Monday, October 4, 2010

தலையில் நின்ற செருப்பு

செனகா என்பவர் பித்தாகரசின் சீடர்.

அவர் தனது செருப்புகள் தேய்ந்து போனதால், செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புக்காக அளவு கொடுத்திருந்தார்.

செனகா அதைப் பெற்றுக்கொள்ளச் சென்ற அன்று, கையில் பணம் இல்லாததால்... அடுத்த வாரம் கூலிப்பணம் தருவதாகச் சொல்லி, கடனாக அந்த ஜோடிச் செருப்பைப் பெற்றுக் சென்றார்.

ஒரு வாரம் கழிந்தது.

செனகா அந்தப் பாக்கிப் பணத்தைக் கொடுக்கச் சென்றபோது, அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இறந்து போயிருந்தார்.

தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே சப்தமில்லாமல் திரும்பிவிட்டார் செனகா.

அடுத்த ஒரு வாரமும் நத்தையாய் நகர்ந்தது.

ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வில், உள்ளுக்குள்ளேயே குறுகிக் கொண்டிருந்தார் செனகா.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்...

ஒருநாள் பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசிவிட்டுக் கத்தினார்.

"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...!".
.
.
.

1 comment:

Post a Comment