Tuesday, October 5, 2010

மஞ்சுஸ்ரீ

மஞ்சுஸ்ரீ என்னும் சீடருக்கு ஞானம் வந்துவிட்டதை உணர்ந்த புத்தர் அவரை அழைத்தார்.

"மஞ்சு... நீ உலக மக்களுக்கு ஞானத்தை வழங்கும் நேரம் வந்துவிட்டது. விழிப்புணர்வு பெற்றுவிட்டாய்! நீ போகலாம்..." என்று வாழ்த்தி அனுப்பினார்.

குருவின் ஆணையை மீற முடியாத மஞ்சு, புத்தரைப் பிரிய மனமின்றி அழுது புரண்டார்.

அதைப் பார்த்த புத்தர்,"ஏன் அழுகிறாய்? உனக்கு ஞானம் வந்த பிறகும் ஏன் இந்த மயக்கம். இன்னும் என்னிடம் இருந்து உனக்கு என்ன நடக்கப் போகிறது..?" என்று கேட்டார்.

"ஐயனே! இதைவிட பாக்கியம் வேறு என்ன இருக்கப் போகிறது. உங்களை அன்றாடம் பார்த்துப் பரவசம் கொள்வது ஒன்றே எனக்குப் போதுமானது" என்று வருந்தினார் மஞ்சு.

புத்தர் மஞ்சுவை மிகப் பரிவாய் அருகில் அழைத்தார்.

"நீ எங்கிருந்தாலும் என் அன்பும் ஆசியும் உண்டு.. சென்று வா...!" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

இதைக் கண்ட மற்ற சீடர்கள் புத்தரிடம் கேட்டார்கள்.

"ஞானம் கைவரப் பெற்ற மஞ்சு ஏன் இப்படிச் செய்கிறார்?".

அதற்கு புத்தர் சொன்னார்.

"அடக்கம் உள்ள இடத்தில் அகந்தை என்றும் தலைகாட்டுவதில்லை...!".
.
.
.

1 comment:

VELU.G said...

நல்லாயிருக்குங்க

Post a Comment