Monday, July 5, 2010

கடவுளின் குழந்தை

டேனியை சமீபத்தில் தான் அந்த நர்சரிப் பள்ளியில் சேர்த்திருந்தேன்.

பள்ளியில் ஒரு புது மாதிரியாய் மேக்னட்டில் ஆங்கில எழுத்துகளைப் ப்ரிண்ட் பண்ணி, டேபிள் போர்டுகளில் ஒட்டவைத்து விளையாடியபடியே வார்த்தைகளை கற்றுக்கொள்ள சொல்லிக் கொடுக்கிறார்கள்.

டேனியும் இப்போது வித விதமாய் வார்த்தைகளை வடிவமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் சி ஏ டி...கேட், டி ஓ ஜி...டாக், டி ஏ டி..டேட்,எம் ஓ எம்..மாம் - போன்ற ஆங்கில வார்த்தைகளை ஃபிரிட்ஜ்-ல் ஒட்டி விளையாடுவான்.

என்னிடமும் தவறாமல், "பாத்தியா...நான் என்ன ஒட்டிருக்கேன்னு...?" என்று மழலை மாறாமல் கேட்பான்.

அன்றும் அப்படித்தான்...

அவசரமாய் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நேரம்.

நான் வேகவேகமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அவன் உற்சாகமாய் அந்த மேக்னட் எழுத்துக்களை எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

நான் பார்த்ததும்,"அம்மா பாத்தியா...நான் என்ன ஒட்டிருக்கேன்னு...?"

நான் பார்த்தபோது, அவன் கையில் 'ஜி ஓ டி.. காட்' என வைத்திருந்தான்.

பரவாயில்லையே... இந்த நர்சரியில் நல்ல நல்ல வார்த்தைகளைச் சொல்லித் தருகிறார்களே என்று எண்ணியபடியே கிளம்பும் அவசரத்தில் அவனிடம், " சூப்பர் டேனி... ஓடிப்போய் ஃபிரிட்ஜ்-ல ஒட்டிவச்சுட்டு வா... சாயங்காலம் அப்பா வந்தா பாக்கட்டும்....!" என்றேன்.

டேனி உள்ளே போய் சற்று நேரத்தில் குரல் மட்டும் கேட்டது.

"அம்மா... இதுக்கப்புறம் 'ஜில்லா'க்கு என்ன ஸ்பெல்லிங் வரும்...?".
.
.
.

4 comments:

Post a Comment