Friday, October 1, 2010

அப்பிரதட்சணம்

டேனி அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது..

வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடப் போய் இருக்கிறான்.

சாமி கும்பிட்டு விட்டு, அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான்.

கொஞ்ச நேரம் கழித்து, அவனைப் பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி.

வலமிருந்து இடமாக பிரதட்சணம் சுத்தாமல். பையன் அப்பிரதட்சணமாக இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.

இவனது கோக்குமாக்கை அந்த அர்ச்சகர், அவனை தடுத்து நிறுத்தி.. "ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க...?"ன்னு கேட்டிருக்கார்.

அவனோ, ”என்னோட அம்மா அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க... நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதலா சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்...”னு சொல்லி இருக்கான்.
.
.
.
நன்றி:  யெஸ்.பாலபாரதி

No comments:

Post a Comment