மறைந்ததும், மகிழ்ச்சியுடன் தூங்கப் போனான் முத்துசாமி.

மறுநாள், காலையில் கண் விழித்து, வாக்கிங் முடித்து பேப்பர் எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கம்பெனி மேனேஜருக்குப் போன் செய்தான்.

"ஹலோ... நான் முத்துமி பேசறேன்..!" என்றவன் ஒருகணம் யோசித்தான்.

'என்ன இது.. தன் பெயரையே சொல்ல வரவில்லையே..!'

முத்துசாமி என்று தன் பெயரைப் பலதடவை சொல்லிப் பார்த்தான்... முத்துமி, முத்துமி என்றே வந்தது.

முத்துசாமியில் 'சா' வரவில்லை.

முத்துசாமியில் மட்டுமல்ல...எந்த வார்த்தையிலும் அவனுக்கு 'சா' வரவில்லை.

சாகும் வரை முத்துசாமிக்கு 'சா'வே வரவில்லை.
.
.
.

8 comments:

rameshbabublogger said...

சில மாதங்களுக்கு முன்னாடி எங்களுக்கு இதெல்லாம் குறுந்தகவல்லையே வந்திருச்சே.... அதையும் கதையா சொல்லியிருக்கிறது பெரிய விசயம். சூப்பர்

Anonymous said...

good imagination

Unknown said...

he he :d

Ungalranga said...

avvvvvvvvvvvvvvvv!!!

ஈஸ்வரா..!! கொன்னுட்ட!!

RAVI said...

ஊப்பரு.

எஸ்.கே said...

nice!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

nallayirukku...

Rajasubramanian S said...

அருமை.இதை எதிர்பார்க்கவில்லை.

Post a Comment